என் மலர்
தமிழ்நாடு
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
கோடை வெயிலை சமாளிக்க காவலர்களுக்கு AC ஹெல்மெட்
By
மாலை மலர்4 March 2025 9:39 AM IST (Updated: 4 March 2025 9:58 AM IST)

- வாகன தணிக்கை, போக்குவரத்தை சீர் செய்யும் போக்குவரத்து காவலர்களுக்கு ஏ.சி. ஹெல்மெட் வழங்கப்பட்டது.
- காவலர்களுக்கு நாரால் செய்யப்பட்ட தொப்பியும், கண்ணாடியும் வழங்கப்பட்டன.
சென்னையில் அதிகாலையில் காணப்பட்ட பனிமூட்டம் குறைந்து தற்போது வெயில் அடிக்க தொடங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும்.
இந்நிலையில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் ஆவடி காவல் ஆணையரக போக்குவரத்து காவலர்களுக்கு காவல் ஆணையர் சங்கர் ஏ.சி. ஹெல்மெட் வழங்கினார்.
வாகன தணிக்கை மற்றும் போக்குவரத்தை சீர் செய்யும் 50-க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்களுக்கு ஆவடி காவல் ஆணையர் சங்கர், கூடுதல் காவல் ஆணையர் பவானீஸ்வரி ஆகியோர் ஏ.சி. ஹெல்மெட் வழங்கினர். இதேபோல் காவலர்களுக்கு நாரால் செய்யப்பட்ட தொப்பியும், கண்ணாடியும் வழங்கப்பட்டன.
கொளுத்தும் கோடை வெயில்... உயிர் காக்கும் காவலர்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்https://t.co/zI7muvB7bR#Avadi
— Thanthi TV (@ThanthiTV) March 4, 2025
Next Story
×
X