என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தென் ஆப்பிரிக்கா
- வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் சேர்த்தது.
- கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கேப் டவுனில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா 10 ரன்களும், ஷபாலி வர்மா 28 ரன்களும் எடுத்தனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. கேப்டன் கவுர் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரிச்சா கோஷ் உடன், தேவிகா இணைய, இந்தியா 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியது.
11 பந்துகள் மீதமிருந்த நிலையில், இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்ததால், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரிச்சா கோஷ் 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
+2
- ஸ்டபானி டெய்லர், ஷெமைன் காம்பெல்லே இருவரும் சிறப்பாக விளையாடி நம்பிக்கை அளித்தனர்.
- இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டும், பூஜா வஸ்த்ராகர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கேப் டவுனில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் சேர்த்தது.
கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஸ்டபானி டெய்லர், ஷெமைன் காம்பெல்லே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தனர். ஸ்டபானி 42 ரன்களும், ஷெமைன் காம்பெல்லே 30 ரன்களும் சேர்த்தனர். செடீன் நேசன் 21 ரன்களும் (நாட் அவுட்), ஷபீகா 15 ரன்களும் அடித்தனர்.
இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட் கைப்பற்றினார். பூஜா வஸ்த்ராகர், ரேணுகா சிங் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய வங்காளதேசம் 107 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 111 ரன்கள் எடுத்து வென்றது.
கிபெர்கா:
8-வது பெண்கள் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேசம் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் நிகர் சுல்தானா 57 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. கேப்டன் மெக் லேனிங் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், ஆஸ்திரேலியா அணி 18.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மெக் லேனிங் 48 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஆஸ்திரேலிய அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 132 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 67 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பார்ல்:
8-வது பெண்கள் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
பார்ல் நகரில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் நியுசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டைரன் 40 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து அணி சார்பில் ஈடன் கார்சன், தஹுஹு ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி தொடக்கம் முதல் விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இறுதியில், நியூசிலாந்து அணி 18.1 ஓவரில் 67 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 65 ரன்கள் வித்தியாசத்தில அபாரமாக வெற்றி பெற்றது.
மற்றொரு லீக் போட்டியில் இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய அயர்லாந்து 18.2 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து வென்றது.
- ஏகேஏ என அழைக்கப்படும் இவர் ஏராளமான ராப் பாடல்களை பாடியுள்ளார்.
- தென் ஆப்பிரிக்காவில் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.
கேப் டவுன் :
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னணி ராப் பாடகர்களில் ஒருவர் கீர்னன் போர்ப்ஸ். ஏகேஏ என அழைக்கப்படும் இவர் ஏராளமான ராப் பாடல்களை பாடியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்த நிலையில் ஏகேஏ தனது நண்பரும், மேலாளருமான மோட்சோனேவுடன் டர்பன் நகரில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதிக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். பின்னர் அவர்கள் இருவரும் கேளிக்கை விடுதியில் இருந்து வீடு திரும்புவதற்காக காரில் ஏற சென்றனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் ஏகேஏ மற்றும் அவரது நண்பரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பி சென்றனர்.
இதில் அவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். இந்த கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியாத நிலையில் தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனிடையே ராப் பாடகர் ஏகேஏ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- முதலில் ஆடிய வங்காளதேச அணி 126 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இலங்கை அணி 129 ரன்கள் எடுத்து வென்றது.
கேப் டவுன் :
8-வது பெண்கள் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
கேப் டவுன் நகரில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய வங்காளதேசம் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி சார்பில் ரணசிங்கே 3 விக்கெட்டும், அடப்பட்டு 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணி 25 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
தொடக்க வீராங்கனை ஹர்ஷிதா மதாவியுடன் நீலாக்ஷி டி சில்வா ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியில், இலங்கை 18.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஹர்ஷிதா மதாவி அரை சதமடித்தார். அவர் 69 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். நீலாக்ஷி டி சில்வா 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- எஸ்.ஏ. 20 ஓவர் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
- இதில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஜோகனஸ்பெர்க்:
எஸ்.ஏ டி20 கிரிக்கெட் லீக் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இதில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 19.3 ஓவரில் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் அதிகபட்சமாக 21 ரன்கள் எடுத்தார்.
சன்ரைசர்ஸ் அணி சார்பில் ரோலோப் வான் டெர் மெர்வே 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 136 ரன்கள் இலக்குடன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி களமிறங்கியது.
அந்த அணி 16.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஆடம் ரோசிங்டன் 57 ரன் எடுத்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
ஆட்ட நாயகன் விருது ரோலோப் வான் டெர் மெர்வேக்கும், தொடர் நாயகன் விருது மார்கிராமுக்கும் அளிக்கப்பட்டது.
- 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 149 ரன்கள் எடுத்தது.
- இந்திய வீராங்கனை ஜெமீமா ரோட்ரிக்ஸ் அரை சதம் அடித்து (நாட்-அவுட்) 53 ரன்கள் எடுத்தார்.
8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கேப்டவுனில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.
இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் ஜவேரியா கான் 8 ரன்களும் ,முனீபா அலி 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த நிதாதர் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் இழந்தாலும் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் அரைசதம் அடித்து அசத்தினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 149 ரன்கள் எடுத்தது. பிஸ்மா மரூப் 68 ரன்களும், ஆயிஷா நசீம் 43 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 150 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடியது.
இந்நிலையில், இந்திய அணி 19 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றிப்பெற்றது. இந்திய வீராங்கனை ஜெமீமா ரோட்ரிக்ஸ் அரை சதம் அடித்து (நாட்-அவுட்) 53 ரன்கள் எடுத்தார். ஷஃபாலி வர்மா 33 ரன்களும், ரிச்சா கோஷ் 31 ரன்களும் (நாட் அவுட்), யாஸ்திக பாட்டியா 17 ரன்களும், கவுர் 16 ரன்களும் எடுத்தனர்.
- பார்ல் நகரில் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன.
- இந்த ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் வென்றன.
பார்ல்:
8-வது பெண்கள் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
பார்ல் நகரில் நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது
மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. ஹீலி அரை சதமடித்தார்.
அடுத்து ஆடிய நியூசிலாந்து 14 ஓவரில் 76 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- எஸ்.ஏ. 20 ஓவர் லீக் தொடரின் இறுதிப்போட்டி நாளை மாற்றப்பட்டுள்ளது.
- இதில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதுகின்றன.
செஞ்சூரியன்:
எஸ்.ஏ டி20 கிரிக்கெட் லீக் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த அரையிறுதியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் சந்தித்தன. இதில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
ஜோகனