என் மலர்
தமிழ்நாடு
X
விருதுநகர் அருகே லாரி மீது வாகனங்கள் மோதி விபத்து- 3 பேர் பலி
Byமாலை மலர்12 Feb 2025 7:58 AM IST
- லாரி ஓட்டுநர் பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த இருசக்கர வாகனம் மற்றும் மினி சரக்கு வாகனம் அடுத்தடுத்து மோதிய விபத்துக்குள்ளானது.
- மினி சரக்கு வாகனத்தில் வந்த மற்றொருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
விருதுநகர்:
மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் அருகே அதிகாலையில் வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் அருகே லாரி ஓட்டுநர் சட்டென பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த இருசக்கர வாகனம் மற்றும் மினி சரக்கு வாகனம் அடுத்தடுத்து மோதிய விபத்துக்குள்ளானது. இந்த வாகன விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மினி சரக்கு வாகனத்தில் வந்த மற்றொருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X