search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    5வது டி20 போட்டி- 150 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
    X

    5வது டி20 போட்டி- 150 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

    • 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.
    • இங்கிலாந்து அணி 97 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது.

    248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில் இங்கிலாந்து அணி 10.3 ஓவரில் 97 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது.

    Next Story
    ×