என் மலர்tooltip icon

    கத்தார்

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் ஆண்கள் இரட்டையரில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடி, ஸ்பெயினின் டேனியல் மெரிடா-கத்தாரின் முபாரக் அல்-ஹராசி ஜோடியுடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 6-3, 6-4 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை அமண்டா சாம்பியன் பட்டம் வென்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்க வீராங்கனையான அமண்டா அனிஸ்மோவா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ உடன் மோதினார்.

    இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனிஸ்மோவா 6-4, 6-3 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் பெண்கள் இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி-சாரா எர்ரனி ஜோடி, சீனாவின் ஜியாங் ஜின்யு-தைவானின் வூ பாங் ஜோடியுடன் மோதியது.

    இதில் அதிரடியாக ஆடிய இத்தாலி ஜோடி 7-5, 7-6 (12-10) என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை அமெண்டா வெற்றி பெற்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது அரையிறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனையான அமெண்டா அனிசிமோவா, ரஷிய வீராங்கனை எகடெரினா அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.

    இதில் அனிசிமோவா அதிரடியாக ஆடி 6-3, 6-3 என எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அனிசிமோவா, லாத்வியாவின் ஒஸ்டாபென்கோ உடன் மோத உள்ளார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா தோல்வி அடைந்தார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் தரவரிசையில் 2-ம் இடம் பிடித்தவரும், போலந்து வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக், கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய ஸ்வியாடெக் 6-2, 7-5 என எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை பெகுலா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் தரவரிசையில் 6-ம் இடம் பிடித்தவரும், அமெரிக்க வீராங்கனையுமான ஜெசிகா பெகுலா, ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.

    இதில் 4-6 என முதல் செட்டை இழந்த அலெக்சாண்ட்ரோவா அடுத்த இரு செட்களை 6-1, 6-1 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஜெசிகா பெகுலா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா வெற்றி பெற்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் தரவரிசையில் 2-ம் இடம் பிடித்தவரும், போலந்து வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக், செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-7 (1-7) என இழந்த ஸ்வியாடெக் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா 7-6 (7-1) 6-2 என்ற செட் கணக்கில் ஸ்லோவாகியா வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதியில் எலினா ரிபாகினா, இகா ஸ்வியாடெக்குடன் மோத உள்ளார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீராங்கனை படோசா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் தரவரிசையில் 9-ம் இடம் பிடித்தவரும், ஸ்பெயின் வீராங்கனையுமான பவுலா படோசா, அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய அனிசிமோவா 6-4, 6-3 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் பவுலா படோசா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார்.
    • இன்டர்கான்டினென்டல் கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி கோப்பை வென்றது.

    கத்தார்:

    பிபா இன்டர் கான்டினென்டல் கால்பந்து கோப்பை தொடர் கத்தாரில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட், மெக்சிகோவின் பச்சுகா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் ரியல் மாட்ரிட் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதியின் 53வது நிமிடத்தில் ரோட்ரிகோ ஒரு கோலும், 84வது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் (பெனால்டி) ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.

    பச்சுகா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

    இறுதியில், ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    • கத்தாரில் நடந்த தோஹா மாநாட்டில் இந்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார்.
    • அமெரிக்க டாலரை பலவீனப்படுத்துவதில் இந்தியாவுக்கு ஆர்வமில்லை என தெரிவித்தார்.

    தோஹா:

    கத்தார் நாட்டில் 22-வது தோஹா மாநாடு நடந்தது. இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார். கத்தார் மற்றும் நார்வே நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கலந்துகொண்டனர்.

    அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்டு டிரம்ப், சமீபத்தில் பேசுகையில், பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என கூறினார். பிரிக்ஸ் நாடுகளுக்கு என தனியாக கரன்சி நோட்டுகள் அறிமுகம் என வெளிவந்த செய்தி பற்றி பேசுகையில் இதனை குறிப்பிட்டார்.

