என் மலர்
தமிழ்நாடு
தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் மழை நீர்- ரெயில்கள் புறப்படும் இடம் மாற்றம்
- ரெயில் நிலையத்தில் மழை நீர் தேங்கி இருப்பதன் காரணமாக 5 ரெயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி- நெல்லை, தூத்துக்குடி- வாஞ்சி மணியாச்சி உள்ளிட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் மழை நீர் தேங்கி இருப்பதன் காரணமாக 5 ரெயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, மழை பாதிப்பு காரணமாக தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய 4 ரெயில்கள் மீளவிட்டான் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி-மைசூரு விரைவு ரெயில் (16235) மாலை 05.15க்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும்.
சென்னை செல்லும் முத்துநகர் விரைவு ரயில்(12694) இரவு 08.25க்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும்.
தூத்துக்குடி-பாலக்காடு விரைவு ரயில் (16791) இரவு 10 மணிக்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும்.
தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் விரைவு ரயில் (16766) இரவு 10.50 மணிக்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், தூத்துக்குடி- நெல்லை, தூத்துக்குடி- வாஞ்சி மணியாச்சி உள்ளிட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.