search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சாம்பியன்ஸ் டிராபி வென்றது இந்தியா: நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீரர்கள்
    X

    சாம்பியன்ஸ் டிராபி வென்றது இந்தியா: நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீரர்கள்

    • சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியது.
    • கோப்பை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து 251 ரன்களை எடுத்தது.

    தொடர்ந்து ஆடிய இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன்ஸ் டிராபியை மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியது.

    சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், வெற்றியை உறுதி செய்ததும் ஹர்ஷித் ராணா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட இந்திய வீரர்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இதேபோல் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றதும் வீரர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். கோப்பையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    Next Story
    ×