என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி: 20 ஓவரில் ஆஸ்திரேலியா 105/2

- டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
- ஆஸ்திரேலிய அணி 4 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. ஆஸ்திரேலிய அணியில் கூப்பர் கோனோலி, தன்வீர் சங்கா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், கூப்பர் கோனோலி களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 4 ரன்னாக இருக்கும்போது ஷமி பந்து வீச்சில் கோனோலி டக் அவுட்டானார்.
அடுத்து டிராவிஸ் ஹெட்டுடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். முதலில் நிதானமாக ஆடிய டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடினார்.
அவர் 32 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 39 ரன்கள் எடுத்து வருண் சக்கரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து லபுசேன் களமிறங்கினார். ஸ்மித்-லபுசேன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தது.
இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்துள்ளது.