search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவையில் 4 ஆடுகளை அடித்து கொன்ற பெண் சிறுத்தை உயிரிழந்தது
    X

    கோவையில் 4 ஆடுகளை அடித்து கொன்ற பெண் சிறுத்தை உயிரிழந்தது

    • கோவையில் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை 4 ஆடுகளை அடித்து கொன்றது.
    • வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்து கூண்டில் அடைத்தனர்.

    கோவை வடவள்ளி அடுத்த சிறுவாணி சாலை ஓணாப்பாளையம் பகுதியில் வெண்ணிலா என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு இந்த தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, தோட்டத்தில் வளர்த்து வந்த 8 ஆடுகளில் 4 ஆடுகளை அடித்து கொன்றது.

    இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதேபோல் தொண்டாமுத்தூர் பகுதியிலும் புகுந்த சிறுத்தை, அங்கும் ஆடுகளை அடித்து கொன்றது.

    இதையடுத்து வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்து கூண்டில் அடைத்தனர். பிடிபட்ட சிறுத்தையின் உடலில் காயங்கள் இருப்பதால், வனத்துறையினர் கால்நடை டாக்டர் குழுவினர் அதனை கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில், காயமடைந்து உடல் மெலிந்து காணப்பட்ட சிறுத்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

    Next Story
    ×