search icon
என் மலர்tooltip icon

    கத்தார்

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • இரண்டாவது பாதியில் கேமரூன் அணி ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது.

    தோகா:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஜி பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது.

    இதில் பிரேசில், கேமரூன் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் பலன் அளிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 0-0 என சமனிலை வகித்தது.

    இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டதி. இதில் கேமரூன் வீரர் வின்சென்ட் அபுபெக்கர் 92-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், கேமரூன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது. 

    பிரேசில் அணி தோல்வி அடைந்தாலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளதால் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • முதல் பாதியில் உருகுவே அணி 2 கோல் அடித்து முன்னிலை பெற்றிருந்தது.
    • உருகுவே வீரர் ஜார்ஜியன் அடுத்தடுத்து 2 கோல் அடித்தார்.

    கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஹெச் பிரிவில் இன்று இரவு நடைபெற்ற 2வது ஆட்டத்தில் கானா, உருகுவே அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தின் 26 நிமிடத்தில் உருகுவே வீரர் ஜார்ஜியன் அரராஸ்கேட்டா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

    தொடர்ந்து 32 நிமிடத்தில் அவர் மேலும் ஒரு கோல் அடிக்க முதல் பாதி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி முன்னிலை பெற்றிருந்தது. 2வது பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதையடுத்து ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் கானாவை வீழ்த்திய உருகுவே வெற்றி பெற்றது. எனினும் ஹெச் பிரிவில் அடுத்த சுற்றுக்கு கோல்கள் அடிப்படையில் தென்கொரியா 2வது அணியாக முன்னேறியதால்,  கானாவும், உருகுவேயும் போட்டியில் இருந்து வெளியேறின.

    • முதல் பாதி ஆட்ட முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன.
    • கூடுதல் நேர ஆட்டத்தில் தென்கொரிய வீரர் 2வது கோல் அடித்தார்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் ஹெச் பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தென் கொரியா, போர்ச்சுக்கல் அணிகள் மோதின. போட்டி தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் போர்ச்சுக்கல் வீரர் ரிகார்டோ ஹோர்டா கோல் அடித்தார். 27 நிமிடத்தில் தென் கொரிய வீரர் கிம் யங் வோன் பதில் கோல் அடித்ததால் முதல் பாதி ஆட்ட முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.

    2வது பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்காத நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் 91வது நிமிடத்தில் வாங் ஹி ஷான் கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணியை வீழ்த்திய தென் கொரியா வெற்றி பெற்றது. அடுத்த சுற்று ஆட்டத்திற்கு போர்ச்சுக்கல் அணி தகுதி பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.

    • இன்றைய போட்டிகளின் முடிவில் மேலும் 2 அணிகள் 2-வது சுற்றுக்கு நுழையும்.
    • இரண்டாவது சுற்றில் 16 நாடுகள் விளையாடும். இதில் இருந்து 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும்.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ந்தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன.

    லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழையும்.

    நெதர்லாந்து , செனகல் (குரூப் ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி), அர்ஜென்டினா, போலந்து (சி), பிரான்ஸ், ஆஸ்திரேலியா (டி), ஜப்பான், ஸ்பெயின், (இ), மொராக்கோ , குரோஷியா (எப்) , பிரேசில் (ஜி), போர்ச்சுக்கல் (எச்) ஆகிய நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளன.

    இன்றுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இன்றைய போட்டி முடிவில் மேலும் 2 அணிகள் 2-வது சுற்றுக்கு நுழையும்.

    'எச்' பிரிவில் உள்ள தென்கொரியா இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணியை எதிர்கொள்கிறது. மற்றொரு ஆட்டத்தில் கானா-உருகுவே அணிகள் மோதுகின்றன.

    இதில் போர்ச்சுக்கல் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. மற்ற அணிகள் வெற்றி கட்டாயத்தில் உள்ளன. நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் ஆட்டங்களில் 'ஜி' பிரிவில் செர்பியா-சுவிட்சர்லாந்து அணிகளும், பிரேசில்-கேமரூன் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. அடுத்த சுற்றுக்கு பிரேசில் தகுதி பெற்று விட்ட நிலையில் மற்ற அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.

    ஈக்வடார், கத்தார், ஈரான், வேல்ஸ், மெக்சிகோ, சவுதி அரேபியா, துனிசியா, டென்மார்க், ஜெர்மனி , கோஸ்டாரிகா , பெல்ஜியம், கனடா ஆகிய நாடுகள் வெளியேற்றப்பட்டன.

    2-வது சுற்று ஆட்டங்கள் நாளை (3-ந்தேதி) தொடங்குகிறது. இந்த சுற்றில் 16 நாடுகள் விளையாடும். இதில் இருந்து 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதிபெறும்.

    நாளை (சனிக்கிழமை) நடைபெறும் 2-வது சுற்று ஆட்டங்களில் 'ஏ' பிரிவில் முதல் இடத்தை பிடித்த நெதர்லாந்து-'பி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த அமெரிக்கா (இரவு 8.30), 'சி' பிரிவில் முதல் இடத்தை பிடித்த அர்ஜென்டினா-'டி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா (நள்ளிரவு 12.30) அணிகள் மோதுகின்றன.

    வெற்றி பெறும் நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணிகள் வெளியேற்றப்படும்.

    • முதல் பாதியில் ஜெர்மனி அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
    • ஆட்டநேர முடிவில் ஜெர்மனி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    தோகா:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது.

    இதில் ஜெர்மனி, கோஸ்டா ரிகா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பத்தில் 10-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் செர்கே நாப்ரி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் ஜெர்மனி 1-0 என முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியின் 58-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா அணியின் யெல்ட்சின் ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார். 70-வது நிமிடத்தில் மானுவல் நியூர் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெர்மனி வீரர் ஹெவர்ட்ஸ் 73 மற்றும் 85வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து அசத்தினார். மற்றொரு வீரர் நிக்லஸ் புல்குர்க் 89வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், ஜெர்மனி அணி 4-2 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிகாவை வீழ்த்தியது. போட்டியில் வெற்றி பெற்றாலும் புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்ததால் தொடரில் இருந்து ஜெர்மனி மற்றும் கோஸ்டா ரிகா அணிகள் வெளியேறின.

    • முதல் பாதியில் ஸ்பெயின் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
    • ஆட்டநேர முடிவில் ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    தோகா:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது.

    இதில் ஜப்பான், ஸ்பெயின் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பத்தில் 11வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராட்டா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைபடுத்தினார். இதனால் முதல் பாதியில் ஸ்பெயின் 1-0 என முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியில் ஜப்பான் வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஜப்பானின் ரிட்சு டான் ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார். மற்றொரு வீரர் டனகா 51-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. அத்துடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.

    ஸ்பெயின் அணி தோல்வி அடைந்தாலும் கோல்கள் அதிகமாக அடித்ததால் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • குருப்-எப் பிரிவில் மொராக்கோ 7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
    • கனடா அணி ஒரு போட்டியில்கூட வெற்றி பெறாமல் போட்டியில் இருந்து வெளியேறியது.

    கத்தார்:

    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், குரூப்-எப் பிரிவில் உள்ள கனடா, மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய மொராக்கோ அணி, 4வது நிமிடம் மற்றும் 23வது நிமிடத்தில் கோல் அடித்தது. இந்த கோல்களை ஹக்கிம் ஜியேச், யூசப் யென்-நெசிரி அடித்தனர். அதன்பின்னர் 40வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பில் கனடா வீரர் நயீப் கோல் அடித்தார். இதன்மூலம் முதல் பாதி ஆட்டத்தில் மொராக்கோ அணி 2-1 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதி ஆட்டத்தில் கனடா வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். குறைந்தபட்சம் ஆட்டத்தை சமன் செய்துவிட வேண்டும் என்றும் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அவர்களின் முயற்சியை மொராக்கோ வீரர்கள் முறியடித்தனர். அதேசமயம் அவர்களும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இறுதியில் 2-1 என மொராக்கோ அணி வெற்றி பெற்றது. அத்துடன், குருப்-எப் பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. கனடா அணி ஒரு போட்டியில்கூட வெற்றி பெறாமல் வெளியேறியது.

    குரூப்-எப் பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா, பெல்ஜியம் அணிகள் விளையாடின. இப்போட்டியின் இறுதி வரை இருஅணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் கோல் இன்றி ஆட்டம் டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 5 புள்ளிகளுடன் குரோஷியா அணி நாக் அவுட் சுற்றை உறுதி செய்தது.

