search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் சுமித் நாகல்- டாலன் கிரீக்ஸ்பூர் ஆகியோர் மோதினர்.
    • முதல் 2 செட்டை டாலன் கிரீக்ஸ்பூர் எளிதாக கைப்பற்றினார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த சுமித் நாகல் நெதர்லாந்தை சேர்ந்த டாலன் கிரீக்ஸ்பூர் ஆகியோர் மோதினர்.

    இதில் முதல் 2 செட்டை டாலன் கிரீக்ஸ்பூர் எளிதாக கைப்பற்றி 6-1, 6-3 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்றார். 3-வது செட்டில் கடுமையாக போராடிய சுமித் நாகல் 6-7 என்ற கணக்கில் வீழ்ந்தார்.

    இறுதியில் டாலன் கிரீக்ஸ்பூர் 6-1, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தி அடுத்து சுற்றுக்கு முன்னேறினார். சுமித் நாகல் முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தார். 

    • மரியா சக்காரி காயம் காரணமாக விலகினார்.
    • இதனால் யபாங் வாங் வெற்றி பெற்று முதல் நபராக 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    நியூயார்க்:

    ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நேற்று தொடங்கியது. செப்டம்பர் 8-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன்கள் நோவக் ஜோகோவிச் (ஆண்கள் ஒற்றையர்), கோகோ காப் (பெண்கள் ஒற்றையர்) உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் மரியா சக்காரி (கிரீஸ்), 80-ம் நிலை வீராங்கனையான சீனாவின் யபாங் வாங்கை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை மரியா சக்காரி 2-6 என்ற கணக்கில் இழந்த நிலையில் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டார். இதற்காக மைதானத்தில் சிகிச்சை பெற்ற சக்காரி வலி தாங்க முடியாததால் போட்டியில் இருந்து விலகினார். இதனால் யபாங் வாங் வெற்றி பெற்று முதல் நபராக 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 

    மற்றொரு ஆட்டத்தில் 24-ம் நிலை வீராங்கனையான டோனா வெகிச் (குரோஷியா) 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் கிம்பெர்லி பிரெல்லை விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 13-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீராங்கனை டாரினா கசட்கினா 6-2, 6-4 என்ற நேர்செட்டில் ஜாக்லின் கிறிஸ்டினை (ருமேனியா) வெளியேற்றினார்.

    மற்ற ஆட்டங்களில் ரஷியாவின் எரிகா ஆன்ட்ரீவா 6-3, 7-6 (9-7) என்ற நேர்செட்டில் சீனாவின் யூ யுயானையும், பிரான்ஸ் வீராங்கனை டியானே பாரி 7-6 (7-2), 7-6 (7-5) என்ற நேர்செட்டில் ஜியு வாங்கையும் (சீனா), உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் மரியா லோர்டெஸ் கார்லியையும் (அர்ஜென்டினா), அசரென்கா 3-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்டாரோதுப்ட்சேவாவை வீழ்த்தினர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தொடக்க சுற்று ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் வீரர் ஹூம்பெர்ட் 6-3, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் பிரேசிலின் தியாகோ மான்டிரோவை தோற்கடித்தார்.

    • அமெரிக்க ஓபனில் மீண்டும் மகுடம் சூடினால், ஜோகோவிச் புதிய வரலாறு படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • உலக தரவரிசையில் 75-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் களம் இறங்குகிறார்.

    நியூயார்க்:

    ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 144-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 2 வாரம் நடக்கிறது. கடின தரையில் நடைபெறும் இந்த போட்டிக்கு சிறப்பாக தயாராகும் பொருட்டு முன்னணி வீரர், வீராங்கனைகள் நியூயார்க்கில் முகாமிட்டு தீவிர பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 'நம்பர் ஒன்' வீரரும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான ஜானிக் சினெர் (இத்தாலி) நடப்பு சாம்பியனும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 3-வது இடம் வகிப்பவரும், பிரெஞ்சு, விம்பிள்டன் சாம்பியன் பட்டங்களை அடுத்தடுத்து ருசித்தவருமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) ஆகிய மூவர் இடையே தான் பட்டத்தை கைப்பற்றுவதில் நேரடி போட்டி நிலவுகிறது.

