search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ளத்தில் இடிந்து விழுந்த வீடு- உரிமையாளர் கதறல்
    X

    வெள்ளத்தில் இடிந்து விழுந்த வீடு- உரிமையாளர் கதறல்

    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
    • பெரும்பாலான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு தொடங்கி இந்த மாவட்டங்களில் அனைத்துப் பகுதிகளிலும் கனமழை பெய்ய தொடங்கியது.

    இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நகர பகுதியில் உள்ள சாலைகள், தெருக்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நெல்லை டவுன் பகுதியில் கனமழை வெள்ளத்தால் கான்க்ரீட் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில், வீடு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வெள்ளத்தில் விழுகிறது. அப்போது பெண் ஒருவர் எல்லாம் போச்சே என்று கூறி கதறுவது கேட்பாரை கண்கலங்க செய்துள்ளது.




    Next Story
    ×