search icon
என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.

    • எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
    • டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னேறியது.

    இந்நிலையில், இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. விராட் கோலி, டூ பிளசிஸ் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    டூ பிளசிஸ் 17 ரன்னில் அவுட்டானார். விராட் கோலி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.

    ஐ.பி.எல். தொடரில் 8 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் விராட் கோலி என்ற சாதனை படைத்தார். இவருக்கு அடுத்த இடத்தில் ஷிகர் தவான் 6,769 ரன்கள் எடுத்துள்ளார்.

    இதற்கிடையே, விராட் கோலி 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    • குவாலிபையர் 2 போட்டி மே 24 ஆம் தேதி நடைபெறுகிறது.
    • இறுதிப்போட்டி மே 26 ஆம் தேதி நடைபெறுகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னேறியது. அந்த வகையில், இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி மே 24 ஆம் தேதி நடைபெறும் குவாலிபையர் 2 சுற்று போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்கொள்ள வேண்டும்.

    குவாலிபையர் 2 சுற்றில் வெற்றி பெறும் அணி மே 26 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

    • ராஜஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை பெங்களூரு அணி ரத்து செய்தது.
    • விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடரில் எலிமினேட்டர் சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதற்கான பயிற்சி ஆட்டம் அகமதாபாத் குஜராத் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.

    இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை குஜராத் போலீசார் கைதுசெய்தனர். அவர்களது இடங்களை சோதனை செய்தபின் ஆயுதங்கள், சந்தேகத்திற்கு இடமான வீடியோக்கள், குறுஞ்செய்திகளை போலீசார் மீட்டதாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆர்சிபி அணியின் பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. மேலும் விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

    இந்நிலையில், ராஜஸ்தான் - பெங்களூரு போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏதும் இல்லை என குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

    மேலும், "குஜராத் கல்லூரி மைதானத்தில் மதியம் 2-5 மணிவரை பயிற்சி செய்ய பெங்களூரு அணி திட்டமிட்டிருந்தது. ஆனால் கோடைக்காலம் என்பதால் மாலை 6.30 மணிவரை வெளிச்சம் இருக்கும் என்பதால் பயிற்சியை 3-6 மணிக்கு மேற்கொள்ளலாம் என்று அணி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் வெப்ப அலை காரணமாகவே பெங்களூரு அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது

    அதே சமயம் குஜராத் கல்லூரி மைதானத்தில் மதியம் 3.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ராஜஸ்தான் அணி பயிற்சியில் ஈடுபட்டது" என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

    • ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், கோப்பை தங்களுடைய என்று அவர்கள் நம்புவார்கள்.
    • யாரும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது.

    ஐபிஎல் 2024 சீசன் பிளேஆஃப் சுற்றுகள் நேற்று தொடங்கியது. குவாலிபையர்-1ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    பிளேஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி முன்னேறுமா? என்ற கேள்வி இருந்த நிலையில், தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஆர்சிபி தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், கொல்கத்தா அணி இறுதிப் போட்டியில் ஆர்சிபியை எதிர்கொள்வதை விரும்பாது என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வருண் ஆரோன் கூறியதாவது:-

    இந்தமுறை சாம்பியன் படத்தை வெல்ல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், போட்டி நடைபெறும் அன்றைய தினத்தில்தான் ரிசல்ட் முடிவு செய்யப்படும். உங்களுடைய அணி சிறந்ததா? அல்லது மோசமானதா? என்பது விசயம் அல்ல. ஆர்சிபி அணி இறுதிப் போட்டிக்கு வர வேண்டும் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விரும்பும் என நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அவர்களின் உத்வேகம். ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், கோப்பை தங்களுடைய என்று அவர்கள் நம்புவார்கள். யாரும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது.

    இன்னும் முக்கியமான போட்டிகள் உள்ளன. இறுதிப் போட்டிக்கான நெருக்கடி முற்றிலும் மாறுபட்டது. இறுதிப் போட்டிக்கு முன்னேறுவரை கொல்கத்தா விரும்பாது. ஏனென்றால், ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற விருபத்துடன் விளையாடி வருகின்றனர்.

