search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    காசாவை மீண்டும் ஆக்கிரமிக்கும் திட்டம் இல்லை: இஸ்ரேல் அதிபர் சொல்கிறார்
    X

    காசாவை மீண்டும் ஆக்கிரமிக்கும் திட்டம் இல்லை: இஸ்ரேல் அதிபர் சொல்கிறார்

    • ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் செய்தால், அது சரணடைவதாகும்.
    • ஹமாஸை ஒழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்திருந்தார்.

    இஸ்ரேல் ராணுவம் காசாவில் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவை இரண்டு பகுதிகளாக பிரித்து, வடக்கு காசாவில் தரைவழி தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது.

    காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் வரை போரை நிறுத்தமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.

    ஹமாஸ்- இஸ்ரேல் போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் உயிரிழந்து வரும்நிலையில், போர்நிறுத்தம் அவசியம் என உலகளவில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இதனால் நெருக்கடி ஏற்பட்டது.

    காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி கிடைக்கும் வகையிலும், காசாவில் சிக்கித்தவிக்கும் வெளிநாட்டினர் சொந்த நாடுகளுக்கு திரும்பும் வகையிலும் போர் இடைநிறுத்தம் தேவை என ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இஸ்ரேல் பிரதமர் இதை ஏற்கவில்லை.

    நெருக்கடி அதிகமாக நேதன்யாகுவிடம் ஜோ பைடன் போனில் பேசினார். அப்போது நேதன்யாகு தினசரி நான்கு மணி நேர போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக, அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேற்று கூறியதாவது:-

    நாங்கள் காசாவில் அரசு அமைக்க முற்படவில்லை. மீண்டும் ஆக்கிரமிக்க முற்படவில்லை. யாரையும் இடமாற்றம் செய்ய முற்படவில்லை. காசாவில் பொதுமக்கள் அரசாங்கம் ஒன்றை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அங்கும், எங்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்த முற்படுவோம்.

    இஸ்ரேல் ராணுவம் மிகவும் சிறந்த வகையில் செயலாற்றி வருகிறது. ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் என்பது சரண் அடைவது போன்ற அர்த்தமாகும். ராணுவ நடவடிக்கைக்கு எந்தவொரு காலவரையறை இல்லை. எவ்வளவு நாட்கள் நீண்டாலும், அதை நாங்கள் செய்து முடிப்போம்.

    காசாவுக்குள் மீண்டும் நுழைந்து கொலையாளிகளை கொல்வதற்கு இஸ்ரேல் ராணுவம் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் இஸ்ரேலுக்குள் ஹமாஸ் நுழைந்தது போன்றதை தடுக்க முடியும்.

    Next Story
    ×