search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சீன் டிடி கோம்ப்ஸ் வீட்டில் 1000 பேபி ஆயில் பாட்டில்கள் உள்ளிட்ட வினோத பொருட்கள் பறிமுதல்
    X

    சீன் டிடி கோம்ப்ஸ் வீட்டில் 1000 பேபி ஆயில் பாட்டில்கள் உள்ளிட்ட வினோத பொருட்கள் பறிமுதல்

    • கடத்தல், வன்முறை மூலம் பெண்களை அடிபணிய வைத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு.
    • 1000 பேர் ஆயில் பாட்டிகள் சீன் டிடி கோம்ப்ஸ் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது என அரசு தரப்பில் குற்றச்சாட்டு.

    அமெரிக்காவின் பிரபல ராப் பாடகர் சீன் டிடி கோம்ப்ஸ். இவர் மீது பாலியல் கடத்தல் மற்றும் பாலியல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    வீட்டில் இருந்தே வழக்கை எதிர்கொள்ளவதாக கோரிக்கை விடுத்திருந்த நிலையில், நீதிபதி மறுத்ததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்கும். தனது மீதான குற்றச்சாட்டை சீன் டிடி கோம்ப்ஸ் மறுத்துள்ளார்.

    சீன் டிடி கோம்ப்ஸ் பெண்களை மயக்கி அல்லது வற்புறுத்தி ஆண் பாலியல் தொழிலாளர்களுடன் உடலுறவு கொள்ள வைத்துள்ளார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. சில நேரம் பெண்களை கடத்தி வந்து அவர்களுடன் உடலுறவு வைக்க தூண்டியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

    சட்டவிரோதமான போதைப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தும் "Freak Off" நிகழ்வுடன் இந்த குற்றச்சாட்டு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

    உடலுறவு மோசடியில் ஈடுபட்டதுடன் சட்டவிரோதமான பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் நடத்தைகள் அரங்கேறியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் அவரது வீடுகளில் சோதனை செய்தபோது ஆயிரம் பேபி ஆயில் மற்றும் லூப்ரிகேன்ட்ஸ்கள் போன்ற வினோத பொருட்கள் உடலுறவுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றம் தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் அவர் வன்முறை மற்றும் தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதை உறுதி செய்வதாக இருக்கிறது என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

    பல நாட்கள் உடலுறுவு வைத்துக் கொள்ள சீன் டிடி கோம்ப்ஸ் பெரும்பாலான பெண்களை வற்புறுத்தியுள்ளார். அவர்களுடைய பெயர்களுக்கு கலங்கம் ஏற்படுத்துதல், நிதி ஆதாரம் தொடர்பாக மிரட்டல் ஆகியவை மூலமும் பெண்களை மிரட்டியுள்ளார்.

    "Freak Off" நிகழ்ச்சிகளால் காயம் அடைந்தவர்கள் குணம் அடைய பல நாட்கள் அல்லது பல வாரங்கள் எடுத்துக்கொண்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சீன் டிடி கோம்ப்ஸ் மீது ஏற்கனவே காதலி மற்றும் பெண்கள் பல பலர் புகார் அளித்துள்ளனர்.

    டிடியின் காதலி கசாண்ட்ரா வென்ச்சுரல், டிடி தனது அதிகார நிலையைப் பயன்படுத்தி அவளை ஒரு காதல் மற்றும் பாலியல் உறவுக்கு வற்புறுத்தினார். டிடி அடிக்கடி அவளை அடித்து உதைத்து, கறுப்புக் கண்கள், காயங்களுடன் இருந்ததாக அவள் சொன்னாள். இந்த வழக்கு 2023-ல் தாக்கல் செய்யப்பட்டது.

    மேலும் பல பெண்கள் முன் வந்து, டிடியின் ஃப்ரீக் ஆஃப் அமர்வுகளைப் பற்றிக் கூறி, பெண்கள் பல நாட்கள் உடலுறவு கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக குற்றம்சாட்டினர்.

    இந்த ஆண்டு மே மாதம், 2016 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் ஹோட்டலில் டிடி தனது காதலி காசியை எப்படித் தாக்கினார் என்பதைக் காட்டும் வீடியோ கசிந்தது. இதற்கு டி மன்னிப்பு கேட்டார்.

    டிடியின் கூட்டாளிகள் ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்ததாகவும், பாலியல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதாகவும், கோகோயின், மெத்தாம்பேட்டமைன் மற்றும் ஆக்ஸிகோடோன் உள்ளிட்ட போதைப்பொருட்களை விநியோகித்ததாகவும், பார்ட்டிக்காரர்களை உடலுறவுக்கு கட்டாயப்படுத்தி அவர்களை கீழ்ப்படிதலுடன் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    Next Story
    ×