search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக மக்களிடம்  அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும்- விஜய் வசந்த் MP வலியுறுத்தல்
    X

    தமிழக மக்களிடம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும்- விஜய் வசந்த் MP வலியுறுத்தல்

    • தமிழ்நாடு மீது மத்திய அரசு கொண்டுள்ள பாரபட்சமான நிலைப்பாடு மீண்டும் தெரிய வந்துள்ளது.
    • தர்மேந்திர பிரதானை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:-

    நேற்று மக்களவையில் புதிய கல்வி கொள்கை குறித்து நடந்த விவாதத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறினார். மேலும் தமிழ்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து பாராளுமன்ற சபை என்று கூட பாராமல் அவதூறுகளை கூறினார். ஒரு மத்திய அமைச்சருக்கு இது ஒருபோதும் பொருந்தாத ஒன்று.

    அவரது சொற்கள் தமிழகத்தின் வாக்காளர்கள் மீதான தாக்குதல். தமிழ்நாடு மீது மத்திய அரசு கொண்டுள்ள பாரபட்சமான நிலைப்பாடு மீண்டும் தெரிய வந்துள்ளது.

    தமிழக மக்களிடம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் பிரதமர், தர்மேந்திர பிரதானை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். சபாநாயகர் அவர்கள் தமிழக மக்களுக்கு எதிராக அமைச்சர் கூறிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    Next Story
    ×