search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    ஏடிபி ஓபன் 13 டென்னிஸ்: நம்பர் 5 வீரருக்கு அதிர்ச்சி அளித்த பின்லாந்து வீரர்
    X

    ஏடிபி ஓபன் 13 டென்னிஸ்: நம்பர் 5 வீரருக்கு அதிர்ச்சி அளித்த பின்லாந்து வீரர்

    • பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் முதல் சுற்றில் நம்பர் 5 வீரரான அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா தோல்வி அடைந்தார்.

    பாரிஸ்:

    பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் 5 வீரரான அமெரிக்காவைச் சேர்ந்த செபாஸ்டியன் கோர்டா, பின்லாந்தின் ஓட்டோ விர்டானென் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 7-6 (7-3) என செபாஸ்டியன் கோர்டா வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ஓட்டோ விர்டானென் அடுத்த இரு செட்களை 7-6 (7-4), 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் நம்பர் 5 வீரரான செபாஸ்டியன் கோர்டா தொடரில் இருந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

    Next Story
    ×