என் மலர்
பாரிஸ் ஒலிம்பிக் 2024
- ஒலிம்பிக்கில் பதக்க பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும்.
- கடைசிப் போட்டியில் தங்கம் வென்ற அமெரிக்கா பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டைகளை நடத்தினர்.
ஒலிம்பிக் தொடரின் பதக்க பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும். அதற்கு அடுத்து வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கல பதக்கங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு சீனா இடையே கடும் போட்டியை தந்தது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பதக்க பட்டியல் விவரம் வருமாறு:
40 தங்கம், 44 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் என 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 91 பதக்கங்களுடன் சீனா 2-வது இடம் பிடித்தது.
20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என 45 பதக்கங்களுடன் ஜப்பான் 3-வது இடத்தில் உள்ளது.
18 தங்கம், 19 வெள்ளி, 16 வெண்கலம் என 54 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 4வது இடம் பிடித்துள்ளது.
16 தங்கம், 26 வெள்ளி, 22 வெண்கலம் என 64 பதக்கங்களுடன் பிரான்ஸ் 5வது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் ஒரே ஒரு தங்க பதக்கம் வென்று 62-வது இடத்தில் உள்ளது.
இந்திய அணி ஒரு வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களுடன் 71-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியா 5 வெண்கல பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஒரு வெள்ளி பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுதலில் இந்தியா 3 வெண்கல பதக்கங்களை வென்றது. ஆண்கள் ஹாக்கியில் மற்றொரு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. மல்யுத்தத்தில் ஒரு வெண்கலம் கிடைத்தது. இதையடுத்து, 6 பதக்கங்களுடன் இந்தியா 71-வது இடத்தில் உள்ளது.
- இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
- ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஒலிம்பிக் ஹாக்கியில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி மீண்டும் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.1972-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இந்தியா தொடர்ச்சியாக 2-வது முறையாக பதக்கத்தை வென்றுள்ளது. இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய ஹாக்கி அணி வென்ற பதக்க எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து அணியின் கோல் கீப்பர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த 1988-ம் ஆண்டு கேரளாவில் கொச்சியில் பிறந்து வளர்ந்த பிஆர் ஸ்ரீஜேஷ், கடந்த 2011-ம் ஆண்டு முதல் இந்திய அணியில் கோல் கீப்பராக இடம் பெற்று விளையாடி வந்துள்ளார்.
2016 -ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார். அதன் பிறகு சில ஆண்டுகளில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். கடந்த 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஸ்ரீஜேஷ் உதவியுடன் வெண்கலப் பதக்கம் வென்றது. ஹாக்கி இந்தியா அணியில் சிறந்த பங்களிப்பை அளித்ததன் மூலமாக கேல் ரத்னா விருது பெற்றுள்ளார்.
ஓய்வு அறிவித்ததை தொடர்ந்து ஜூனியர் ஹாக்கி இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஸ்ரீஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் வென்ற வெண்கல பதக்கத்துடன் வேட்டி, சட்டையணிந்து ஈபிள் டவர் முன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்ரீஜேஷ் பகிர்ந்துள்ளார்.
ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை வெண்கலம் வென்ற மனு பாக்கர் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இமானே கெலிஃப்புக்கு ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக ஏற்கனவே சர்ச்சை கிளம்பியது
- இனவெறியுடன் அவதூறுகளை கட்டவிழ்த்து விட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வாங்கித் தரப்படும்
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. தொடங்க நிகழ்ச்சியில் நடந்த டிராக் குவீன் நிகழ்ச்சி முதல் மல்யுத்த வீராங்கனை வினேஷ் தகுதிநீக்கம் வரை சர்ச்சைகளுக்குக் குறைவில்லாமல் இந்த வருட ஒலிம்பிக்கானது நிறைவடைகிறது. குறிப்பாக அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப் -பின் பாலினம் குறித்த சர்ச்சை விவாதங்களுக்கு வழிவகுத்தது.

66 கிலோ உடல் எடைப்பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவின் இமானே கெலிப்புடன் மோதினார். இதில் இமானே விட்ட குத்தில் கரினியின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது.