    இவ்வாறு வருண் ஆரோன் தெரிவித்துள்ளார்.

    • 14 இன்னிங்சில் 308 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
    • இரண்டு அரைசதங்களுடன் 25.66 மட்டுமே சராசரி வைத்துள்ளார்.

    ஐபிஎல் 2024 சீசனின் பிளேஆஃப் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின. நேற்று நடைபெற்ற குவாலிபையர்-1ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இன்று எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் தோல்வியடையும் அணி வெளியேறும். இதனால் இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் விறுவிறுப்பில் பஞ்சம் இருக்காது.

    ஆர்சிபி அணி முதல் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் தொடர்ந்து ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஆர்சிபி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 14 போட்டிகளில் விளையாடி 708 ரன்கள் அடித்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக கெய்க்வாட் 583 ரன்கள் எடுத்துள்ளார்.

    விராட் கோலி லீக் ஆட்டங்களில் அபாரமாக விளையாடினாலும் பிளேஆஃப் சுற்று போட்டிகளில் அவரது ஸ்டிரைக் ரேட் மற்றும் ரன்விகிதம் அதிகமாக இருந்ததில்லை.

    இதுவரை 14 பிளேஆஃப் சுற்று போட்டிகளில் விளையாடி 308 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் இரண்டு அரைசதங்கள் அடங்கும். சராசரி 25.66 ஆகும். ஸ்டிரைக் ரேட் 120.31 ஆகும்.

    தொடர்ச்சியான ஆறு போட்டிகளில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் ஆர்சிபி எலிமினேட்டர் சுற்றில் களம் இறங்குகிறது. இதனால் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இதனை மனதில் வைத்து இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி சிறப்பாக விளையாடி முந்தைய சறுக்கலில் இருந்து மீண்டு வந்து அணிக்கு தூணாக நிற்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். விராட் கோலியும் அதே நிலையுடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

    • பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இதனால் பயிற்சி ஆட்டத்தை ஆர்சிபி ரத்து செய்தது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடரில் எலிமினேட்டர் சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதற்கான பயிற்சி ஆட்டம் அகமதாபாத் குஜராத் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.

    ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை பெங்களூரு அணி நேற்று ரத்து செய்தது. மேலும், செய்தியாளர் சந்திப்பையும் ரத்து செய்துள்ளது.

    கடந்த திங்கட்கிழமை இரவு அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை குஜராத் போலீசார் கைதுசெய்தனர். அவர்களது இடங்களை சோதனை செய்தபின் ஆயுதங்கள், சந்தேகத்திற்கு இடமான வீடியோக்கள், குறுஞ்செய்திகளை போலீசார் மீட்டதாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து, ஆர்சிபி அணியின் பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

    விராட் கோலி அகமதாபாத்திற்கு வந்த பிறகு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதைப் பற்றி அறிந்தார். அவர் ஒரு தேசிய பொக்கிஷம், அவருடைய பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை என போலீசார் தெரிவித்தனர். அகமதாபாத்தில் உள்ள இரு அணி விடுதிகளுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

    • பெங்களூரு அணி கடைசி 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எழுச்சி கண்டது.
    • முதல் 9 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்று கம்பீரமாக காட்சியளித்தது ராஜஸ்தான் அணி.

    அகமதாபாத்:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.

    அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில், புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ், 4-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சந்திக்கிறது.

    இதில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஐதராபாத் அணியுடன் மோத வேண்டும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக முன்னேறும்.

    ஒருபக்கம் முதல் 9 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்று கம்பீரமாக காட்சியளித்த அந்த ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணி தனது கடைசி 5 லீக் ஆட்டங்களில் வரிசையாக 4-ல் தோற்று புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்தையே பிடித்தது.

