search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.54 லட்சம் கிடைத்தது
    X

    மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.54 லட்சம் கிடைத்தது

    • சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது.
    • மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் ரூ.54 லட்சத்து 37 ஆயிரத்து 13 ரொக்கமாகவும், 374 கிராம் தங்கம், 753 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக வரப்பெற்றது.

    மாங்காடு:

    இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கடந்த 2022-2023-ம் ஆண்டு சட்டமன்ற மானிய கோரிக்கையில், "இதர மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கும், தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்பட தமிழக கோவில்களில் இருந்து இதர மாநில கோவில்களுக்கு வஸ்திர மரியாதை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் ஏற்கனவே சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது. தற்போது, காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் வைகுண்ட பெருமாள் எம்பார் சாமி கோவிலில் இருந்து பரிவட்ட மரியாதை, மாலை ஆகியவை கர்நாடக மாநிலம் மேல்கோட்டை, செல்வ நாராயண பெருமாள் கோவிலுக்கு வழங்கி வஸ்திர மரியாதை செய்யப்பட்டது. இதேபோல் மாங்காடு, காமாட்சி அம்மன் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டது.

    கோவில் பரம்பரை தர்மகர்த்தா டாக்டர் மணலி ஆர்.சீனிவாசன், துணை ஆணையர்-செயல் அலுவலர் பெ.க.கவெனிதா மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட உதவி ஆணையர் ஆ.முத்துரத்தினவேலு மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.54 லட்சத்து 37 ஆயிரத்து 13 ரொக்கமாகவும், 374 கிராம் தங்கம், 753 கிராம் வெள்ளியும் காணிக்கையாக வரப்பெற்றது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×