    • இரண்டாவது பாதியில் 2 கோல்கள் அடித்தது மெக்சிகோ.
    • ஒரு கோல் அடித்த சவுதி அரேபியா தோல்வி அடைந்தது.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் சி பிரிவில் நள்ளிரவு நடைபெற்ற 2வது ஆட்டத்தில் சவுதி அரேபியா, மெக்சிகோ அணிகள் மோதின. முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்காததால் சமநிலை நீடித்தது. 2வது பாதியின் 47வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஹென்றி மார்ட்டின் முதல் கோலை அடித்தார்.

    தொடர்ந்து 52 வது நிமிடத்தில் பிரி கிக் முறையில் மற்றொரு வீரர் லூயிஸ் சாவேஸ் கோல் அடித்து மெக்சிகோவை முன்னிலை பெறச் செய்தார். ஆட்டத்தின் முடிவில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் 95வது நிமிடத்தில் சவுதி வீரர் அல் தவ்சாரி கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டம் நிறைவு பெற்ற நிலையில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. எனினும் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை மெக்சிகோ இழந்தது. அதேபோல் சவுதி அரேபியாவும்  போட்டியில் இருந்து வெளியேறியது.

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • 46வது நிமிடத்தில் அலெக்சிஸ் அடித்த கோல் மூலம் அர்ஜென்டினா முன்னிலை

    உலக கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சி பிரிவில் நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி போலந்தை எதிர்கொண்டது. முதல் பாதிவரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி தொடங்கியவுடன் 46வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

    பின்னர் 67வது நிமிடத்தில் ஜூலியன் அல்வரெஸ் ஒருகோல் அடித்து அர்ஜென்டினா வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில் போலந்து அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்ததுடன், அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதனால் அர்ஜென்டினா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • 60-வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ லெக்கி கோல் அடித்தார்.
    • பிரான்ஸ் அணி நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியது.

    கத்தார்:

    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-டி பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-டென்மார்க் அணிகள் விளையாடின. இப்போட்டியின் முதல் பாதியில் கோல்கள் பதிவாகவில்லை. இதனால் இரண்டாவது பாதி ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது.

    ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ லெக்கி கோல் அடித்தார். அதன்பின்னர் இறுதி வரை கோல்கள் அடிக்கப்படவில்லை. எனவே, ஆஸ்திரேலிய அணி 1-0 என வெற்றி பெற்றதுடன், நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 6 புள்ளிகளை பெற்றுள்ளது.

    குரூப் டி பிரிவில் உள்ள பிரான்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

    • பிரான்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியது.
    • 3 போட்டிகளில் விளையாடிய துனிசிய அணி ஒரு வெற்றி, ஒரு டிரா என மொத்தம் 4 புள்ளிகளை பெற்றது.

    கத்தார்:

    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-டி பிரிவில் உள்ள துனிசியா-பிரான்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் துனிசியா அணியின் காஸ்ரி 58வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது.

    அதன்பின்னர் ஆட்டநேர இறுதி வரை இரு தரப்பிலும் கோல்கள் அடிக்கப்படவில்லை. கூடுதல் நேரத்திலும் கோல் முயற்சி கைகூடவில்லை. எனவே, துனிசியா அணி 1-0 என வெற்றி பெற்றது. அத்துடன், பிரான்சை வீழ்த்திய ஆறுதலுடன் போட்டியில் இருந்து வெளியேறியது.

    3 போட்டிகளில் விளையாடிய துனிசிய அணி ஒரு வெற்றி, ஒரு டிரா என மொத்தம் 4 புள்ளிகளை பெற்றது. பிரான்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியது. 

    • முதல் பாதியில் அமெரிக்க வீரர் கோல் அடித்தார்.
    • இறுதிவரை வேறு கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் குரூப் பி பிரிவில் நள்ளிரவு 12.30 மணிக்கு இரண்டு ஆட்டங்கள் ஒரே நேரத்தில் தொடங்கின. இதில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.

    மற்றொரு ஆட்டத்தில் ஈரான்-அமெரிக்கா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோல் போடுவதற்கு இரு அணிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டன. முதல் பாதியின் 38வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் புலிசிக் ஒரு கோல் அடித்து தமது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

    2வது பாதியில் ஆட்டத்தை சமன் செய்ய ஈரான் வீரர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை. இறுதிவரை வேறு கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அமெரிக்கா புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்ததுடன் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

    ×