    மறுபக்கம் இதுவரை கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி தனது முதல் 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அந்த அணியின் கதை முடிந்தது என்று எல்லோரும் நினைத்த போது, அந்த அணி கடைசி 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எழுச்சி கண்டது. அதுவும் முந்தைய திரில்லிங்கான ஆட்டத்தில் 27 ரன் வித்தியாசத்தில் சென்னையை வெளியேற்றி சிலிர்க்க வைத்தது.

    பெங்களூரு அணியின் இந்த எழுச்சியை முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் புகழ்ந்து பேசியுள்ளார்.

    "இந்த ஐபிஎல் தொடரில் தோல்வியிலிருந்து மீண்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்று பெங்களூரு அணி நம்பியதே அற்புதமான விஷயம். தொடர் தோல்வியினால் அணியின் வீரர்கள் நம்பிக்கையை இழந்திருக்கலாம். ஆனால் அணியில் உள்ள மூத்த வீரர்களான விராட் கோலி, டு பிளசிஸ் ஆகியோர் மற்ற அணி வீரர்களை ஊக்கப்படுத்தி சிறப்பாக அணியை வழிநடத்தியுள்ளனர். அதுவும் இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மற்ற வீரர்களை ஊக்கப்படுத்தியுள்ளனர்" என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    மேலும், "தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ராஜஸ்தான் அணி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் பெங்களூரு அணியை வெல்ல முடியும். இல்லையென்றால் குவாலிபையர் 1-ல் ஹைதராபாத் அணியை கொல்கத்தா அணி எளிதாக வென்றது போல ராஜஸ்தான் அணியை பெங்களூரு எளிதாக வென்று விடும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் தொடர்பாக சுனில் கவாஸ்கர் கிண்டலாக கமெண்ட் அடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • ஆர்சிபி மற்றும் விராட் கோலியை தேர்வு செய்யும்போது இதைவிட சிறந்த தேர்வு இருக்க முடியாது என உள்ளுணர்வு சொன்னது.
    • தற்போது ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என உள்ளுணர்வு சொல்கிறது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது விஜய் மல்லையா ஆர்சிபி அணியை ஏலத்தில் எடுத்தார். அதேபோல் விராட் கோலியையும் ஏலத்தில் எடுத்தார்.

    இதுவரை ஆர்சிபி அணி மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மூன்று முறையும் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அடைந்துள்ளது.

    இந்த சீசனில் முதல் எட்டு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் முதல் அணியாக பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் அதாவது ஆறு போட்டிகளிலும் வெற்றிபெற்று, சென்னை அணிக்கெதிராக ரன்ரேட்டி அடிப்படையில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இதேஉத்வேகத்துடன் சென்றால் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் மல்லையா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நான் ஆர்சிபி அணியை எடுப்பதற்காகவும், விராட் கோலியை எடுப்பதற்காகவும் ஏலம் கோரியபோது, என்னுடைய உள்ளுணர்வு என்னிடம், நான் அதைவிட சிறந்த தேர்வை தேர்வு செய்திருக்க முடியாது எனச் சொன்னது.

    அதேபோல் தற்போது என்னுடைய உள்ளுணர்வு, இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல ஆர்சிபி-க்கு சிறந்த வாய்ப்பு என என்னிடம் சொல்கிறது. முன்னோக்கி, மேல்நோக்கி செல்ல பெஸ்ட் ஆஃப் லக்..

    இவ்வாறு விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

    • ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் வெற்றி பெற கடுமையாக போராடுவார்கள்.
    • ராஜஸ்தான் அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடுவது 4-வது முறையாகும்.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியின் பிளே அப் சுற்று நேற்று தொடங்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    தோல்வியை தழுவிய ஐதராபாத் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 24-ந் தேதி நடைபெறும். குவா லிபையர்-2 ஆட்டத்தில் (இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதி சுற்று) விளையாடும். ஐதராபாத்துடன் இந்த போட்டியில் மோத போகும் அணி எது என்பது இன்று இரவு தெரியும்.

    அகமதாபாத் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் (வெளியேற்றுதல்) ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்-டூப்ளசி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி 'குவாலிபையர்-2' ஆட்டத்தில் ஐதராபாத்துடன் மோதும். தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் வெற்றி பெற கடுமையாக போராடுவார்கள்.

