search icon
என் மலர்tooltip icon

    வங்காளதேசம்

    • முகமது யூனுஸ் தலைமையில் ஆகஸ்ட் 8-ந்தேதி இடைக்கால அரசு பதவி ஏற்றது.
    • ஏற்கனவே 17 ஆலோசகர் இடம் பிடித்துள்ள நிலையில், தற்போது எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனால் இடைக்கால அரசு அமைக்கப்படும் என வங்கதேச ராணுவம் தெரிவித்திருந்தது.

    அதன்படி நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசை ராணுவம் அமைத்தது. இடைக்கால அரசில் 17 ஆலோசகர் இடம் பிடித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது மேலும் 4 பேர் இடைக்கால அரசில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    பொருளாதார வல்லுனர் வஹிதுதீன் மெஹ்மூத், முன்னாள் அமைச்சரவை செயலாளர் அலி இமாம் மஜும்தார், முன்னாள் மின்துறை செயலாளர் முகமது பொளஜுல் கபிர் கான், லெப்டினன் ஜெனரல் ஜஹாங்கீர் அலாம் சவுத்ரி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    முகமது யூனுஸ் மற்றும் 13 ஆலோசகர்கள் ஆகஸ்ட் 8-ந்தேதி பதிவி ஏற்றனர். ஆகஸ்ட் 11-ந்தேதி இரண்டு பேர் பதிவி ஏற்றனர். அதற்கு அடுத்தநாள் ஒருவர் பதவி ஏற்றார்.

    • வங்கதேச போராட்ட வன்முறைக்கு 500-க்கும் மேற்பட்டோர் பலி.
    • ஐ.நா.-வின் மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்த முயற்சி மேற்கொள்ளும் இடைக்கால அரசு.

    வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் பின்னர் வன்முறையாக வெடித்தது. இதன்காரணமாக இடஒதுக்கீட்டை ரத்து செய்ய அரசு சம்மதம் தெரிவித்தது.

    என்றாலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டமும் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    அவர் கடந்த 5-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகும் வன்முறை கட்டுக்குள் வரவில்லை. அவரின் அவாமி லீக் கட்சி தலைவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. அக்கட்சியை சேர்ந்தவர்கள், மைனாரிட்டிகள் தாக்கப்பட்டனர்.

    இதனால் ஷேக் ஹசீனா பதவி விலகியதற்குப்பின் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த வன்முறையில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்ததால் நோபல் பரிசு வென்ற பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. முகமது யூனுஸ் வங்கதேசம் மீண்டும் அமைதி நிலைக்கு திரும்ப முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் வன்முறையின்போது கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்கள் என இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சட்ட ஆலோசகர் டாக்டர் ஆசிஃப் நஸ்ருல் கூறும்போது "போராட்ட வன்முறை தொடர்பாக ஐநா-வின் மேற்பார்வையில் விசாரணை நடத்துவதற்கான முயற்சியை இடைக்கால அரசு மேற்கொண்டுள்ளது. ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 5-ந்தேதி வரை நடைபெற்ற கொலைகள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் விசாரணை நடத்த முயற்சி செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • நாம் அனைவரும் ஒரே உரிமை கொண்ட மக்கள். நமக்குள் எந்த வேறுபாட்டையும் காட்ட வேண்டாம்.
    • பொறுமையை கடைப்பிடிக்கவும், எங்களால் என்ன செய்ய முடிந்தது மற்றும் செய்யவில்லை என்பது குறித்து பின்னர் தீர்ப்பளிக்கவும்.

    வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் கடந்த 5-ந்தேதி ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அரசு கவிழ்ந்தது.

    அதன்பின் போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துகளை நாசப்படுத்த தொடங்கினர். ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தலைவர்களுக்கு சொந்தமான இடங்களை தீவைத்து கொளுத்தினர். மைனாரிட்டி இந்துகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர். அவாமி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்த இரண்டு தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

    ஒரு கட்டத்திற்குப் பிறகு பாதுகாப்பு கேட்டு இந்துக்களும் போராட்டத்தில் குதித்தனர். ஷேக் ஹசீனா பதவி விலகி ஒரு வாரத்திற்கும் மேலாகியும் வன்முறை முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் முகமது யூனுஸ் டாக்காவில் உள்ள புகழ் வாய்ந்த தாகேஷ்வரி கோவிலுக்கு சென்றார். பின்னர் "உரிமைகள் அனைவருக்கும் சமமானது. வங்காளதேசத்தில் உள்ள மைனாரிட்டிகளின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