    இந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பெரிய அளவில் சோபிக்காத ஜோகோவிச் சமீபத்தில் நடந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அல்காரசை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றி தனது நீண்ட நாள் ஏக்கத்தை தணித்தார். அதன் பிறகு ஜோகோவிச் கலந்து கொள்ளும் முதல் போட்டி இதுவாகும். அனுபவசாலியான அவர் அதிக பட்டங்கள் வென்று குவித்து இருந்தாலும் சாதிக்க வேண்டும் என்ற தாகம் தனக்கு இன்னும் குன்றவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், 'தற்போது நீங்கள் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் உள்பட எல்லாவற்றையும் வென்றுள்ளீர்கள். வெற்றி பெற வேறு என்ன இருக்கிறது என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். என்னிடம் இன்னும் போட்டி உத்வேகம் உள்ளது. மேலும் பல சாதனைகள் படைத்து போட்டி தொடரை அனுபவிக்க விரும்புகிறேன். 2008-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க ஓபன் ஒற்றையரில் வீரர்கள் யாரும் பட்டத்தை தக்கவைக்கவில்லை என்ற நிலைமை இந்த ஆண்டு மாறும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு போட்டி தொடரிலும் இறுதி சுற்றுக்கு முன்னேறுவதுடன் கோப்பைக்காக போராட வேண்டும் என்பது தான் எனது இலக்காகும். அந்த மாதிரியான மனநிலையும், அணுகுமுறையும் இந்த ஆண்டும் தொடரும்' என்றார்.

    4 முறை சாம்பியனான ஜோகோவிச் அமெரிக்க ஓபனில் மீண்டும் மகுடம் சூடினால், ஒட்டுமொத்தத்தில் அதிக கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்றவர்களில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்க்கரேட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    37 வயதான ஜோகோவிச் தனது முதல் சுற்று ஆட்டத்தில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய 152-ம் நிலை வீரரான மால்டோவாவின் ராடு அல்போட்டை எதிர்கொள்கிறார். இதேபோல் 'நம்பர் ஒன்' வீரர் இத்தாலியின் ஜானிக் சினெர், 93-ம் நிலை வீரரான அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்டுடன் மோது கிறார். ஸ்பெயினின் இளம் புயல் கார்லஸ் அல்காரஸ் தனது முதல் மோதலில் தகுதி சுற்று மூலம் ஏற்றம் பெற்ற 188-ம் நிலை வீரரான லீ தூவை (ஆஸ்திரேலியா) சந்திக்கிறார்.

    இதற்கிடையே, பயிற்சியின் போது 21 வயது அல்காரஸ் வலது கணுக்காலில் காயம் அடைந்துள்ளார். இதனால் அவரால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. 'முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பயிற்சியை நிறுத்தினேன். பயிற்சியை தொடர்ந்து போட்டிக்கு சிறப்பாக தயாராக விரும்புகிறேன். ஒரிரு நாளில் முழு உடல் தகுதியை எட்டிவிடுவேன்' என்று அல்காரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேபோல் ஊக்க மருந்து சர்ச்சையில் இருந்து விடுபட்டு இந்த போட்டியில் ஆடும் ஜானிக் சினெர் எப்படி செயல்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது.

    கணிப்பு படி எல்லாம் சரியாக நகர்ந்தால் அல்காரஸ் அரைஇறுதியில் ஜானிக் சினெருடன் பலப்பரீட்சை நடத்த வேண்டியது வரலாம். முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டேனில் மெட்விடேவ் (ரஷியா), ஆந்த்ரே ருப்லெவ் (ரஷியா), ஹூபெர்ட் ஹர்காஸ் (போலந்து) உள்ளிட்ட வீரர்களும் கோப்பைக்காக வரிந்து கட்டுவார்கள் என்பதால் களத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    உலக தரவரிசையில் 75-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் களம் இறங்குகிறார். அவர் தனது முதல் ஆட்டத்தில் 28-ம் நிலை வீரரான நெதர்லாந்தின் தல்லோன்கிரிக்ஸ்பூருடன் மோதுகிறார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, ஸ்ரீராம் பாலாஜி, சுமித் நாகல், ரோகன் போபண்ணா ஆகியோர் தங்கள் இணையுடன் களம் காணுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 'நம்பர் ஒன்' நட்சத்திரம் இகா ஸ்வியாடெக் (போலந்து), முன்னாள் 'நம்பர் ஒன்' வீராங்கனையும், அண்மையில் நடந்த சின்சினாட்டி போட்டியில் பட்டம் வென்றவருமான அரினா சபலென்கா (பெலாரஸ்), நடப்பு சாம்பியனும், உள்ளூர் வீராங்கனையுமான கோகோ காப் ஆகியோரில் ஒருவர் பட்டம் வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இதேபோல் முன்னாள் சாம்பியன்களான எம்மா ரடுகானு (இங்கிலாந்து), நவோமி ஒசாகா (ஜப்பான்), அஸரென்கா (பெலாரஸ்), ஒலிம்பிக் சாம்பியன் கிங்வென் செங் (சீனா), எலினா ரைபகினா (கஜகஸ்தான்) உள்ளிட்டோரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஆச்சரியமில்லை.

