என் மலர்
தமிழ்நாடு

மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துவிட்டது என முதலமைச்சர் கூறுவதில் உண்மையில்லை: அமித் ஷா

- 2004-2014 வரை காங்கிரஸ் மத்தியில் ஆளும்போது தமிழகத்திற்கு 1,52,901 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
- மோடி தலைமையிலான என்டிஏ அரசு கடந்த 10 ஆண்டுகளில் 5,08,337 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாள் பயணமாக கோவை வந்துள்ளார். பாஜக சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பாஜக தொண்டர்களில் மத்தியில் அமித் ஷா உரையாற்றினார்.
அப்போது அமித் ஷா கூறியதாவது:-
* கோவை மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் சிவராத்திரி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
* உலகின் தொன்மையான தமிழ் மொழியில் தன்னால் பேச முடியவில்லை என்ற வர்த்தத்துடன் மன்னிப்பு கேட்டுக்கொண்டு என்னுடைய உரையை தொடங்குகிறேன்.
* பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகவும் அற்புதமான பட்ஜெட்டை தந்திருக்கிறார்.
* 2025-ம் ஆண்டு டெல்லி வெற்றியோடு தொடங்கியுள்ளது. அதேபோல் தமிழகத்தில் 2026-ம் ஆண்டு பாஜக தலைமையிலான என்.டி.ஏ. ஆட்சியோடுதான் தொடங்க போகிறது.
* தமிழ்நாட்டில் தேச விரோத, மக்கள் விரோத ஆட்சியான திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் காலம் நெருங்கிவிட்டது.
* 2026-ல் தமிழகத்தில் என்.டி.ஏ. ஆட்சி உருவாவது உறுதி.... உறுதி...
* வகுப்புவாதம், பிரிவினை வாதம் சிந்தனைகள் எல்லாம் முடிவுக்கு கொண்டு வரப்படும்.
* பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பிரதமர் மோடி தனித்துவமான முத்திரையை பதித்து கொண்டிருக்கிறார்.
* தமிழ் மக்களின் வாழ்வியல், தமிழ் மக்களில் மொழி வளம், கலாசாரம் உள்ளிட்டவைகளை போற்றக் கூடிய மபெரும் தலைவராக பிரதமர் மோடி இருந்து வருகிறார்.
* தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீரழிந்து காணப்படுகிறது. பெண்கள், சகோதரிகள் பாதுகாப்போடு சென்று வரும் சூழ்நிலை இல்லாதது மிகவும் மோசமான முன்உதாரணம்.
* வேங்கைவயலில் ஒரு சம்பவம் நடைபெற்று 700 நாட்கள் ஆகியும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் வழக்கு அப்படியே தொங்கிக் கொண்டிருக்கிறது.
* கள்ளச்சாராயம் புரையோடி கிடக்கிறது. கள்ளக்சாரயம் காய்ச்சுபவர்களை பிடிக்காமல், கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் என புகார் அளிக்கும் கல்லூரி மாணவர்கள் திடீரென கொள்ளப்படுகிறார்கள்.
* இப்போது தேச விரோத சிந்தனை மட்டும்தான் ஆட்சி கட்டிலில் இருக்கிறது.
* கனிம வளக் கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் உதவியுடன் மணல் கொள்ளை நடைபெற்று கொண்டிருக்கிறது.
* ஊழலில் திமுக தலைவர்கள் மாஸ்டர் டிகிரி பெற்றவர்களாக உள்ளனர். அதில் ஒருவர் தலைவர் வேலைவாங்கி தருவதாக பணம் பெற்று பெரும் சாதனை படைத்திருக்கிறார். இன்னொரு தலைவர் பணமோசடி வழக்கு மற்றும் செம்மணல் வழக்கில் மாட்டிக்கொண்டுள்ளார்.
* யார் யாரெல்லாம் ஊழல் பெருச்சாளிகளோ, யாரெல்லாம் ஊழல் செய்வதில் உச்சத்தில் இருக்கிறார்களோ அவர்களை தேடித்தேடித்தான் திமுக உறுப்பினர்களாக சேர்க்கும்போல் இருக்கிறது.
* ஊழல்வாதிகளால் தமிழ்நாடு மிகவும் துயரம் அடைந்திருக்கிறது. துன்பத்தில் இருக்கிறது. இது வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்கான தமிழ்நாடு முதல்வர் மற்றும் அவரது புதல்வர் புதுபுது பிரச்சனையை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.
* தற்போது நீங்கள் தொகுதி மறுசீரமைப்பு என்பதை ஒரு புதிய பிரச்சனையாக உருவாக்குகிறீர்கள். பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் தென்மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் கூட பாராளுமன்ற இடங்கள் குறையாது என்பதை தெளிவாக சொல்லி விட்டார். இந்த விசயத்தில் பொய் சொல்லி தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் புள்ளி விவரத்துடன் சொல்கிறேன். இழப்பு ஏற்படும் எனச் சொல்வது கண்டிக்கத்தக்கது. நான் உண்மையை உரைத்திருக்கிறேன். எனக்கு பதில் சொல்ல் கடமைப்பட்டுள்ளீர்கள்.
* 2004-2014 வரை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நலத்திட்டங்கள் மற்றும் மானியமாக 1,52,901 கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. மோடி தலைமையிலான என்டிஏ அரசு கடந்த 10 ஆண்டுகளில் 5,08,337 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஏறத்தாழ ஐந்து மடங்கு அதிகம்.
* கட்டுமான பணிகளுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் அவர்களே, மத்திய அரசு நிதி தரவில்லை என மக்களிடம் பொய் சொல்கிறீர்கள். நீங்கள் காங்கிரஸ் தலைமையில் ஆட்சியில் இருக்கும்போது தமிழக மக்களுக்கு உண்மையான துரோகம் செய்துள்ளீர்கள். மத்திய அரசு நலத்திட்டங்களுக்கான ஏராளமாக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துவிட்டது என முதலமைச்சர் கூறுவதில் உண்மையில்லை
இவ்வாறு அமித் ஷா பேசினார்.