என் மலர்
வங்காளதேசம்
- வங்கதேச எல்லையில் முள்வேலி அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டது.
- சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்தது.
டாக்கா:
இந்தியா-வங்கதேசம் நாடுகல் 4,096 கி.மீ. நீளம் உடைய எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இது உலக அளவில் 5-வது அதிக நீளமுள்ள எல்லையாகக் கருதப்படுகிறது.
வங்கதேச எல்லை வழியாக நம் பகுதிக்குள் ஊடுருவல், கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதைக் கட்டுப்படுத்த முள்வேலி அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டது.
அதுமட்டுமின்றி, வங்கதேசத்தில் சிறுபான்மையினர்களான இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
இதற்கிடையே, இந்தியா-வங்கதேச எல்லையில் 5 இடங்களில் இந்தியா இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி வேலிகள் அமைக்க முயற்சிப்பதாக வங்கதேச அரசு குற்றம்சாட்டியது.
இந்நிலையில், இதுதொடர்பாக நேரில் விளக்கம் தரக்கோரி அடுத்த சில மணி நேரத்திலேயே இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியது.
இதையடுத்து, டாக்காவில் வங்கதேசத்திற்கான இந்திய தூதர் பிரணய் வர்மா, வெளியுறவு செயலாளர் ஜாஷிம் உதீனைச் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.
இந்தச் சந்திப்பு குறித்து வங்கதேச இடைக்கால அரசு அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.
- 1769 தாக்குதல் மற்றும் நாசவேலை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அறிக்கை கூறுகிறது.
- 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 65 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மானவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிளான இடைக்கால அரசு பொறுப்பேற்றது.
வங்கதேச மக்கள் தொகையில் 7.65 சதவீதம் உள்ள இந்து சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற தொடங்கியது.

இந்துக்களின் கோவில்கள் தாக்கப்பட்டன. துர்கா பூஜையின்போது இந்த சம்பவங்கள் அதிகம் அரங்கேறின. இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்துக்கள் மீதான வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே இந்துக்களின் போராட்டத்தைத் தூண்டியதாக இஸ்கான் மத அமைப்பை சேர்ந்த சின்மோய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை, அரசியல் ரீதியானது என்றும் [மத] வகுப்புவாத ரீதியானது அல்ல என்று யூனுஸ் அரசு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக காவல்துறை தரவுகள் அந்த அறிக்கையில் மேற்கோள் கட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த தாக்குதல்களில் பல 'வகுப்புவாத ரீதியானவை' என்பதை அரசு ஒப்புக்கொண்டாலும் பெரும்பாலான தாக்குதல்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றே கூறப்பட்டுள்ளது.
மொத்த வன்முறை சம்பவங்களில், 1769 தாக்குதல் மற்றும் நாசவேலை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அறிக்கை கூறுகிறது.
கூற்றுக்களின் அடிப்படையில் இதுவரை 62 வழக்குகளில் காவல்துறையினர் விசாரணையின் அடிப்படையில் குறைந்தது 35 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
எவ்வாறாயினும், இதில் 1,234 சம்பவங்கள் அரசியல் காரணங்களுக்காகவே நடந்துள்ளன வகுப்புவாத சம்பவங்கள் குறைவு என்றும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
ஆகஸ்ட் 5 முதல் ஜனவரி 8, 2025 வரை 134 வகுப்புவாத வன்முறை சம்பவங்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். போலீஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 65 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
வகுப்புவாத வன்முறை தொடர்பான புகார்களை நேரடியாகப் பெறவும், சிறுபான்மை சமூகத்தினருடன் தொடர்பைப் பேணவும் காவல்துறை வாட்ஸ்அப் எண்ணையும் வெளியிட்டுள்ளது.
வகுப்புவாத வன்முறைகளில் தொடா்புடைய குற்றவாளிகளை கைது செய்யவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது என்று அரசு கூறுகிறது.
- இடைக்கால அரசில் உள்ள சிலர் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பேசிவருகின்றனர்.
- வங்கதேச நீதிபதிகள் இந்தியாவில் பயிற்சி பெறும் திட்டம் ரத்து செய்யப்பட்டது.
