search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    டேவிஸ் கோப்பை: இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெற்றி
    X

    டேவிஸ் கோப்பை: இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெற்றி

    • டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் புதுடெல்லியில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியா, டோகோ அணிகள் மோதி வருகின்றன.

    புதுடெல்லி:

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் புதுடெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, டோகோ அணிகள் மோதி வருகின்றன.

    நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த் மற்றும் ராம்குமார் ராமநாதன் ஆகியோர் வெற்றி பெற்று, 2-0 என முன்னிலை பெற்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி-ரித்விக் சவுத்ரி போலிப்பல்லி ஜோடி, டோகோ ஜோடியை 6-2, 6-1 என எளிதில் வீழ்த்தியது. இந்தப் போட்டி 57 நிமிடங்களில் முடிவடைந்தது. இதன்மூலம் இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    Next Story
    ×