முதல் சுற்றில் 46 வினாடிகள் மட்டும் ஆட்டம் நடந்த நிலையில் கரினி, தொடர்ந்து விளையாட மறுத்தார்.தனது விளையாட்டு வாழ்க்கையில் இவ்வளவு கடினமான குத்துகளை யாரிடமும் வாங்கியதில்லை என்று கண்ணீர் மல்க கூறி வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து இமானே கெலிஃப்புக்கு ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக ஏற்கனவே சர்ச்சை கிளம்பியது. ஆனால் ஒலிம்பிக் கமிட்டி அவருக்கு துணை நின்றது. உலகம் முழுவதும் அவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்தது.
இதற்கிடையில் நேற்று முன் தினம் நடந்த இறுதிப்போட்டியில், சீன வீராங்கனை யாங்க் லியூவை வீழ்த்தி தங்கம் வென்றார் இமானே கெலிஃப். அனைவரையும் போல் தானும் ஒரு முழுமையான பெண்தான் என்று வெற்றிக்கு பிறகு அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாலின ரீதியாக சமூக வலைதளங்களில் தன்மீது அவதூறு பரப்பியவர்களை சட்டரீதியாக தண்டிக்க வலியுறுத்தி பிரான்ஸில் இமானே புகார் அளித்துள்ளார். மேலும் தனது வழக்கறிஞர் மூலம் சட்டப்பூர்வமான போராட்டத்தை அவர் முன்னெடுக்க உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து அவரது வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இமானே மீது இனவெறியுடன் பாலின ரீதியான அவதூறுகளை கட்டவிழ்த்து விட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதே தங்கள் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
- கென்யா வீராங்கனை பெய்த் கிபியெகான் ஒலிம்பிக் சாதனை படைத்தார்.
- 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனையை முறியடித்து அமெரிக்க அணியே புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற ஆண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்க அணி புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தது.
கிறிஸ்டோபர் பெய்லி, வெரோன் நார்வுட், புரூஸ் டெட்மான், ராய் பெஞ்சமின் ஆகியோர் அடங்கிய அணி பந்தய தூரத்தை 2 நிமிடம் 54.43 வினாடியில் கடந்து தங்கம் வென்றது.
இதற்கு முன்பு 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அமெரிக்க அணி 2 நிமிடம் 55.39 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனையை முறியடித்து அமெரிக்க அணியே புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.
போஸ்ட்வானா அணிக்கு வெள்ளியும் (2 நிமிடம் 54.53 வினாடி), இங்கிலாந்து அணிக்கு (2 நிமிடம் 55.83 வினாடி) வெண்கலமும் கிடைத்தன.
பெண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் அமெரிக்கா தங்கம் வென்றது. அந்த அணி பந்த தூரத்தை 3 நிமிடம் 15.17 வினாடியில் கடந்தது. நெதர்லாந்து 3 நிமிடம் 19.50 வினாடியில் கடந்து வெள்ளியும், இங்கிலாந்து 3 நிமிடம் 19.72 வினடியில் கடந்து வெண்கலமும் பெற்றன.
பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீராங்கனை பெய்த் கிபியெகான் ஒலிம்பிக் சாதனை படைத்தார்.
அவர் பந்தய தூரத்தை 3 நிமிடம் 51. 29 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இதற்கு முன்பு அவர் 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் 3 நிமிடம் 53.11 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. பெய்த் கிபியெ கான் தனது சாதனையை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். அவர் தான் உலக சாதனையாளாராகவும் உள்ளார்.
ஆஸ்திரேலிய வீராங்கனை வீராங்கனை ஜெசிகா ஹல் 3 நிமிடம் 52.56 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், இங்கிலாந்தை சேர்ந்த ஜார்ஜியா பெல் 3 நிமிடம் 52.61 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினார்கள்.
ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் கென்ய வீரர் இம்மானுவேல் வன்யோனி 1 நிமிடம் 41. 19 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். கனடாவை சேர்ந்த மார்கோ அரோப் 1 நிமிடம் 41.20 வினாடியில் கடந்து வெள்ளியும், அல்ஜீரியா வீரர் டிஜ்மெல் செட் ஜாட்டி 1 நிமிடம் 41.50 வினாடியில் கடந்து வெண்கலமும் பெற்றனர்.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் நியூசிலாந்து வீரர் கெர்ஹமிஸ் 2.36 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். அமெரிக்க வீரர் ஷெல்பைக்கு வெள்ளியும், கத்தாரை சேர்ந்த பார்சிமுக்கு வெண்கலமும் கிடைத்தன.
ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் நார்வேக்கு தங்கம் கிடைத்து. அந்நாட்டை சேர்ந்த ஜேக்கப் இன்ஜெப்ரிஸ்டன் பந்தய தூரத்தை 13 நிமிடம் 13.66 வினாடியில் கடந்தார். ரொனால்டு கெமோய்க்கு வெள்ளியும் (கென்யா, 13 நிமிடம் 15.04 வினாடி), கிராண்ட் பிஷ்சருக்கு (அமெரிக்கா, 13 நிமிடம் 15.13 வினாடி) வெண்கலமும் கிடைத்தன.
பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, செக்குடியரசு அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் கிடைத்தன.
பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மசாய் ரஸ்சல் 12.33 வினாடியில் கடந்து தங்கம் வென்றார்.
பிரான்சை சேர்ந்த சைரனா சம்பா வெள்ளி பதக்கமும் (12.34 வினாடி), போர்டோரிகோ வீராங்கனை ஜேஸ்மின் கேமாச்சோ (12.36 வினாடி) வெண்கலமும் பெற்றனர்.
- 1972-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இந்தியா தொடர்ச்சியாக 2-வது முறையாக பதக்கத்தை வென்றுள்ளது.
- டெல்லி விமான நிலையத்தில் ஹாக்கி அணியினருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுடெல்லி:
ஒலிம்பிக் ஹாக்கியில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி மீண்டும் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.1972-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இந்தியா தொடர்ச்சியாக 2-வது முறையாக பதக்கத்தை வென்றுள்ளது. இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய ஹாக்கி அணி வென்ற பதக்க எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
மீண்டும் வெண்கலப்பதக்கம் வென்ற ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணியினர் பாரீசில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று காலை நாடு திரும்பினர். வானில் பறக்கையில் விமானி தங்களது விமானத்தில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியினர் மற்றும் அவரது குடும்பத்தினர் நம்முடன் பயணிப்பதாக மைக்கில் அறிவித்ததுடன், அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தார். அப்போது சக பயணிகள் உற்சாகமாக கைதட்டி பாராட்டினர்.
நிறைவு விழாவில் தேசிய கொடியேந்தும் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் மற்றும் அமித் ரோஹிதாஸ், ராஜ்குமார் பால், சுக்ஜீத் சிங், சஞ்சய் ஆகியோர் தவிர அணியின் மற்ற வீரர்கள் அனைவரும் வந்தனர்.
டெல்லி விமான நிலையத்தில் இந்திய ஹாக்கி அணியினருக்கு மேள தாளம் முழங்க உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய ஹாக்கி சம்மேளன நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றனர். அப்போது இசைக்கப்பட்ட இசைக்கு தகுந்தபடி வீரர்கள் நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
- மல்யுத்த இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி பெற்றிருந்தார்.
- உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி பெற்றிருந்தார். அவர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.
ஆனால் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார்.
இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்தது.
அதன்படி ஆகஸ்டு 11-ந் தேதி தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வினேஷ் போகத் விவகாரத்தில் மேல்முறையீடு தீர்ப்பு 13-ந் தேதித்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படி நாட்கள் தள்ளிப் போவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- முதலில் துப்பாக்கி சுடுதலில் கவனம் செலுத்த நான் விரும்புகிறேன்.
- கவுரவமான வேலையில் சேருமாறு எனது குடும்பம் என்னை கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது.
புதுடெல்லி:
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சரப்ஜோத் சிங், மனு பாக்கர் இணை வெண்கலப்பதக்கம் வென்றது. வெண்கலப்பதக்கம் வென்ற 22 வயதான சரப்ஜோத் சிங் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

நாடு திரும்பிய அவருக்கு சொந்த ஊரில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரப்ஜோத் சிங்குக்கு அரியானா மாநில அரசு விளையாட்டு துறையில் துணை இயக்குனர் பதவி கொடுக்க முன்வந்தது. ஆனால் அதனை ஏற்க சரப்ஜோத் சிங் மறுத்து விட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'வேலை என்பது நல்லது தான். ஆனால் அதனை இப்போது நான் செய்ய மாட்டேன். முதலில் துப்பாக்கி சுடுதலில் கவனம் செலுத்த நான் விரும்புகிறேன். கவுரவமான வேலையில் சேருமாறு எனது குடும்பம் என்னை கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் நான் துப்பாக்கி சுடுதலில் ஈடுபட விரும்புகிறேன். நான் ஏற்கனவே எடுத்த சில முடிவுகளுக்கு எதிராக செல்ல விரும்பவில்லை. எனவே என்னால் தற்போது வேலை செய்ய முடியாது' என்றார்.
- வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.
- தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையீடு செய்தார்.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.
ஆனால் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரையிறுதியில் அவரிடம் 5-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்த கியூபா வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதிபெற்றார்.
இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார்.
தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக்கூறிய வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்தது. இந்த விவகாரத்தை நீதிபதி அனபெல் பெனட் விசாரிப்பார் என விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, வினேஷ் போகத் விவகாரத்தில் சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் இன்று இரவு 9.30 மணியளவில் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், வினேஷ் போகத் விவகாரத்தில் மேல்முறையீடு தீர்ப்பை ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம்.
- வினேஷ் போகத் பதக்கம் வென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
- வினேஷ் நம் நாட்டுக்காக செய்ததை நாம் மறந்துவிட கூடாது என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.
ஆனால் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரையிறுதியில் அவரிடம் 5-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்த கியூபா வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதிபெற்றார்.
இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார்.
தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக்கூறிய வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

வினேஷ் போகத் விவகாரத்தில் இன்று இரவு 9-30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வினேஷ் போகத் குறித்து ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா பேசியுள்ளார்.
அதில், "வினேஷ் போகத் பதக்கம் வென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இப்படி ஒரு நிலை வராமல் இருந்திருந்தால் அவளுக்கு பதக்கம் கிடைத்திருக்கும். பதக்கம் வென்றவர்களை மக்கள் சில காலம் நினைவில் வைத்துக் கொண்டு அவர்களை சாம்பியன்கள் என்று கூறுவார்கள்.
பதக்கம் வெல்லாதவர்களை மக்கள் எளிதில் மறந்துவிடுவார்கள். ஆனால் வினேஷ் நம் நாட்டுக்காக செய்ததை நாம் மறந்துவிட கூடாது என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
- இந்திய வீராங்கனை ரித்திகா காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
- இந்தியாவின் அமன் ஷெராவத் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றார்.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 76 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் காலிறுதியில் இந்திய வீராங்கனை ரித்திகா ஹூடா, கிரிகிஸ்தானின் ஐபெரி கிஜியுடன் மோதினார். இந்தப் போட்டியில் இருவரும் சிறப்பாக ஆடினர்.
இறுதியில், ரித்திகா 1-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
ஆனாலும் ரிபிசேஜ் முறையில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நுழைய வாய்ப்புள்ளது.
இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் நேற்று வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
- இதனால் இந்தியாவின் பதக்கம் பறிபோனது. இந்த விவகாரத்தால் நாடே கொதிப்படைந்துள்ளது.
புதுடெல்லி:
பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.
ஆனால், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி திடீரென அறிவித்தது. இதனால் இந்தியாவின் பதக்கம் பறிபோனது. இந்த விவகாரத்தால் நாடே கொதிப்படைந்து இருக்கிறது.
இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. வினேஷ் போகத் தகுதிநீக்கம் விவகாரத்தில் யார் பின்னால் இருக்கிறார்கள் என்பதை அறிய விரும்புவதாக எதிர்க்கட்சிகள் குரலெழுப்பின. இந்தப் பிரச்சனையை எழுப்ப அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதிக்காததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதற்கிடையே, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை அரியானா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என முன்னாள் முதல் மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தால் அரியானா சார்பில் அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்புவோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், வினேஷ் போகத் ராஜ்யசபா உறுப்பினர் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராஜ்யசபா உறுப்பினராக 30 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வினேஷ் போகத்துக்கு ஆகஸ்ட் 25-ம் தேதி 30 வயதாகிறது.
ராஜ்யசபா தேர்தல் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 21 ஆகும். எனவே வினேஷ் போகத்தால் வேட்புமனு தாக்கல் செய்யமுடியாது என்பதால் அவர் ராஜ்யசபா உறுப்பினர் பதவி பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.
- இந்திய வீராங்கனை ரித்திகா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார்.
- இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கலம் வென்றார்.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 76 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை ரித்திகா ஹூடா, ஹங்கேரியின் நாகி பெர்னட்டை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் ரித்திகா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். இறுதியில், ரித்திகா 12-2 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
நேற்று இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.