search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • கஜகஸ்தான் வீராங்கனையை ரஷிய வீராங்கனை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    • கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் ரிபாகினா 2-வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தானைச் சேர்ந்த 3-ம் நிலை வீராங்கனையான எலினா ரிபாகினா, தரவரிசையில் 57-வது இடம் வகிக்கும் ரஷியாவின் அன்ன பிளின்கோவாவுடன் மோதினார்.

    இருவரும் தலா ஒரு செட்டை வசப்படுத்தினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட் டைபிரேக்கர் வரை சென்றது. இருவரும் சளைக்காமல் மல்லுக்கட்டினர்.

    இறுதியில் எதிராளி பந்தை வெளியே அடித்ததன் மூலம் வெற்றிக்குரிய புள்ளியை ஈட்டிய பிளின்கோவா ஒரு வழியாக டைபிரேக்கர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

    ஆட்டத்தின் முடிவில் பிளின்கோவா 6-4, 4-6, 7-6 (22-20) என்ற செட் கணக்கில் ரிபாகினாவை தோற்கடித்து ஆஸ்திரேலிய ஓபனில் முதல் முறையாக 3-வது சுற்றை எட்டினார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், சீனாவின் ஜுன்செங் ஷாங்கிடம் மோதினார்.
    • சுமித் நாகல் தனது இரண்டாவது சுற்றின் முதல் செட்டை வென்றார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், சீனாவின் ஜுன்செங் ஷாங்கிடம் மோதினார்.

    சுமித் நாகல் தனது இரண்டாவது சுற்றின் முதல் செட்டை வென்றார். இதனையடுத்து நடந்த 3 செட்டையும் சீன வீரர் அதிரடியாக வீழ்த்தினார். சுமித் நாகல் 2-6, 6-3, 7-5, 6-4 என தோல்வியடைந்தார். இந்த போட்டி இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்கள் நடந்தது.

    ஆண்கள் பிரிவில் அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோர் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

    பெண்கள் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் அவர் 6-4, 3-6, 6-4 என்ற கணக்கில் கோலின்சை (அமெரிக்கா) தோற்கடித்தார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
    • ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது.

    மெல்போர்ன்:

    டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- ஆஸ்திரேலியாவின் டக்வொர்த், பால்மன்ஸ் ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-5), 4-6, 7-6 (10-2) என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • ஆஸ்திரேலிய ஓபன் 2வது சுற்றில் முன்னணி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் போராடி வென்றார்.
    • ஜோகோவிச், காஸ்பர் ரூட் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான ஜெர்மன் வீரரான அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஸ்லோவோக்கியா வீரர் லூகாசுடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். அடுத்த இரு செட்களை லூகாஸ் 6-3, 6-4 என கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட ஸ்வரேவ் 4-வது 7-6 (7-5) என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5-வது செட்டிலும் ஸ்வரேவ் 7-6 (10-7) என போராடி வென்றார்.

    இறுதியில் ஸ்வரேவ் 7-5, 3-6, 4-6, 7-6 (7-5), 7-6 (10-7) என கைப்பற்றி அசத்தினார். இந்தப் போட்டி சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்றது.


    மற்றொரு போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ் பர்செலுடன் மோதினார். இருவரும் தலா 2 செட்களைக் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டை ரூட் கைப்பற்றினார். இறுதியில் ரூட் 6-3, 6-7, 6-3, 3-6, 7-6 (10-7) என்ற செட் கணக்கில் வென்றார்.

    • நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரினை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா, பிரன்டா புருவிர்தோவாவை விரட்டியடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    மெல்போர்ன்:

    'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரரும், 10 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 4-6, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரினை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஜானிக் சினெர் (இத்தாலி) 6-2, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜோங்கை தோற்கடித்தார். இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சரிவில் இருந்து மீண்டு வந்து 4-6, 7-6 (8-6), 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 3 மணி 37 நிமிடம் நீடித்தது. மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 75-வது இடத்தில் உள்ள செக்குடியரசு வீரர் டாமஸ் மசாக் 6-4, 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 17-ம் நிலை வீரரான பிரான்சிஸ் டியாயோவுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்தார்.

    மற்ற ஆட்டங்களில் ஆந்த்ரே ருப்லெவ் (ரஷியா), அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா), பென் ஷெல்டன் (அமெரிக்கா), டெய்லர் பிரைட்ஸ் (அமெரிக்கா), செபாஸ்டியன் பயஸ் (அர்ஜென்டினா), கரன் கச்சனோவ் (ரஷியா), தாமஸ் மார்ட்டின் எட்ச்வெர்ரி (அர்ஜென்டினா), செபாஸ்டியன் கோர்டா (அமெரிக்கா), அட்ரியன் மன்னரினோ (பிரான்ஸ்) ஆகியோரும் வெற்றியை ருசித்தனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் தகுதி சுற்று மூலம் நுழைந்த பிரன்டா புருவிர்தோவாவை (செக்குடியரசு) விரட்டியடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவரும், அமெரிக்க ஓபன் சாம்பியனுமான கோகோ காப் (அமெரிக்கா) 7-6 (7-2), 6-2 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை கரோலின் டோலிஹிட்டை வீழ்த்தினார்.

    உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) 0-6, 2-6 என்ற நேர்செட்டில் 16 வயது ரஷிய வீராங்கனை மிர்ரா ஆன்ட்ரீவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். இதேபோல் முன்னாள் சாம்பியனான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-1, 4-6, 1-6 என்ற செட் கணக்கில் தகுதி சுற்று மூலம் ஏற்றம் கண்ட வீராங்கனையான மரியா டிமோபீவாவிடமும் (ரஷியா), 8-ம் நிலை வீராங்கனையான மரியா சக்காரி (கிரீஸ்) 4-6, 4-6 என்ற நேர்செட்டில் ரஷியாவின் எலினா அவனிஷியானிடமும் வீழ்ந்தனர்.

    மற்ற ஆட்டங்களில் ஹாடட் மையா (பிரேசில்), ஸ்டாம் ஹூன்டெர் (ஆஸ்திரேலியா), அலிசியா பார்க்ஸ் (அமெரிக்கா), பார்பரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு), பாலா படோசா (ஸ்பெயின்), லிசி சுரென்கோ (உக்ரைன்), அமன்டா அனிசிமோவா (அமெரிக்கா), டியானி பேரி (பிரான்ஸ்), அனஸ்டாசியா ஜகாரோவா (ரஷியா) ஆகியோரும் வெற்றி கண்டனர்.

    • கவூப் 7-6 (7-2) 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    • ரஷியாவை சேர்ந்த மிர்ரா ஆண்ட்ரீவா 6-0, 6-2 என்ற நேர்செட் கணக்கில் ஜபேரை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் 4-வது வரிசையில் உள்ள கோகோ கவூப் (அமெரிக்கா) சக நாட்டை சேர்ந்த கரோலின் டோனி ஹைடை எதிர்கொண்டார்.

    இதில் கவூப் 7-6 (7-2) 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டத்தில் மினாவூர், ஹண்டர் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    6-வது வரிசையில் இருக்கும் ஒனஸ் ஜபேர் (துனிசியா) 2-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். ரஷியாவை சேர்ந்த மிர்ரா ஆண்ட்ரீவா 6-0, 6-2 என்ற நேர்செட் கணக்கில் ஜபேரை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினா வோஸ்னியாக்கியும் (டென்மார்க்) 2-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது வரிசையில் உள்ள சின்னர் (இத்தாலி) 2-வது சுற்றில் நெதர்லாந்தை சேர்ந்த ஜெஸ்பர் டி ஜாங்கை எதிர்கொண்டார். இதில் சின்னர் 6-2, 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்றார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
    • ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்மித் நாகல் வெற்றி பெற்றார்.

    மெல்போர்ன்:

    டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்லிக்குடன் மோதினார்.

    இதில் நாகல் 6-4, 6-2, 7-6 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது வரிசையில் உள்ள ஜானிக்ஸ் ஷின்னர் (இத்தாலி) தொடக்க சுற்றில் நெதர்லாந்தை சேர்ந்த போடிக் வான்டேவை எதிர் கொண்டார்.

    மெல்போர்ன்:

    இந்த ஆண்டின் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது வரிசையில் உள்ள ஜானிக்ஸ் ஷின்னர் (இத்தாலி) தொடக்க சுற்றில் நெதர்லாந்தை சேர்ந்த போடிக் வான்டேவை எதிர் கொண்டார்.

    இதில் ஷின்னர் 6-4, 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் மேட்டோ அர்னால்டி (இத்தாலி), ஜெவுமி முனார் (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஆட்டங்களில் 9-வது வரிசையில் உள்ள பார்பரா (செக் குடியரசு), லெசியா (உக்ரைன்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    • காயத்தால் ஏறக்குறைய ஓராண்டு நடால் சர்வதேச டென்னிஸ் போட்டியில் விளையாடவில்லை.
    • மெல்போர்ன் ரசிகர்கள் முன் விளையாட இயலாமல் போவது வருத்தம் அளிக்கிறது என நடால் தெரிவித்தார்.

    மெல்போர்ன்:

    முன்னாள் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்ததால் ஏறக்குறைய ஓராண்டு சர்வதேச டென்னிஸ் விளையாடவில்லை. பிரிஸ்பேன் டென்னிஸ் மூலம் மறுபிரவேசம் செய்த அவர் கால்இறுதியில் ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டான் தாம்சனிடம் தோற்று வெளியேறினார்.