    நடப்பு சாம்பியன் அமெரிக்காவின் கோகோ காப் தனது முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்சின் வர்வரா கிராசிவாவுடன் மோதுகிறார். 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி சுற்று மூலம் முன்னேறிய ரஷியாவின் கமிலா ராஹிமோவாவை சந்திக்கிறார். பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா தகுதி சுற்று மூலம் நுழைந்த 203-ம் நிலை வீராங்கனை பிரிசில்லா கானை (ஆஸ்திரேலியா) எதிர்கொள்கிறார். நவோமி ஒசாகா, எம்மா ரடுகானு ஆகியோருக்கு முதல் சுற்று கடினமாக அமைந்துள்ளது. ஒசாகா 10-ம் நிலை வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோவுடனும் (லாத்வியா), எம்மா ரடுகானு, 26-ம் நிலை வீராங்கனை சோபியா கெனினுடனும் (அமெரிக்கா) மல்லுக்கட்டுகின்றனர்.

    இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.629 கோடியாகும். இது கடந்த ஆண்டை விட 15 சதவீதம் அதிகமாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்பவருக்கு ரூ.30 கோடி பரிசாக கிடைக்கும். அத்துடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளியும் பெறுவார்கள். 2-வது இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைக்கு ரூ.15 கோடி பரிசாக வழங்கப்படும். ஒற்றையர் முதல் சுற்றில் கால் பதித்தாலே ரூ.83 லட்சம் தொகையுடன் தான் வெளியேறுவார்கள். இரட்டையர் பிரிவில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.6¼ கோடி பரிசாக கிடைக்கும்.

    இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 2, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. முதல் நாளில் ஜோகோவிச், கோகோ காப், கேஸ்பர் ரூட், ஆந்த்ரே ருப்லெவ், கிரெஜ்சிகோவா உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் ஆடுகிறார்கள்.

    • மான்டெர்ரி ஓபன் டென்னிஸ் தொடர் மெக்சிகோவில் நடைபெற்றது.
    • இதில் செக் வீராங்கனை நோஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார்.

    மெக்சிகோ:

    மான்டெர்ரி ஓபன் டென்னிஸ் தொடர் மெக்சிகோவில் நடைபெற்றது.

    இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, நியூசிலாந்தின் லுலு சன் உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிண்டா நோஸ்கோவா 7-6 (8-6), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.

    • அமெரிக்காவில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது.
    • இந்தியாவின் தக்ஷிணேஸ்வர் சுரேஷ் ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இந்த தொடரில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் தக்ஷிணேஸ்வர் சுரேஷ்-இங்கிலாந்தின் லூகா பவ் ஜோடி, அமெரிக்காவின் ஜாக்சன் வித்ரோ-நாதனியல் லேமன்ஸ் ஜோடி உடன் மோதியது.

    இந்த ஆட்டத்தில் தக்ஷிணேஸ்வர் சுரேஷ் ஜோடி 4-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 26-ம் தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது.
    • இதன் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் நெதர்லாந்து வீரரை சந்திக்க உள்ளார்.

    நியூயார்க்:

    ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் பிரபலமானவை. அதில் ஒன்று யு.எஸ். ஓபன் தொடராகும்.

    ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 26-ம் தேதி நியூயார்க்கில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் முறை மூலம் முடிவு செய்யப்பட்டது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் முதல் சுற்றில் 93-ம்நிலை வீரரான அமெரிக்காவின் மெக்டொனால்டை எதிர்கொள்கிறார்.

