என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உலகம்
![நிலவுக்கு செல்லும் வீரரின் உடையை அறிமுகப்படுத்திய சீனா நிலவுக்கு செல்லும் வீரரின் உடையை அறிமுகப்படுத்திய சீனா](https://media.maalaimalar.com/h-upload/2025/02/13/9265450-china.webp)
நிலவுக்கு செல்லும் வீரரின் உடையை அறிமுகப்படுத்திய சீனா
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நிலவுக்கு மனிதனை அனுப்பும் ராக்கெட்டும் கடந்த ஆண்டு சோதித்துப் பார்க்கப்பட்டது.
- நிலவில் மனிதன் அமர்ந்து செல்லும் வாகனமும் (ரோவர்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பீஜிங்:
விண்வெளியில் பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சீனா, நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை உருவாக்கி வருகிறது. இதற்கான முயற்சியில் அந்நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
2030-ம் ஆண்டில் சீனர் ஒருவரை நிலவுக்கு அனுப்பி அங்கு மனித வாழ்க்கைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிலவுக்கு செல்லும் மனிதன் அணியும் உடையை சீன விண்வெளி மையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த உடைக்கு வாங் யு என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் நிலவில் மனிதன் அமர்ந்து செல்லும் வாகனமும் (ரோவர்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு டான்சுவோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த பெயர்கள் 9 ஆயிரம் பேரிடம் கருத்துகள் பெற்று சூட்டப்பட்டதாக சீன விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாலைவனத்தில் நிலவை போன்ற தன்மையை செயற்கையாக உருவாக்கி அங்கு இவ்வாகனம் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது விண்வெளி உடை மற்றும் ரோவரின் முன்மாதிரிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன, மேலும் ஆராய்ச்சி பணிகள் சீராக நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக சீன விண்வெளி மையத்தின் ஆராய்ச்சியாளரான ஜாங் வான்ஸ் கூறும்போது, நிலவில் தரையிறங்கும் விண்வெளி உடைகள் கச்சிதமாகவும், இலகுவாகவும் இருக்கும். நிலவின் மேற்பரப்பில் கடுமையான சூழலைத் தாங்கும் திறன் கொண்டதாகவும் இருக்கும் என்றார்.
நிலவுக்கு மனிதனை அனுப்பும் ராக்கெட்டும் கடந்த ஆண்டு சோதித்துப் பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.