search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அந்த தொடர்களில் கிடைத்த அனுபவம்.. சாம்பியன்ஸ் டிராபியை வென்றது குறித்து கோலி கருத்து
    X

    அந்த தொடர்களில் கிடைத்த அனுபவம்.. சாம்பியன்ஸ் டிராபியை வென்றது குறித்து கோலி கருத்து

    • இந்த தொடர் முழுவதுமே ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
    • இப்போதுள்ள இளம் வீரர்களை பார்க்கும் போது இந்திய அணி நல்ல வீரர்கள் கையில் தான் இருக்கிறது என்று தோணுகி

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் நேற்று மோதினர். இதில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதன் மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது.

    இந்நிலையில்

    இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்று பல ஆண்டுகள் ஆகின்றன. தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளோம். சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது எங்களது இலக்காக இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடினமான தொடருக்குப் பிறகு, சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது எங்களது நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

    இந்த தொடர் முழுவதுமே ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவினார்கள். கடந்த கால ஐசிசி தொடர்களின் முக்கியமான போட்டிகளில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், அந்த தொடர்களில் கிடைத்த அனுபவங்களிலிருந்து நாங்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டு இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளோம்.

    இளம் வீரர்களுடன் விளையாடியது புது அனுபவமாக இருந்தது. அவர்கள் உடன் விளையாடி எனது அனுபவத்தை அதிகரித்து கொள்ள விரும்புகிறேன். இப்போதுள்ள இளம் வீரர்களை பார்க்கும் போது இந்திய அணி நல்ல வீரர்கள் கையில் தான் இருக்கிறது என்று தோணுகிறது.

    நான்கு ஐசிசி பட்டங்களை வெல்வது உண்மையிலேயே ஒரு ஆசீர்வாதம், இவ்வளவு காலம் விளையாடி இதைச் சாதித்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நான் கருதுகிறேன்

    இவ்வாறு விராட் கோலி கூறினார்.

    Next Story
    ×