search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி: இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது
    X

    3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி: இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது

    • இங்கிலாந்தின் தொடக்க ஜோடி 6.2 ஓவரில் 60 ரன்கள் குவித்தது.
    • அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க 214 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 356 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தாலும் சுப்மன் கில் 112 ரன்கள், விராட் கோலி 52 ரன்கள், ஷ்ரேயாஸ் அய்யர் 78 ரன்கள், கே.எல். ராகுல் 40 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அடில் ரஷித் 10 ஓவர்கள வீசி 64 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    பின்னர 357 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. பில் சால்ட், பென் டக்கெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினர்.

    இதனால் ஜெட் வேகத்தில் ரன் உயர்ந்தது. 5.2 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. இந்த ஜோடியை அர்ஷ்தீப் சிங் பிரித்தார். 7-வது ஓவரின் 2-வது பந்தில் டக்கெட் 22 பந்தில் 34 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்தின் ஸ்கோர் 6.2 ஓவரில் 60 ரன்னாக இருந்தது.

    அடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய பில் சால்ட் 21 பந்தில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவரது விக்கெட்டையும் அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.

    பின்னர் இங்கிலாந்து வீரர்களால் நிலைத்துநின்று விளையாட முடியவில்லை. டாம் பாண்டன் 41 பந்தில் 38 ரன்கள் எடுத்து குல்தீப் பந்தில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 24 ரன்கள் எடுத்த நிலையில் அக்சார் படேல் பந்தில் வெளியேறினார்.

    ஹாரி ப்ரூக் (19), பட்லர் (6) ஆகியோரை ஹர்ஷித் ராணா வெளியேற்றினார். இறுதியாக இங்கிலாந்து 34.2 ஓவரில் 214 எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.

    இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஹர்திக் பாண்ட்யா, அக்சார் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×