search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    எடப்பாடி குறித்து சர்ச்சை கருத்து.. அண்ணாமலை உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு..!
    X

    எடப்பாடி குறித்து சர்ச்சை கருத்து.. அண்ணாமலை உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு..!

    • அதிமுக கொடியுடன் திரண்ட தொண்டர்கள் அண்ணாமலையின் உருவபொம்மையை எரித்தனர்.
    • எடப்பாடி பழனிசாமி குறித்து மிக கடுமையான கருத்துக்களை தெரிவித்தார்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவபொம்மை எரிப்பு. இந்த சம்பவம் காரணமாக கும்பகோணத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் அருகே அண்ணாமலையின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இதோடு எடப்பாடி பழனிசாமி குறித்து அண்ணாமலை தரம் தாழ்ந்து விமர்சித்ததாக கூறி போராட்டம் நடத்தப்பட்டது. அதிமுக கொடியுடன் திரண்ட தொண்டர்கள் அண்ணாமலையின் உருவபொம்மையை எரித்தனர்.


    முன்னதாக தமிழக பாஜக சென்னை பெருங்கோட்டம் சார்பில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை பேசும் போது, "தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயி மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு எந்த அதிகாரமும் கிடையாது" என்று மிகக் கடுமையாக பேசினார்.

    அண்ணாமலையின் இந்த கருத்துக்கு தமிழக அரசியல் களத்தில் பூதாகாரமாக வெடித்தது. அண்ணாமலை தெரிவித்த கருத்துக்களை கண்டித்து அதிமுக சார்பில் எச்சரிகை வாசகங்கள் அடங்கிய பேனர்கள் ஒட்டப்பட்டன. இதைத் தொடர்ந்து தான் அதிமுக தொண்டர்கள் சிலர் அவரது உருவபொம்மையை எரித்து போராடியுள்ளனர்.

    Next Story
    ×