    இந்த ஆட்டத்தின் போது 37 வயதான நடால் மீண்டும் காயத்தில் சிக்கினார். பரிசோதனையில் தசைநாரில் மிக நுண்ணிய கிழிவு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் வருகிற 14-ந்தேதி மெல்போர்னில் தொடங்கும் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

    இது குறித்து நடால் கூறுகையில் 'நல்லவேளையாக ஏற்கனவே காயம் ஏற்பட்ட இடத்தில் பிரச்சினை இல்லை. ஆனாலும் தற்போது 5 செட் வரை தாக்குப்பிடித்து விளையாடும் அளவுக்கு தயாராக முடியாது. அதனால் தாயகம் திரும்பி, எனது டாக்டரை கலந்தாலோசித்து சிகிச்சை மற்றும் ஓய்வு எடுக்க உள்ளேன். உற்சாகமான ஆதரவு அளிக்கும் மெல்போர்ன் ரசிகர்கள் முன் விளையாட இயலாமல் போவது வருத்தம் அளிக்கிறது' என்றார். 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான நடால், 2009, 2022-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபனை வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி அணிகள் முன்னேறின.
    • இதில் 2-0 என்ற கணக்கில் இத்தாலி அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    மலாகா:

    கிரிக்கெட்டில் உலகக்கோப்பையைப் போன்று டென்னிஸில் டேவிஸ் கோப்பை போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை ஸ்பெயினில் இந்த தொடர் நடைபெற்றது.

    இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி அணிகள் முன்னேறின. இதில் 2-0 என்ற கணக்கில் இத்தாலி அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    இறுதிப்போட்டியில் இத்தாலி வீரரான ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை 6-3 6-0 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

    1976-ம் ஆண்டுக்கு பிறகு இத்தாலி அணி டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டி நடைபெற்றது.
    • இதில் செர்பிய வீரர் ஜோகோவிச், இங்கிலாந்து வீரர் கேமரூன் நூரியை வீழ்த்தினார்.

    லண்டன்:

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், இங்கிலாந்து வீரர் கேமரூன் நூரியுடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    போட்டியின் போது ஜோகோவிச் விளையாடுகையில் இங்கிலாந்து ரசிகர்கள் டிரம்ஸ் கொட்டி வெறுப்பேற்றினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஜோகோவிச், போட்டிக்கு பிறகு பேசுகையில், வாயை மூடுங்கள், அமைதியாக இருங்கள். விளையாட்டு வீரர்களை மதியுங்கள் என காட்டமாக கூறினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    • டென்னிஸ் வரலாற்றில் இதற்கு முன்பு யாரும் செய்திராத ஒன்று.
    • நீண்ட காலம் இச்சாதனை நிலைத்து நிற்கும் என்று நம்புகிறேன்.

    துரின்:

    தரவரிசையில் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்ற ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3. 6-3 என்ற நேர் செட் கணக்கில் 4-ம் நிலை வீரர் யானிக் சின்னெரை (இத்தாலி) வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். லீக்கில் அவரிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டார்.

    இந்த பட்டத்தை ஜோகோவிச் ருசிப்பது இது 7-வது முறையாகும். இதற்கு முன்பு 2008, 2012, 2013, 2014, 2015, 2022 ஆகிய ஆண்டுகளிலும் வாகை சூடியுள்ளார். இதன் மூலம் இந்த பட்டத்தை இதற்கு முன்பு அதிக முறை வென்றிருந்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் (6 தடவை) சாதனையை முறியடித்தார்.

    போட்டி கட்டணம் உள்பட மொத்தம் ரூ.36¾ கோடியை ஜோகோவிச் பரிசுத்தொகையாக அள்ளினார். 2-வது இடத்தை பிடித்த சின்னெருக்கு ரூ.21½ கோடி கிடைத்தது.

    இதன் பின்னர் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. முதலிடத்தை ஜோகோவிச் ஏற்கனவே தக்க வைத்துக் கொண்டார். 2012-ம் ஆண்டில் முதல்முறையாக 'நம்பர் ஒன்' அரிணையில் ஏறிய ஜோகோவிச், அதன் பிறகு ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறார். தற்போது செப்டம்பர் 11-ந்தேதியில் இருந்து முதலிடத்தில் தொடருகிறார்.

    இது அவர் 'நம்பர் ஒன்' இடத்தை அலங்கரிக்கும் 400-வது வாரமாகும். இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் இவர் தான். இந்த சாதனை பட்டியலில் ஜெர்மனி முன்னாள் வீராங்கனை ஸ்டெபி கிராப் 377 வாரங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறார்.

    36 வயதான ஜோகோவிச் கூறுகையில், '400 வாரங்கள் முதலிடம் என்பது மிகப்பெரிய சாதனை. டென்னிஸ் வரலாற்றில் இதற்கு முன்பு யாரும் செய்திராத ஒன்று. என்றாலும் அடுத்து வேறு எந்த வீரராவது இந்த சாதனையை முறியடிப்பார்கள். ஆனால் நீண்ட காலம் இச்சாதனை நிலைத்து நிற்கும் என்று நம்புகிறேன்' என்றார்.

    ×