search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஊட்டியில் வீட்டுக்குள் புகுந்து வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிறுத்தை- பொதுமக்கள் பீதி
    X

    ஊட்டியில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை, வளர்ப்பு நாயை (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது) கவ்வி சென்ற காட்சி.

    ஊட்டியில் வீட்டுக்குள் புகுந்து வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிறுத்தை- பொதுமக்கள் பீதி

    • ஊட்டி தமிழகம் சாலையில் வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை புகுந்தது.
    • நாயை சிறுத்தை தூக்கி செல்லும் காட்சி வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. சமீப நாட்களாக இங்கு குடியிருப்புகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று அதிகாலை ஊட்டி தமிழகம் சாலையில் வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை புகுந்தது. அங்குள்ள சுற்றுச்சுவரை தாண்டி குதித்து வீட்டுக்குள் நுழைந்தது. வீட்டு முன்பு வராண்டா பகுதியில் படுத்து கிடந்த வளர்ப்பு நாயை சிறுத்தை அலேக்காக கவ்வி சென்றது. சத்தம் கேட்டு எழுந்து வந்த வீட்டின் உரிமையாளர், வளர்ப்பு நாயை காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.

    நாயை சிறுத்தை தூக்கி செல்லும் காட்சி வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    ஊட்டி எச்.பி.எப் பகுதியில் பசுமாட்டை புலி தாக்கி கொன்றது. அப்பகுதியில் புலி நடமாட்டத்தை கண்காணிக்க, 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×