search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மகளிர் பிரீமியர் லீக்: களத்தில் மோதிக்கொண்ட கவுர், சோஃபி எக்லெஸ்டோன்- வைரல் வீடியோ
    X

    மகளிர் பிரீமியர் லீக்: களத்தில் மோதிக்கொண்ட கவுர், சோஃபி எக்லெஸ்டோன்- வைரல் வீடியோ

    • 16-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    லக்னோ:

    3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் லக்னோவில் நடந்து வருகிறது. அதில் நேற்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய மும்பை அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது மும்பை அணியின் 4-வது வெற்றி ஆகும்.

    முன்னதாக உபி வாரியர்ஸ் பேட்டிங் செய்த போது மும்பை இந்தியன்ஸ் அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டனர். இதனால் கடைசி ஓவரில் 3 பீல்டர்கள் மட்டுமே உள்வலையத்திற்கு வெளியே நிற்க வேண்டும் என நடுவர்கள் தெரிவித்தனர். அதனை மும்பை கேப்டனிடம் நடுவர் தெரிவித்து கொண்டிருந்தார். இதனால் கவுர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

    அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த சோஃபி எக்லெஸ்டோன் நடுவரிடம் கவுரை பார்த்து ஏதோ கூறினார். உடனே பதிலுக்கு கவுர் அவரை பார்த்து (உங்கள் வேலையை பாருங்கள் என்பது போல) எதோ திட்டினார். இதனையடுத்து களநடுவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×