என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி... திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி...](https://media.maalaimalar.com/h-upload/2024/01/02/1998986-modi02.webp)
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி...
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பிரதமரின் வருகையையொட்டி, திருச்சி விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையம் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பட்டமளிப்பு விழாவில் 33 மாணவர்களுக்கு பட்டங்களை பிரதமர் மோடி வழங்குகிறார். பின்னர் "எதிர்கால திட்டங்கள் தயாரா?" என தலைப்பில் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.
பல்கலைக்கழக துணை வேந்தர் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கினார்.
பட்டம் பெறும் மாணவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். பட்டம் பெறும் மாணவர்கள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். சுமார் 250 மாணவ, மாணவிகள் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
பட்டமளிப்பு விழாவை முடித்துக்கொண்டு பகல் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, புதிய முனையத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
பிரதமரின் வருகையையொட்டி, திருச்சி விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு இடங்களும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையம் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.