என் மலர்
கிரிக்கெட் (Cricket)

என் வழி தனி வழி.. உணவு கலைஞருக்கு தடை விதித்ததால் புதிய வழியை தேர்ந்தெடுத்த கோலி

- கோலி போன்ற பிரபல வீரர்கள் தங்களுக்கு என தனியாக சமையல் கலைஞர்களை அழைத்து வருவார்கள்.
- உணவுக்கு என தனி சமையல் கலைஞர்களை அழைத்து வரக்கூடாது என பிசிசிஐ தெரிவித்தது.
துபாய் :
பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது அடுத்து பிசிசிஐ பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதில் முக்கிய கட்டுப்பாடுகள் வீரர்கள் வெளிநாட்டு தொடரில் குடும்பத்தினருடன் அதிக நாட்கள் செலவிடக்கூடாது. அதிக உடைமைகளை வீரர்கள் எடுத்து வரக்கூடாது மற்றும் உணவுக்கு என தனி சமையல் கலைஞர்களை அழைத்து வரக்கூடாது என பல விதிகள் விதிக்கப்பட்டிருந்தன.
பொதுவாக வீரர்கள் தங்கும் ஹோட்டலில் இந்திய வீரர்களுக்கு என உணவு கலைஞர்கள் இருப்பார்கள். இல்லையெனில் ஹோட்டலில் இருக்கும் உணவு கலைஞர்கள் தயாரித்து பிரத்தியேக உணவுகளை இந்திய அணியினருக்கு வழங்குவார்கள்.
ஆனால் விராட் கோலி போன்ற பிரபல கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு என தனியாக சமையல் கலைஞர்களை அழைத்து வந்து தங்க வைத்திருந்தார்கள். தற்போது இதற்கு பிசிசிஐ அனுமதி வழங்கவில்லை. இதனை அடுத்து தமக்கு எந்த மாதிரி உணவு வேண்டும் என்பதை விராட் கோலி துபாயில் உள்ள பிரபல ஹோட்டலை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார்.
இதனை அடுத்து அந்த ஹோட்டல் சமையல் கலைஞர்கள் விராட் கோலிக்கு என தனி உணவுகளை சமைத்து அவருக்கு டெலிவரி செய்து இருக்கிறார்கள். இதனால் விராட் கோலி பயிற்சிக்கு வரும்போது கூடவே உணவு பொட்டணங்களையும் எடுத்து வந்திருக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் பயிற்சிக்கு பிறகு விராட் கோலி தனது உணவை எடுத்து சாப்பிட்டு இருக்கிறார். உணவுக் கலைஞர்களுக்கு பிசிசிஐ தடை விதித்ததை அடுத்து விராட் கோலி இந்த முறையில் பின்பற்றுகிறார்.