என் மலர்
தமிழ்நாடு

X
நாடகத்தில் ஜெயக்குமாருக்கு வில்லன் வேடமா? காமெடி வேடமா?- ஆர்.எஸ்.பாரதி
By
மாலை மலர்7 March 2025 8:33 AM IST

- தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டம் நாடகமாகவே தோன்றுகிறது என்று ஜெயக்குமார் கூறினார்.
- 4 மணி நேரம் நடந்த கூட்டத்தில் நன்றாக சிரித்துவிட்டு, நாடகமாடினார் என்று கூறுகிறார்.
காஞ்சிரபுரத்தில் நடந்த விழாவில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது,
தொகுதி மறுசீரமைப்பு விவாதம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டம் நாடகமாகவே தோன்றுகிறது" என்று கூறினார்.
4 மணி நேரம் நடந்த கூட்டத்தில் நன்றாக சிரித்துவிட்டு, நாடகமாடினார் என்று கூறுகிறார்.
அவருக்கு கேட்கிறேன் நாங்கள் ஆடியது நாடகம் என்று சொன்னால், நாடகத்தில் நீங்கள் வில்லன் வேடமா...? காமெடி வேடமா...? என்று மக்களுக்கு சொல்ல வேண்டும் அல்லவா?
4 மணி நேர நாடகத்தில் நீங்களும் உட்கார்ந்துவிட்டு, நடித்தது வில்லன் வேடமா? காமெடியன் வேடமா? ஆக கூட்டத்தை அவர்களால் எந்த குறையும் சொல்ல முடியவில்லை என்று அவர் கூறினார்.
Next Story
×
X