    மேலும், நாம் அனைவரும் ஒரே உரிமை கொண்ட மக்கள். நமக்குள் எந்த வேறுபாட்டையும் காட்ட வேண்டாம். தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள். பொறுமையை கடைப்பிடிக்கவும், எங்களால் என்ன செய்ய முடிந்தது மற்றும் செய்யவில்லை என்பது குறித்து பின்னர் தீர்ப்பளிக்கவும். தோல்வியடைந்தால், எங்களை விமர்சியுங்கள் எனத் தெரிவித்தார்.

    • ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
    • முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

    டாக்கா:

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதையடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் வங்கதேசத்தில் வன்முறையும், கலவரமும் ஓயவில்லை. இந்த வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 560 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், ஜூலை 19 அன்று டாக்காவின் முகமதுபூர் பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மளிகைக் கடை உரிமையாளர் அபு சயீத் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த அமிர் ஹம்சா ஷாடில் டாக்கா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அந்த மனுவில், ஜூலை 19-ம் தேதி மாலை 4 மணிக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அபு சயீத் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவாமி லீக் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர், உள்துறை மந்திரி அசதுஸ்மான் கான் கமல், முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன், முன்னாள் டிபி தலைவர் ஹருன் ஓர் ரஷீத், முன்னாள் டிஎம்பி கமிஷனர் ஹபிபுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் டிஎம்பி இணை கமிஷனர் பிப்லாப் குமார் சர்க்கர் உள்ளிட்ட 6 பேரும் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதி ராஜேஷ் சவுத்ரி முன் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா தப்பிச்சென்ற பின் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக 205 தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாக தகவல்.
    • அந்நாட்டில் தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

    வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் நோக்கில், அந்நாட்டு இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் இந்து மாணவர்கள் மற்றும் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

    இந்த பேச்சுவார்த்தையின் போது தற்போது நடைபெறும் வன்முறை சம்பவங்களை முடிவுக்கு கொண்டுவந்து, இந்து சமூகத்திற்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இடைக்கால அரசு உறுதிப்படுத்தி இருக்கிறது.

    வங்காளதேசத்தில் உள்ள இந்து மற்றும் இதர சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக 205 தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 5 ஆம் தேதி ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

    அந்நாட்டில் அமைந்துள்ள இடைக்கால அரசு வெளியிட்ட முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "சிறுபான்மை மதங்களுக்கு எதிராக சில பகுதிகளில் தாக்குதல் சம்பவங்கள் நடந்திருப்பது மிகவும் கவலையடையச் செய்கிறது," என குறிப்பிப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உதவ வேண்டும் என அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனுக்கு கடிதம் எழுதி இருந்தனர்.

    • இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கின்றனர்.
    • கைது செய்யப்பட்ட நபர்கள் போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைத்து உள்ளனர்.

    வங்கதேசத்தில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், மாணவர்கள் நடத்தும் போராட்டம் காரணமாக எல்லை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    போராட்டம் காரணமாக அந்நாட்டில் இருந்து சிலர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கின்றனர்.

    இந்நிலையில், மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களுக்குள் ஊடுருவ முயன்ற வங்கதேசத்தை சேர்ந்த 11 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட நபர்கள் போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைத்து உள்ளனர்.

    • வங்காளதேச அணி பாகிஸ்தானில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
    • பாகிஸ்தான், வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.

    டாக்கா:

    வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

    அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இது ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. எனவே இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    இந்நிலையில், வங்காளதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தஸ்கின் அகமது உள்ளிட்ட வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

    காயம் காரணமாக கடந்த 12 மாதத்துக்கு மேலாக டெஸ்ட் போட்டிகளில் களம் காணாத இவரது வருகை நிச்சயம் வங்காளதேச அணிக்கு வலு சேர்க்கும்.

    வங்காளதேச டெஸ்ட் அணியின் விவரம் வருமாறு:

    நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), மஹமுதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷட்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ரானா, ஷொரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது

    • நீதிபதிகள் பதவி விலக ஒரு மணி நேரம் கெடு விதிப்பதாக மாணவ அமைப்புகள் தெரிவித்தன.
    • முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனாவின் விசுவாசியாக தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் அறியப்பட்டார்.