    ராஜஸ்தான் அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடுவது 4-வது முறையாகும். இதில் 2013-ல் ஐதராபாத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 2015-ல் பெங்களூரிடம் 71 ரன் வித்தியாசத்திலும், 2018-ல் கொல்கத்தாவிடம் 25 ரன்னிலும் தோற்றது.

    பெங்களூரு அணி 5-வது தடவையாக எலிமினேட்டரில் ஆடுகிறது. 2015-ல் ராஜஸ்தானையும், 2022-ல் லக்னோவையும் (14 ரன்) தோற்கடித்தது.

    2020-ல் ஐதராபாத்திடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2021-ல் கொல்கத்தாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது.

    • இதுவரை கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி தனது முதல் 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது.
    • ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

    அகமதாபாத்:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.

    அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில், புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ், 4-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சந்திக்கிறது. இதில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஐதராபாத் அணியுடன் மோத வேண்டும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக முன்னேறும்.

    சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 14 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 17 புள்ளிகள் பெற்று 6-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. முதல் 9 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்று கம்பீரமாக காட்சியளித்த அந்த அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணி தனது கடைசி 5 லீக் ஆட்டங்களில் வரிசையாக 4-ல் தோற்றதால் சறுக்கலை சந்தித்தது. அந்த அணியின் முந்தைய லீக் ஆட்டம் (கொல்கத்தாவுக்கு எதிராக) மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    முன்னாள் (2008) சாம்பியனான ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ரியான் பராக் (4 அரைசதம் உள்பட 531 ரன்), கேப்டன் சஞ்சு சாம்சன் (5 அரைசதம் உள்பட 504), ஜெய்ஸ்வால் (ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 348) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஜோஸ் பட்லர் இங்கிலாந்து திரும்பி விட்டதால் ஏற்பட்டு இருக்கும் இழப்பை சரிக்கட்டும் வகையில் டாம் கோலர் காட்மோர் விளையாட வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான், டிரென்ட் பவுல்ட், சந்தீப் ஷர்மா, அஸ்வின் ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள்.

    பெங்களூரு அணி 14 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 7 தோல்வியுடன் 14 புள்ளியுடன் சமநிலை வகித்தாலும், ரன்-ரேட்டில் சென்னை, டெல்லி, லக்னோ ஆகிய அணிகளை பின்னுக்கு தள்ளி விட்டு 9-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.

    இதுவரை கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி தனது முதல் 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அந்த அணியின் கதை முடிந்தது என்று எல்லோரும் நினைத்த போது, அந்த அணி கடைசி 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எழுச்சி கண்டது. அதுவும் முந்தைய திரில்லிங்கான ஆட்டத்தில் 27 ரன் வித்தியாசத்தில் சென்னையை வெளியேற்றி சிலிர்க்க வைத்தது.

    பெங்களூரு அணியில் விராட்கோலி 708 ரன்கள் (ஒரு சதம், 5 அரைசதம்) குவித்து நடப்பு தொடரில் அதிக ரன் வீரருக்குரிய ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசப்படுத்தி இருப்பதுடன் அபார பார்மில் இருக்கிறார். கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (4 அரைசதம் உள்பட 421), ரஜத் படிதார் (5 அரைசதம் உள்பட 361), தினேஷ் கார்த்திக், கேமரூன் கிரீன் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் யாஷ் தயாள், முகமது சிராஜ், லோக்கி பெர்குசன், ஸ்வப்னில் சிங், கரண் ஷர்மா ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    பெங்களூருவுக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்த ராஜஸ்தான் அணிக்கு இந்த முறை நிச்சயம் கடும் சவால் காத்திருக்கிறது என்றே சொல்லலாம். என்றாலும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பெங்களூரு அணி 15 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 13 ஆட்டங்களிலும் வென்று இருக்கின்றன. இரண்டு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ராஜஸ்தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோலர் காட்மோர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர், அஸ்வின், டிரென்ட் பவுல்ட், அவேஷ் கான், சந்தீப் ஷர்மா, யுஸ்வேந்திர சாஹல்,

    பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர், ஸ்வப்னில் சிங் அல்லது கரண் ஷர்மா, லோக்கி பெர்குசன், யாஷ் தயாள், முகமது சிராஜ்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • கொல்கத்தா தரப்பில் ஷ்ரேயாஸ் மற்றும் வெங்கடேஷ் அரை சதம் அடித்து அசத்தினர்.
    • ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் நடராஜன் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

    நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் குவாலிபையர்-1ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 19.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக ராகுல் திரிபாதி 55 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக குர்பாஸ்- நரைன் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்தது. 23 ரன்னிலும் நரைன் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து வெங்கடேஷ் மற்றும் ஷ்ரேயாஸ் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். மேலும் அணியையும் வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

    இதனால் கொல்கத்தா அணி 13.4 ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் கொல்கத்தா அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது. ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் நடராஜன் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

    • அன்றிலிருந்து யாருடைய காலையும் எப்போதும் தொடுவதில்லை என்று நான் எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன்.
    • அதே போல வேறு யாரும் என்னுடைய காலை தொட விடக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

    நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் இந்தியாவின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். குறிப்பாக 2007 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் 75 ரன்கள் அடித்த அவர் டோனி தலைமையில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவினார். அதே போல 2011 உலகக் கோப்பை இறுதி போட்டியில் சுயநலமின்றி 97 ரன்கள் அடித்த அவர் 28 வருடங்கள் கழித்து இந்தியா கோப்பை முத்தமிட உதவினார்.

    மேலும் கொல்கத்தா அணிக்காக 2012, 2014 வருடங்களில் கோப்பையை வென்ற அவர் 3-வது வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ளார். ஓய்வுக்கு பின் அதிரடியான கருத்துக்களை தைரியமாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ள அவர் தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் வெற்றிகரமான பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

    இந்நிலையில் தனது இளம் வயதில் அண்டர்-14 அணியில் விளையாடுவதற்காக தேர்வாளரின் காலில் விழ சொன்னதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இது அவர் கூறியதாவது:-

    நான் வளரும் போது 12, 13 வயதில் என்னுடைய முதல் அண்டர்-14 தொடர் வந்தது நினைவிருக்கிறது. அந்தத் தொடரில் தேர்வாளரின் காலை நான் தொடாததால் விளையாடுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அன்றிலிருந்து யாருடைய காலையும் எப்போதும் தொடுவதில்லை என்று நான் எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன். அதே போல வேறு யாரும் என்னுடைய காலை தொட விடக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

    அண்டர்-16, அண்டர்-19, ரஞ்சிக் கோப்பை அல்லது என்னுடைய சர்வதேச கேரியரின் ஆரம்பத்தில் ஒவ்வொரு முறையும் நான் தோல்வியடையும் போது கிரிக்கெட் விளையாடுவதற்கு தேவையற்ற குடும்பத்திலிருந்து நீங்கள் வந்துள்ளீர்கள் என்று பலரும் விமர்சித்தார்கள். அத்துடன் நீங்கள் உங்களுடைய அப்பாவின் தொழிலுக்கு சென்று விடுங்கள் என்று சொன்னார்கள். அது தான் என் தலை மீது தொங்கிய மிகப்பெரிய கருத்து.

    ஆனால் நான் அவர்களை விட அதிகமாக விரும்புகிறேன் என்பதை மக்கள் உணரவில்லை. நான் அந்த உணர்வை வெல்ல விரும்பினேன். அதை என்னால் செய்ய முடிந்த போது வேறு எந்த பார்வையும் என்னை தொந்தரவு செய்யவில்லை. என் வாழ்க்கையில் வெல்ல மிகவும் கடினமான கருத்து என்னவென்றால் அதை நான் கடினமாக விரும்பவில்லை. நான் அவர்களை விட கடினமாக இருக்க விரும்பினேன்.

    இவ்வாறு கம்பீர் கூறினார்.

    ×