search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேளாண் பட்ஜெட்: 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்...

    • நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
    • 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.

    தமிழக சட்டசபையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    அதனைத்தொடர்ந்து, 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்க உள்ளது.

    Live Updates

    • 15 March 2025 9:44 AM IST

      இருபோக சாகுபடி பரப்பு 33 லட்சத்து 60 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 

    • 15 March 2025 9:43 AM IST

      கேழ்வரகு உற்பத்தியில் முதலிடத்திலும், கரும்பு உற்பத்தியில் 2-வது இடத்திலும் தமிழகம் உள்ளது-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    • 15 March 2025 9:42 AM IST

      ரூ.510 கோடி செலவில் உழவர்களின் வேளாண் கருவிகள் தேவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

    • 15 March 2025 9:42 AM IST

      55 ஆயிரம் உழவர்களுக்கு வேளாண் கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    • 15 March 2025 9:41 AM IST

      தமிழகத்தில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    • 15 March 2025 9:41 AM IST

      வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்கள், தி.மு.க. உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்து அவையில் பங்கேற்றுள்ளனர். 

    • 15 March 2025 9:39 AM IST

      உழவர்களின் வாழ்வில் வேளாண் பட்ஜெட் மேலும் வளர்ச்சியைத் தரும்-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    • 15 March 2025 9:37 AM IST

      வேளாண்மை அறிவியல் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு பல்கி பெருகி உள்ளது-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    • 15 March 2025 9:37 AM IST

      5-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    • 15 March 2025 9:36 AM IST

      விவசாயத்துடன் உழவர்களின் நலனையும் மையப்படுத்தி வேளாண் பட்ஜெட் தயாரிப்பு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    Next Story
    ×