search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு...! கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ அனுப்பிய தகவல்
    X

    சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு...! கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ அனுப்பிய தகவல்

    • அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2027 உலகக் கோப்பைக்கான திட்டத்திற்கு பிசிசிஐ தயார் ஆகி வருகிறது.
    • ரோகிர் சர்மா ஃபார்ம் கவலையளிக்கும் வகையில் இருப்பதால் 2027 வரை கேப்டனாக நீடிக்க சந்தேகம்.

    இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருந்து வருகிறார். 37 வயதாகும் ரோகித் சர்மா 67 டெஸ்ட் போட்டியில் 12 சதங்களுடன் 4,301 ரன்கள் அடித்துள்ளார். 265 ஒருநாள் போட்டிகளில் 31 சதங்களுடன் 10,866 ரன்கள் அடித்துள்ளார்.

    விராட் கோலிக்குப் பிறகு டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று விடிவிலான கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வந்தார். கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கோப்பையை வென்ற கையுடன் டி20 அணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    இந்தியா கடைசியாக விளையாடிய இரண்டு டெஸ்ட் தொடர்களையும் (நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) இழந்து ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாயப்பை இழந்தது. இந்த இரண்டு டெஸ்ட் தொடரிலும் ரோகித் சர்மாவின் ஆட்டம் திருப்தியளிக்கும் வகையில் இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் கடைசி டெஸ்டில் தானாகவே ஆடும் லெவனில் இருந்து விலகினார். ஃபார்ம் இன்றி தவித்து வருகிறார்.

    வருகிற 19-ந்தேதி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இவரது தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுகிறது.

    அதன்பின் இந்தியா டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை (2027) ஆகியவற்றிற்கான அணியை தயார் செய்ய உள்ளது.

    தற்போது ரோகித் சர்மாவின் ஃபார்ம் கவலை அளிக்கும் வகையில் உள்ளதால், ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி இன்னும் இரண்டு வருடம் செல்ல பிசிசிஐ விரும்பவில்லை. இதனால் உங்களுடைய எதிர்காலம் குறித்து தெளிவான பார்வை என்ன? என்று பிசிசிஐ ரோகித் சர்மாவிடம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு ரோகித் சர்மா தனது எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுப்பார் எனத் தெரிகிறது.

    இந்திய அணியின் நீண்ட கால திட்டம் என்பதால், ரோகித் சர்மாவை கேப்டனாக நீட்டிக்க பிசிசிஐ விரும்பாது. இதனால் கேப்டன் பதவியை வேண்டாம், ஒரு வீரரான விளையாடுகிறேன் எனக் கூறினால் தற்போதுள்ள ஃபார்மில் அதற்கு பிசிசிஐ சம்மதம் தெரிவிக்குமா? என்பது கேள்விக்குறிதான்.

    இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு ரோகித் சர்மா தனது கிரிக்கெட் வாழ்க்கையின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

    அடுத்த கேப்டனுக்கான வரிசையில் பும்ரா முதலிடத்தில் உள்ளார். இவர் நீண்ட காலமாக தொடர்ந்து கேப்டனாக பணியாற்ற அவருடைய உடற்தகுதி ஒத்துழைக்குமா? என்ற கவலை உள்ளது.

    இதனால் சுப்மன் கில்லை துணைக் கேப்டனாக்கி கேப்டன் பதவியை வழங்க பிசிசிஐ முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கில்லும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேவேளையில் ரிஷப் பண்ட்-ஐ கேப்டனாக நியமிக்கலாமா? என்றும் பிசிசிஐ யோசித்து வருகிறது. இதனால் ரோகித் சர்மாவுக்குப் பிறகு இந்த மூன்று பேருக்கும் கேப்டனாகவும் வாய்ப்புள்ளது.

    அதேவேளையில் விராட் கோலி குறித்து பிசிசிஐ தற்போது வரை எந்தவிதமான முடிவுக்கும் வரவில்லை. இதனால் விராட் கோலி தற்போது தனது எதிர்கால கிரிக்கெட் குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படவில்லை.

    Next Story
    ×