    ஒலிம்பிக் சாம்பியனும், நடப்பு அமெரிக்க ஓபன் சாம்பியனுமான முன்னணி வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதல் ரவுண்டில் தகுதி நிலை வீரரை சந்திக்கிறார்.

    இந்நிலையில், தரவரிசையில் 72 வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுமித் நாகல், தரவரிசையில் 40வது இடத்தில் உள்ள நெதர்லாந்து வீரர் டாலன் கிரீஸ்க்பூர் உடன் மோதுகிறார்.

    இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக், முதல் சுற்றில் தகுதிச்சுற்று மூலம் பிரதான சுற்றை எட்டும் வீராங்கனையை எதிர்கொள்கிறார்.

    • அமெரிக்காவில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது.
    • இந்தியாவின் தக்ஷிணேஸ்வர் சுரேஷ் ஜோடி காலிறுதியில் வென்றது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இந்த தொடரில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் தக்ஷிணேஸ்வர் சுரேஷ்-இங்கிலாந்தின் லூகா பவ் ஜோடி, ஈக்வடாரின் எஸ்கோபர்-கஜகஸ்தானின் நெடோவ்யெசோவ் ஜோடி உடன் மோதியது.

    இந்த ஆட்டத்தில் தக்ஷிணேஸ்வர் சுரேஷ் ஜோடி 6-1, 4-6, 10-8 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    • அமெரிக்காவில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது.
    • இதில் இந்தியாவின் தக்ஷிணேஸ்வர் சுரேஷ் ஜோடி வெற்றி பெற்றது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இந்த தொடரில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் தக்ஷிணேஸ்வர் சுரேஷ்-இங்கிலாந்தின் லூகா பவ் ஜோடி, உருகுவேயின் ஏரியல் பெஹர்-அர்ஜெண்டினாவின்ஆண்ட்ரஸ் மால்டெனி ஜோடி உடன் மோதியது.

    இந்த ஆட்டத்தில் தக்ஷிணேஸ்வர் சுரேஷ் ஜோடி 6-4, 5-7, 10-8 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் முதல் சுற்றில் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • அமெரிக்காவில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது.
    • இதில் இந்தியாவின் சுமித் நாகல் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இந்த தொடரில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், குரோசியாவின் போர்னா கோரிக் உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் போர்னா கோரிக் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தினார். இதன்மூலம் சுமித் நாகல் இந்தத் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு சபலென்கா மற்றும் ஜெசிகா பெகுலா ஆகியோர் தகுதி பெற்றனர்.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜன்னிக் சின்னெர், பிரான்சிஸ் தியாபோ உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

    சின்சினாட்டி:

    பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றிருந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு அரினா சபலென்கா (பெலாரஸ்) மற்றும் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) ஆகியோர் தகுதி பெற்றனர். இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட சபலென்கா 6-3 மற்றும் 7-5 என்ற நேர் செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜன்னிக் சின்னெர் (இத்தாலி), பிரான்சிஸ் தியாபோ (அமெரிக்கா) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சின்னெர், முதல் செட்டை டை -பிரேக்கர் வரை சென்று போராடி கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டை எளிதில் கைப்பற்றி வெற்றி பெற்றார். சின்னெர் இந்த ஆட்டத்தில் 7-6 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சிசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    • அரைஇறுதியில் இகா ஸ்வியாடெக்- அரினா சபலென்காவுடன் மோதினர்.
    • சின்சினாட்டி ஓபனில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு சபலென்கா முன்னேறினார்.

    மாசன்:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் மாசன் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதியில் ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவாவை வீழ்த்திய 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) நேற்று அரைஇறுதியில் 3-ம் நிலை வீராங்கனை அரினா சபலென்காவுடன் (பெலாரஸ்) கோதாவில் குதித்தார்.

    தனது அதிரடியான ஷாட்டுகளால் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-3, 6-3 என்ற நேர் செட்டில் ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்ததுடன், சின்சினாட்டி ஓபனில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கும் முன்னேறினார்.

    • அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ரஷிய வீராங்கனை மிரா ஆண்ட்ரிவா உடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை சாம்சனோவாவை 6-3, 6-2 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று இரவு நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இகா ஸ்வியாடெக். சபலென்காவை எதிர்கொள்கிறார்.

    ×