டாக்கா:
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்து இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல் இந்தியா உடனான உறவு சீர்குலைந்துள்ளது.
இடைக்கால அரசின் பொறுப்பில் உள்ள சிலர் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைப் பேசி வருகின்றனர். சிறுபான்மை இந்துக்கள் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றர்.
இதற்கிடையே, வங்கதேச நீதிபதிகள் சுமார் 50 பேர் இந்தியாவில் பயிற்சி பெறும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வங்கதேச அரசின் சட்டத்துறை, நீதித்துறை மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்று வெளியிட்டது.
அந்த அறிக்கையில், வங்கதேச நீதிபதிகள் இந்தியாவில் பயிற்சி பெறும் திட்டம் ரத்து செய்யப்பட்டது என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்தவேண்டும் என்ற வங்கதேச அரசின் கோரிக்கை குறித்து இந்திய அரசு பதில் தெரிவிக்காத நிலையில், வங்கதேச நீதிபதிகளின் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
- தேசத்துரோக வழக்கு என்பதால் ஜாமின் வழங்க அரசுத்தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
- அவரது வாதத்தை ஏற்ற நீதிபதி சின்மய் கிருஷ்ண தாசின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
டாக்கா:
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவி ஏற்ற பிறகு, சிறுபான்மை இந்துக்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள்மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடக்கின்றன. இது இந்துக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, கடந்த நவம்பர் 25-ம் தேதி இந்து அமைப்பின் தலைவரும், இஸ்கான் முன்னாள் துறவியுமான சின்மய் கிருஷ்ணதாஸ் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். மறுநாள் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. இதனால் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கோர்ட்டுக்கு வெளியே நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், சின்மய் கிருஷ்ணதாசின் ஜாமின் மனு மீதான விசாரணை சட்டோகிராம் பெருநகர அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசத்துரோக வழக்கு என்பதால் ஜாமின் வழங்க அரசுத்தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது வாதத்தை ஏற்ற நீதிபதி சைபுல் இஸ்லாம், குற்றம்சாட்டப்பட்ட சாமியார் சின்மய் கிருஷ்ண தாசின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனால் ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளோம் என சின்மய் கிருஷ்ணதாசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
- வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
- ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது நடைபெற்ற கொலைக்கு ஷேக் ஹசீனாதான் காரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவை திருப்பி அனுப்ப இந்தியாவுக்கு வங்கதேச அரசு வாய்மொழியாக கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் அமைந்துள்ள இடைக்கால அரசு ஷேக் ஹசினாவை மீட்டு விசாரிக்க திட்டமிட்டுள்ளது.
- 5 பேர் கொண்ட ஆணையத்தை யூனுஸ் தலைமையிலான அரசு அமைத்தது.
- கைதிகள் பரிப்புமாற்றம் குறித்த புலனாய்வுத் தகவல்களை கண்டறிந்துள்ளதாக ஆணையம் தெரிவித்தது.
வங்கதேசத்தில் ஷேக் ஹனீசா ஆட்சிக்காலத்தில் அரசுக்கு எதிரான கருத்துக்களை கொண்ட பலர் காணாமல் போயினர். அவர்களுக்கு அடுத்து என்ன ஆனது என்ற தகவல்கள் இன்று வரை தெரியவரவில்லை.
கடந்த ஆகஸ்டில் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி முடிவுக்கு வந்த பின் சிறையில் இருந்து விடுதலையான அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது.
ஷேக் ஹசீனா ஆட்சியில் வலிந்து காணாமல் ஆகாதவர்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட ஆணையத்தை யூனுஸ் தலைமையிலான அரசு அமைத்தது.
இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் போது எதிர் கருத்து உடையவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் இந்தியாவின் தொடர்பு இருப்பதை அந்த குழு கண்டறிந்துள்ளதாக அரசு நடத்தும் செய்தி நிறுவனமான பிஎஸ்எஸ் நேற்று [சனிக்கிழமை] தெரிவித்துள்ளது.
ஆணையத்தின் அறிக்கைப்படி, காணாமல் போனவர்களில் சிலர் இன்னும் இந்திய சிறைகளில் இருக்கலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நடந்த கைதிகள் பரிப்புமாற்றம் குறித்த புலனாய்வுத் தகவல்களை கண்டறிந்துள்ளதாக ஆணையம் தெரிவித்தது.
