search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒரு கல் ஒரு கண்ணாடி புரட்சியை ஏற்படுத்திய திரைப்படம் - அமைச்சர் சா.மு. நாசர்
    X

    ஒரு கல் ஒரு கண்ணாடி புரட்சியை ஏற்படுத்திய திரைப்படம் - அமைச்சர் சா.மு. நாசர்

    • வீடியோக்களில் கமென்ட் செய்து வருகின்றனர்.
    • இந்தப் படம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.

    சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சா.மு. நாசர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகராக இருந்த போது வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தை புகழ்ந்து பேசியுள்ளார்.

    இது குறித்து பேசும் போது, "அவருக்கும் கல்லுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பல பேர் பல படங்களை எடுத்தார்கள். பல ஜாம்பவான்கள் படங்களை எடுத்தார்கள். அந்த படங்கள் எல்லாம் தோல்வி அடைந்துள்ளது. ஒரு சில படங்கள் பெரிய வசூல் செய்துள்ளது. ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடி என்று ஒரு படம் எடுத்தார். மகத்தான, மாபெரும், மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. அதிலும் பார்த்தீர்கள் என்றால் கல் தான்," என்று கூறினார்.

    உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா மோத்வானி, சந்தானம் மற்றும் பலர் நடித்து வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வெளியாகி 12 ஆண்டுகள் முடிந்து விட்டது. இந்தப் படம் நகைச்சுவை கலந்த காதல் கதையம்சம் கொண்டிருந்தது.

    இந்த நிலையில், ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் புரட்சியை ஏற்படுத்தியதாக அமைச்சர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பலர், இது தொடர்பான வீடியோக்களில் கமென்ட் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×