என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![அனைத்து அணிகளையும் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வெல்வோம்- வங்கதேச கேப்டன் நம்பிக்கை அனைத்து அணிகளையும் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வெல்வோம்- வங்கதேச கேப்டன் நம்பிக்கை](https://media.maalaimalar.com/h-upload/2025/02/13/9268514-sd.webp)
அனைத்து அணிகளையும் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வெல்வோம்- வங்கதேச கேப்டன் நம்பிக்கை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நாங்கள் சாம்பியனாக சாதனைப் படைக்க சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு செல்கிறோம்.
- முன்பை விட தற்போது எங்களிடம் வலுவான வேகப்பந்து வீச்சுத்துறை இருக்கிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரும் பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தானில் கோலாகலமாக துவங்குகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் எதிர்கொள்கிறது. இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வரும் பிப்ரவரி 20-ம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இந்தியா உட்பட அனைத்து அணிகளையும் தோற்கடித்து நாங்கள் கோப்பையை தட்டி தூக்குவோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் சாம்பியனாக சாதனைப் படைக்க சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு செல்கிறோம். இந்தத் தொடரில் விளையாடும் அனைத்து 8 அணிகளுமே சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு தகுதியானவர்கள். அவர்கள் அனைவருமே தரமான அணிகள். எங்கள் அணியில் வெற்றிப் பெறுவதற்கான திறன் இருப்பதாக நான் நம்புகிறேன்.
எனவே யாரும் எக்ஸ்ட்ரா அழுத்தத்தை உணர வேண்டிய அவசியமில்லை. அனைத்து அணிகளும் தங்களுடைய திறமைகளை நம்பிச் சாம்பியனாக வர விரும்புவார்கள். அந்த வகையில் எங்களுடைய தலையெழுத்தில் அல்லா என்ன எழுதியிருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது.
எங்கள் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 15 வீரர்களின் திறன் மீது எனக்கு மகிழ்ச்சி. எங்கள் அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களும் தனியாளாகப் போட்டியை வென்றுக் கொடுக்கும் திறமையைக் கொண்டவர்கள்.
முன்பை விட தற்போது எங்களிடம் வலுவான வேகப்பந்து வீச்சுத்துறை இருக்கிறது. அதே போல விரல் ஸ்பின்னர்களும் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக எங்களிடம் சமநிலையைப் பொருந்திய அணி இருக்கிறது. எனவே எந்த அணியையும் எந்த நேரத்திலும் எங்களால் வீழ்த்த முடியும்.
என்று கூறினார்.