இந்தியாவில் இன்னும் சிறையில் இருக்கும் வங்கதேச குடிமக்களை அடையாளம் காண வங்கதேச வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்களை ஆணையம் வலியுறுத்தி உள்ளது. மேலும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,500க்கு மேல் இருக்கும் என்று ஆணையம் மதிப்பிட்டுள்ளது..
- தினாஜ்பூரில் உள்ள பிர்கஞ்ச் பகுதியில் காளி கோவிலில் 5 சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.
- இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
வங்காளதேசத்தில் சமீபகாலமாக சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து உள்ளன. கோவில்களும் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்காளதேசத்தில் மேலும் 3 கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
தினாஜ்பூரில் உள்ள பிர்கஞ்ச் பகுதியில் காளி கோவிலில் 5 சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் பீல்தோரா, ஷாகுவாய் ஆகிய பகுதிகளில் உள்ள இந்து கோவில்களில் சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.

இது தொடர்பாக, பொலஷ்கந்தா கிராமத்தை சேர்ந்த அலல் உதின் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். வங்காளதேசத்தில், மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
அதன்பின் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்தது. இந்த தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக இடைக்கால அரசு தெரிவித்தது. ஆனாலும் இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
- இந்த கலவரத்தில் மொத்தமாக 650 பேர் வரை உயிரிழந்தனர்.
- சின்மோய் கிருஷ்ண தாஸ் நீதிமன்றம் வந்தபோது நடந்த கலவரத்தில் வக்கீல் கொல்லப்பட்டார்
இட ஒதுக்கீடும் மாணவர்கள் போராட்டமும்
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காகக் கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற வங்கதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். எனவே இட ஒதுக்கீடு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.

ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ப்பு
இருப்பினும் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. நிலைமை மோசமான நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.

பிரதமர் மாளிகை போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. வங்கதேசத்தின் தேசத் தந்தை என போற்றப்பட முஜிபுர் ரகுமானின் மகள் ஷேக் ஹசீனா 2009 முதல் தொடர்ச்சியாகப் பிரதமராக இருந்த நிலையில் அவரது 16 ஆண்டுகால ஆட்சி வெறும் 3 மாதகால மாணவர் போராட்டங்களால் முடிவுக்கு வந்தது.


இந்த கலவரத்தில் மொத்தமாக 650 பேர் வரை உயிரிழந்தனர். வங்கதேச பிரச்சனையால் அங்கிருந்து சாறை சாரையாக மக்கள் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதும், நிலைமையை சமாளிக்க அங்கு குவிக்கப்பட்ட எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை திருப்பி அனுப்பிய சம்பவங்களும் அரங்கேறின.
முகமது யூனுஸ்
ஷேக் ஹசீனாவால் அடக்குமுறையை சந்தித்த பலர் அவரது ரகசிய சிறையான கண்ணாடிகளின் வீட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்கள்.
குறிப்பாக முகமது யூனுஸ் என்ற 84 வயது முதியவர் சிறையில் இருந்து விடுதலையானார். இவர் ஏழை மக்களை முன்னேற்ற பொருளாதார, சமூக முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காக 2006ஆம் ஆண்டில் அமைதிகான நோபல் பரிசை பெற்றவர். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தில் உருவானது.

ஆனால் வங்கதேசத்தின் மறு உருவாக்கம் முற்றிலும் மகிழ்ச்சியானதாக அமைந்துவிடவில்லை. இஸ்லாமிய பெரும்பாண்மை நாடான வங்கதேசத்தின் மக்கள் தொகையில் 22 சதவீதம் உள்ள சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது.
சிறுபான்மையினர் மீதான வன்முறை
யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசும் இதற்கு கண்டனம் கூறுவதை தவிர மேலதிக நடவடிக்கை எடுத்தற்கான சுவடுகள் எதுவும் இல்லை. சிறுபான்மையினரின் [இந்துக்களின்] வழிபாடு தளங்கள் குறிவைக்கப்பட்டன. அக்டோபர் தொடக்கத்தில் துர்கா பூஜை முதல் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தது. இந்துக்கள் பரவி வாழும் இடங்களில் இன்றைய தேதியும் பதற்றமான சூழலே நிலவுகிறது.