    இந்நிலையில், மத்திய மந்திரி ஜெய்சங்கர் தோஹா மாநாட்டில் பேசியதாவது:

    டிரம்பின் முதல் நிர்வாகத்தின்போது, அமெரிக்காவுடன் நாங்கள் நல்ல, வலுவான உறவை கொண்டிருந்தோம்.

    சில பிணக்குகள் உள்ளன. அவை, வர்த்தகம் சார்ந்தவையாக உள்ளன. டிரம்ப் அதிகாரத்தின் கீழ்தான் குவாட் அமைப்பு மீண்டும் தொடங்கப்பட்டது என நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

    பிரதமர் மோடி மற்றும் டிரம்ப் இடையே தனிப்பட்ட நட்புறவு உள்ளது. அது இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான இருதரப்பு உறவுக்கு பங்காற்றியது.

    இந்தியா ஒருபோதும் டாலரின் மதிப்பை பலவீனப்படுத்தியதில்லை என எப்போதும் கூறிவருகிறோம். பிரிக்ஸ் கரன்சிக்காக எந்தவித முன்மொழிவும் இதுவரை இல்லை. நிதிப்பரிமாற்ற விஷயங்களைப் பற்றியே பிரிக்ஸில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

    அமெரிக்கா எங்களுடைய மிக பெரிய வர்த்தக நட்பு நாடு. டாலரை பலவீனப்படுத்த எங்களுக்கு ஆர்வம் இல்லை என தெரிவித்தார்.

    • காசாவில் உயிரிழந்த 43,552 பேரில் 70 சதவீதம் [30,450 பேர்] பேர் பெண்கள் குழந்தைகள் என்று ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய எந்த தரப்பினரும் விரும்பவில்லை

    அக்டோபர் 7 தாக்குதல் 

    கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடி வரும் கிளர்ச்சி அமைப்பான ஹமாஸ் அந்நாட்டுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும் 250 பேர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.

    பழிக்குப் பழி 

    இந்த அடியை எதிர்பார்த்திராத இஸ்ரேல் பழிக்குப் பழி வாங்க பாலஸ்தீன நகரங்களின் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அவ்வாறு தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல்கள் கடந்த 13 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை 43 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்த 43,552 பேரில் 70 சதவீதம் [30,450 பேர்] பேர் பெண்கள் குழந்தைகள் என்று ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது.

     

    ஹிஸ்புல்லா லெபனான் 

    இதற்கிடையே ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைப்பதாக லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல்களில் 2500 லெபனானியர்கள் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் தலைநகர் பெய்ரூட் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை துறந்து இடம்பெயர்ந்து வருகின்றனர். அண்டை நாடான சிரியாவுக்கு எல்லை வழியாக லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.

    ஈரான் சூழல்  

    இதுதவிர்த்து ஈரான் - இஸ்ரேல் மோதலும் முற்றியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி நடத்திய வான்வழித் தாக்குதலால் நிலைமை மோசமானது. இதற்கு பதிலடியாக ஈரான் நிலைகள் மீது இஸ்ரேலும் தாக்கியது. அடுத்ததாக ஈரான் அணு ஆயுத தளங்கள் மற்றும் எண்ணெய்க் கிணறுகளை இஸ்ரேல் தாக்கினால் பதற்றம் அதிகரிக்கும். போரை நிறுத்த ஐநா மேற்கொண்ட முயற்சிகள் அமைத்தும் பலனளிக்காமல் போயின. பதிலாக ஐநா பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டார்.

    கைவிரித்த கத்தார் 

    இந்த சூழலில் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்த பிணை கைதி பரிமாற்ற அமைதி பேச்சுவார்த்தை அமெரிக்கா, எகிப்து முன்னெடுப்பில் கத்தார் நாட்டில் வைத்து நடந்து வந்தது. ஆனாலும் இஸ்ரேல் , மற்றும் ஹமாஸ் பிடி கொடுப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையில்தான் இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகளிலிருந்து முழுமையாக விலகுவதாக கத்தார் அரசு அறிவித்துள்ளது.

    போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய எந்த தரப்பினரும் விரும்பவில்லை என விரக்தி தெரிவித்து கத்தார் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஹமாஸ் அதிகம் கத்தாரில் உலாவுவதும், தோஹா நகரில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் கட்டடம் இருப்பதும் அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. சமீபத்தில் முன்மொழியப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்காததால் அவர்களை கத்தாரில் இருந்து வேலையற்ற அமெரிக்க அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

    இடது - அமெரிக்க வெளியுறவு செயலாளர் - கத்தார் தலைவர் - வலது

     

    உறவு

     எனவே ஹமாஸ் அலுவலகத்தை அடுத்த 10 நாட்களில் மூட கத்தார் உத்தரவிட்டதாகவும் செய்திகள் பரவின. ஆனால் கத்தார் வெளியுறவுத்துறை அதனை மறுத்து எதற்கு வம்பு என்று அமைதி பேச்சுவார்த்தையிலிருந்தே மொத்தமாக விளங்கியுள்ளது.

    தற்போதைய நிலைமைக்கு இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அனைத்து தரப்பினரும் தங்கள் விருப்பத்தையும் தீவிரத்தையும் காட்டினால் மட்டுமே தங்கள் முயற்சியை மீண்டும் தொடர்வோம் என்று கத்தார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

    மத்திய கிழக்கில் அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு கொண்ட நாடாக இருந்த கத்தார் பேச்சுவார்த்தைக்கு ஏற்றதாக இருந்த நிலையில் கத்தார் தற்போது கை விரித்துள்ளதால் அமைதிப் பேச்சுவார்த்தையில் மேலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.  கத்தார் இடத்தில் அடுத்ததாக துருக்கி அமைதி பேச்சுவார்த்தை இடமாக அமையலாம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர் . அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர் கத்தாரின் இந்த முடிவு வெளிவந்துள்ளதையும் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டி உள்ளது.

    • கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலான தாக்குதலில் 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு.
    • போர் நிறுத்தம் ஈரான், ஹிஸ்புல்லாவின் பதிலடியை திரும்பப்பெறும் பரிசீலனைக்கு வழி வகுக்கும் என நம்பிக்கை.

    ஹமாஸ் அமைப்பினர குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 10 மாதங்ளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட்டு காசாவில போர் நிறத்தத்தை கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்கள். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடத்தும்போதெல்லாம் காசா மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்துவை சுட்டிகாட்டு தடைபட்டு வருகிறது.

    இந்த நிலையில் போர் நிறுத்தத்திற்கான புதிய பேச்சுவார்த்தை முன்னெடுத்து வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாட்டின் அதிகாரிகள் இஸ்ரேல் அதிகாரிகளுடன் இன்று கத்தாரில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.

    இந்த பேச்சுவார்த்தையால் காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராக இருக்கும் நிலையில் அதை கட்டுப்படுத்த முடியும் என மத்தியஸ்தர் நாடுகள் நம்புகின்றன.

    இந்த பேச்சுவார்த்தையில் ஹமாஸ் பங்கேற்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. கடந்த 31-ந்தேதி அமெரிக்க அதிபர் போர் நிறுத்தத்திற்கான திட்டத்தை வெளியிட்டார். இதை இரண்டு தரப்பிலும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டனர். ஆனால், ஹமாஸ் அதில் திருத்தம் செய்ய பரிந்துரைத்தது. இஸ்ரேல் தெளிவுப்படுத்துதல் குறித்து பரிந்துரை செய்தது.

    இருதரப்பிலும் உருவாக்கப்பட்ட புதிய கோரிக்கைகள் தொடர்பாக பரஸ்பர குற்றம்சாட்டியதால் அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

    ×