search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சாம்பியன்ஸ் டிராபி: இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மோதல்
    X

    சாம்பியன்ஸ் டிராபி: இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மோதல்

    • முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.
    • இரண்டாவது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை வென்றது நியூசிலாந்து.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதிபெற்றன.

    துபாயில் நேற்று முன்தினம் நடந்த முதல் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

    பாகிஸ்தானின் லாகூரில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதியில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் சதத்தால் 362 ரன்களைக் குவித்தது.

    தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் டேவிட் மில்லர் போராடி சதமடித்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 312 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், துபாயில் வரும் 9-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    Next Story
    ×