சிறுபான்மையினரின் மீதான வெறுப்பு வெகு மக்கள் இடையே பரப்படுவதும், பெரும்பான்மையினரின் பிரதிநிதிகளாக தங்களை வரையறுத்துக்கொள்ள்ளும் மத அடிப்படைவாத அமைப்புகளும் இந்த வன்முறை வெறியாட்டங்களுக்கு காரணமாக அமைகின்றன.


இதற்கு எதிராக இந்துக்கள் திரண்டு போராட்டம் நடத்தாமலும் இல்லை. அப்படி இந்துக்களை போராட்டங்களுக்கு தூண்டியதாக இஸ்கான் மத அமைப்பை சேர்ந்த மதகுரு சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவர் நீதிமன்றம் வந்தபோது நடந்த கலவரத்தில் வக்கீல் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொல்லப்பட்டார்.

தற்போது அவருக்காக எந்த வக்கீலும் ஆஜராக முன்வராத நிலையில் அவரது ஜாமீன் மீதான விசாரணை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் குறிவைக்கப்படுவதற்கு இந்தியாவும் சர்வதேச நாடுகளும் கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளன.
ஐ.நா. இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்பதே வங்கதேச இந்துக்களின் கோரிக்கையாக உள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் அதையே வலியறுத்தி உள்ளார்.
- ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்ததில் இருந்து வங்கதேசத்தில் மைனாரிட்டி மீது தாக்குதல் அதிகரிப்பு.
- தற்போது எதிர்க்கட்சி தலைவர் இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைத்துள்ளார். அதன்பின் வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்பின் வங்கதேசத்தில் மைனாரிட்டிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது அந்த தாக்குதல் அதிகரித்துள்ளது. துறவிகள் கைது உள்ளிட்ட பல்வேறு சம்பங்கள் நடைபெற்றுள்ளன.
இதனால் இந்தியா- வங்கதேச இடையிலான உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மைனாரிட்டிகள் மீது தாக்குப்படுவது வருந்ததக்கது என இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வங்கதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான பி.என்.பி. கட்சி தலைவர் ராகுல் கபீர் ரிஸ்வி, கட்சி தொண்டரக்ள் இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தயாரிக்கப்பட்ட போர்வையை எரித்து, எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இவர் பி.என்.பி. கட்சியின் இணை பொதுச் செயலாளர் ஆவார். ராஜ்ஷாஹி நகரில் நடைபெற்ற இந்திய பொருட்களை புறக்கணிப்போம் நிகழ்ச்சியில் போர்வையை எரித்தார். போர்வைய எரித்தபோது "இந்த போர்வை இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரில் இருந்து வந்தது. இது ஜெய்ப்பூர் டைக்டைல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்திய ஆக்கிரமிப்பு எதிர்ப்பு தெரிவிக்கவே இதை நாம் செய்கிறோம்.
நாங்கள் இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்கிறோம். ஏனென்றால் அவைகள் இந்த நாட்டு மக்களுக்கு வசதியாக இருக்காது. அவர்களை நட்பு ஷேக் ஹசீனாவுடன் மட்டும்தான்" என்றார்.
பின்னர் போர்வையை சாலையில் தூக்கியெறிந்து, தொண்டர்களை எரிக்கச் சொன்னால். அவர்கள் அதை எதிர்த்தனர். அப்போது வங்கதேசத்திற்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் கோசம் எழுப்பினர்.
- இந்தியாவுடன் உறவு வலுவானது. நெருக்கமானது.
- இந்துக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் கவலை அளிக்கிறது.
டாக்கா:
வங்காளதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
இதற்கிடையே வங்காள தேசத்தில் இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இதையடுத்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி வங்காள தேசத்துக்கு சென்று உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
பின்னர் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுசை விக்ரம் மிஸ்ரி சந்தித்து பேசினார். 40 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் சிறுபான்மையினரின் பிரச்சனைகள், தவறான தகவல் பிரச்சாரங்கள், ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியிருப்பது, பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து பேசினர்.