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தால் அவர் பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    அரசு வேலை வாய்ப்பில் சுதந்திர போராட்ட வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு கோர்ட்டு அனுமதி அளித்ததால் அதை எதிர்த்து மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அதன்பின் இட ஒதுக்கீடு 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

    இந்நிலையில் வங்கதேசத்தில் தலைமை நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் பதவி விலகக் கோரி மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். நீதிபதிகள் பதவி விலக ஒரு மணி நேரம் கெடு விதிப்பதாக மாணவ அமைப்புகள் தெரிவித்தன.

    மேலும், சுப்ரீம் கோர்ட்டை முற்றுகையிடும் வகையில் மாணவர்கள் திரண்டனர். இதையடுத்து அனைத்து நீதிபதிகள் கூட்டத்தை தலைமை நீதிபதி ரத்து செய்தார்.

    இதனையடுத்து, வங்கதேச ஜனாதிபதி முகமது சஹாபுதீனுடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நீதிபதி ஒபைதுல் ஹாசன் அறிவித்துள்ளார்.

    முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனாவின் விசுவாசியாக தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இட ஒதுக்கீடு 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.
    • சுப்ரீம் கோர்ட்டை முற்றுகையிடும் வகையில் மாணவர்கள் திரண்டனர்.

    வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தால் அவர் பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    இந்த நிலையில் வங்காளதேசத்தில் தலைமை நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் பதவி விலகக் கோரி மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். நீதிபதிகள் பதவி விலக ஒரு மணி நேரம் கெடு விதிப்பதாக மாணவ அமைப்புகள் தெரிவித்தன.

    மேலும், சுப்ரீம் கோர்ட்டை முற்றுகையிடும் வகையில் மாணவர்கள் திரண்டனர். இதையடுத்து அனைத்து நீதிபதிகள் கூட்டத்தை தலைமை நீதிபதி ரத்து செய்தார்.

    அரசு வேலை வாய்ப்பில் சுதந்திர போராட்ட வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு கோர்ட்டு அனுமதி அளித்ததால் அதை எதிர்த்து மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

    அதன்பின் இட ஒதுக்கீடு 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் நீதிபதிகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் வங்காளதேசத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    • மக்களையும், அவாமி லீக் கட்சியையும் கைவிட மாட்டோம்.
    • எனது குடும்பமும் அவாமி லீக் கட்சியும் வங்காளதேச அரசியலில் தொடர்ந்து ஈடுபடும்.

    ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாசேத் ஜாய் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வங்காளதேசத்தில் ஜன நாயகம் திரும்பியவுடன் எனது தாய் நாடு திரும்புவார். அவர் வங்கதேசத்திற்கு நிச்சயமாகத் திரும்புவார். ஆனால் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றவரா அல்லது அரசியல்வாதியாகத் திரும்புவாரா என்பது இன்னும் முடிவு செய்யப்பட வில்லை.

    முன்பு எனது தாய் வங்கதேசத்துக்குத் திரும்ப மாட்டாள் என்று நான் சொன்னது உண்மைதான். ஆனால் நாடு முழுவதும் உள்ள எங்கள் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து முடிவை மாற்றி உள்ளோம்.

    மக்களையும், அவாமி லீக் கட்சியையும் கைவிட மாட்டோம். அவாமி லீக் வங்காளதேசத்தின் மிகப்பெரிய மற்றும் பழமையான அரசியல் கட்சி. எனவே நாங்கள் எங்கள் மக்களை விட்டு விலகிச் செல்ல முடியாது.

    ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்டவுடன் ஷேக் ஹசீனா நிச்சயமாக வங்க தேசத்திற்குத் திரும்புவார். ஒரு புதிய வங்காளதேசத்தை உருவாக்க விரும்பினால், அவாமி லீக் இல்லாமல் அது சாத்தியமில்லை. எனது குடும்பமும் அவாமி லீக் கட்சியும் வங்காளதேச அரசியலில் தொடர்ந்து ஈடுபடும்.

    முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் சட்டம்-ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும். முகமது யூனுசின் தனிப்பட்ட கருத்துக்கள் எதுவாக இருந்தாலும், அவர் ஒரு ஒற்றுமை அரசாங்கத்தை விரும்புவதாக தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அவர் தனது வார்த்தைக்கு உண்மையாக இருப்பார் என்று நம்புகிறேன் என்றார்.

    • ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சம் அடைந்ததால் இடைக்கால அரசும் அமையும் என ராணுவம் அறிவித்தது.
    • நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக்கொண்டது.

    வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதனால் இடைக்கால அரசு அமையும் என வங்கதேச ராணுவ தளபதி தெரிவித்தார். இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று இரவு வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டது.

    இடைக்கால அரசில் மாணவர் அமைப்பினர், பெண்கள், இந்துக்கள் கொண்ட ஆலோசனைக் குழு பதவி ஏற்றது. வங்கதேச வங்கியின் முன்னாள் கவர்னர், முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் உள்ளிட்டோர் பதவி ஏற்றனர்.

    சுதந்திர போராட்ட வீரர் பரூக்-இ-ஆஸாம், மனித உரிமை ஆர்வலர் ரஹ்மான் உள்ளிட்டோரும் பதவி ஏற்றனர். முகமது யூனுஸ் தலைமையில் 17 பேர் கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    • பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
    • அவாமி லீக் கட்சிக்காக நிச்சயம் வங்காளதேசம் திரும்புவார் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.

    வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற மாணவர்கள் போராட்டம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா வந்துள்ளார்.

    இந்தியாவில் தற்காலிகமாக தஞ்சம் அடைந்துள்ள அவர், இங்கிலாந்திடம் அடைக்கலம் கேட்டுள்ளார். ஆனால் இங்கிலாந்து இது தொடர்பாக எந்த பதிலும் அளிக்காமல் உள்ளது. இதற்கிடையே இந்தியாவும் அவருக்கு நிரந்தர அடைக்கலம் கொடுக்குமா? என்பதில் கேள்வி எழுந்தது.

    இதனால் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடு எது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தனது தாயார் வங்கதேசத்தில் மீண்டும் ஜனநாயகம் திரும்பிய பின், சொந்த நாடு திரும்புவார் என ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசேத் தெரிவித்துள்ளார்.

    சஜீப் வசேத் பிடிஐ-க்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    எனது தாயார் ஷேக் ஹசீனா உறுதியாக வங்காளதேசம் திரும்புவார். அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் திரும்புவாரா? அரசியல் செயல்பாட்டுடன் திரும்புவாரா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    ஷேக் முஜிபுர் ரஹ்மான் குடும்ப உறுப்பினர்கள் நாட்டு மக்களை கைவிட்டுவிட மாட்டார்கள். அதேபோல் பாதிக்கப்பட்டுள்ள அவாமி லீக் கட்சியையும் கைவிடமாட்டார்கள் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்.

    தனது தாயைப் பாதுகாத்ததற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வங்கதேசத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச கருத்தை உருவாக்கவும் அழுத்தம் கொடுக்கவும் இந்தியா உதவ வேண்டும் என இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

    ஷேக் ஹசீனா வங்கதேசம் திரும்பமாட்டார் என்று நான் சொன்னது உண்மைதான். ஆனால், நாடு முழுவதும் அவாமி லீக் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

    இப்போது நாங்கள் எங்கள் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க என்ன வேண்டுமானாலும் செய்யப் போகிறோம். நாங்கள் அவர்களை அப்படியே விட்டுவிடப்போவதில்லை.

    அவாமி லீக் வங்கதேசத்தின் மிகவும் பழமையான கட்சி. ஆகவே, அக்கட்சி தொண்டர்களிடம் இருந்து அப்படியே விலகிச் செல்ல முடியாது. வங்கதேசத்தில் மீண்டும் ஜனநாயகம் திரும்பும்போது ஷேக் ஹசீனா உறுதியாக வங்காளதேசம் திரும்புவார்.

    சூழ்நிலை ஆதாரங்களை வைத்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தலையீடு இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். தாக்குதல்கள் மற்றும் எதிர்ப்புக்கள் மிகவும் ஒருங்கிணைக்கப்பட்டவை, துல்லியமாக திட்டமிடப்பட்டவை மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நிலைமையைத் தூண்டிவிட வேண்டுமென்றே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் என்ன செய்தாலும், அவர்கள் நிலைமையை மோசமாக்க முயன்றனர்.

    இவ்வாறு சஜீப் வசாத் தெரிவித்துள்ளார்.

    ×