search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    யார் யாரை பிரிப்பது என்பதை பார்ப்போம்- அண்ணாமலைக்கு கனிமொழி பதிலடி
    X

    யார் யாரை பிரிப்பது என்பதை பார்ப்போம்- அண்ணாமலைக்கு கனிமொழி பதிலடி

    • எதிர்க்கட்சிகள் முன்வைக்கக்கூடிய விவாதங்களுக்கு அவர்கள் செவிசாய்ப்பதில்லை என்பதே உண்மை.
    • ஜனநாயகத்தின் மீது பாராளுமன்றத்தின் மீது இருக்கக்கூடிய மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது.

    காஞ்சிபுரத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கவர்னரே வேண்டாம் என்கிறோமே. கவர்னர் கவர்னராக செயல்படவில்லை. ஒரு அரசியல்வாதியாக தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

    * ஐஸ் என்று சொல்லுவோம் வருமான வரி, சிபிஐ, அமலாக்கத்துறை. இப்போது கவர்னர்களை 4-வது கரமாக தன்னுடைய ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு பிரச்சனையை உருவாக்குவதற்காக தொடர்ந்து எதிராக செயல்படுவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள்.

    * எதிர்க்கட்சிகள் சொல்லக்கூடிய கருத்துகளை கேட்கக்கூடிய பொறுமை ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஆளும் பா.ஜ.க.வுக்கு இல்லை. எந்த எதிர்வாதமாக இருந்தாலும் யார் பேசினாலும் சரி எதிர்க்கட்சிகள் சொல்லக்கூடிய கருத்துகளை கேட்பதற்கு அவர்கள் தயாராக இல்லை.

    * நாங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கோ, எழுப்பக்கூடிய பிரச்சனைகளுக்கான விவாதங்களை ஏற்றுக்கொள்வதற்கோ அவர்கள் தயாராக இல்லை. எதிர்க்கட்சிகள் முன்வைக்கக்கூடிய விவாதங்களுக்கு அவர்கள் செவிசாய்ப்பதில்லை என்பதே உண்மை.

    * ஜனநாயகத்தின் மீது பாராளுமன்றத்தின் மீது இருக்கக்கூடிய மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது.

    * இதுபோன்று பேசியவர்கள் பலரை அறிவாலயம் பார்த்திருக்கிறது. தி.மு.க. பார்த்திருக்கிறது. யார், யாரை பிரிப்பது என்பதை பார்ப்போம் என்று அண்ணாமலைக்கு அவர் பதிலடி அளித்தார்.

    Next Story
    ×