இதில் வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து விக்ரம் மிஸ்ரி கவலை தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் முகமது யூனுஸ் கூறும்போது, இந்தியாவுடன் உறவு வலுவானது. நெருக்கமானது. வங்கதேச மக்களின் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதில் அரசு உறுதி பூண்டுள்ளது.
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா பல கருத்துகளை அறிக்கைகள் மூலம் வெளியிடுகிறார். இது வங்காளதேசத்தில் பதட்டத்தை உருவாக்குகிறது. இதுபற்றி எங்கள் மக்கள் கவலைபடுகிறார்கள்.
ஷேக் ஹசீனாவின் ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது தொழிலாளர்கள் மற்றும் மக்கள் என அனைவரும் கைகோர்த்தனர். ஆனால் அவரின் கருத்துகளால் இங்கு பதற்றம் ஏற்படுகிறது.
ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாப்பதற்கும் அவர்களின் மதம், நிறம், இனம் மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் இடைக்கால அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றார்.
- 500 பேர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான உறவிலும் பாதிப்பு.
டாக்கா:
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி, பதவி விலகியதில் இருந்து அங்குள்ள இந்துக்களுக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைக் கண்டித்து வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்த துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த நவம்பர் 25-ந் தேதி டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
சின்மோய் கிருஷ்ண தாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நடந்த வன்முறையில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து, சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆஜராக வழக்கறிஞர்கள் சங்கம் தடை விதித்தது.
இந்த வழக்கில் சின்மோய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் வருகிற ஜனவரி 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த நிலையில் சிட்டகாங் மெட்ரோபாலிடன் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் எம்.டி அபு பக்கரிடம் தொழிலதிபரும், பங்களாதேஷின் ஹெபாசாத்-இ-இஸ்லாம் அமைப்பின் ஆர்வலருமான எனாமுல் ஹக் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில், நவம்பர் 26-ந் தேதி நீதிமன்றத்தில்
நிலப் பதிவேடு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது சின்மோய் கிருஷ்ண தாஸின் ஆதரவாளர்கள் தன்னைத் தாக்கியதாக புகாரில் கூறியுள்ளார்.
தாக்குதலின் காரணமாக நீண்ட காலமாக சிகிச்சையில் இருந்தமையால் வழக்குத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் ஹக் கூறினார்.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணதாஸ் மற்றும் அவரது சீடர்கள் 164 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 500 பேர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான உறவிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
- டாக்கா விமானநிலையத்தில் கடந்த 25-ம் தேதி சின்மோய் தாஸ் கைதுசெய்யப்பட்டார்.
- வங்கதேசத்தில் இந்துக் கோவில்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
டாக்கா:
வங்கதேச மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதற்கு எதிராக இந்துக்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்பட்டன. வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம் சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளராக இருந்த இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த இந்து சாமியார் சின்மோய் கிருஷ்ணதாஸ் மீது வங்கதேச கொடியை அவமதித்து இந்துக்களைப் போராட்டத்துக்குத் தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது. டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த மாதம் 25-ம் தேதி சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்டார்
வங்கதேசத்தில் தொடர்ந்து ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்கள் மீதும், அவர்களது வழிபாட்டு தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டாக்காவில் நமஹட்டா மையத்தில் உள்ள இஸ்கான் கோவிலை சூறையாடிய மர்ம நபர்கள், அங்கிருந்த கடவுள் சிலைகளுக்கும் தீவைத்தனர். அதில் அங்கிருந்த லட்சுமி நாராயணர் சிலை மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
டாக்காவின் புறநகர் பகுதியான தோவூர் கிராமத்தில் ஹரே கிருஷ்ணா நம்ஹட்டா சங்கம் நிர்வகித்து வந்த ஸ்ரீஸ்ரீ மகாபாக்யா லட்சுமிநாராயணன் கோவில் மற்றும் ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணா கோவிலையும் சூறையாடிய மர்ம நபர்கள் அங்கிருந்த சிலைகளுக்கு தீவைத்தனர். அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது என கொல்கத்தா இஸ்கான் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.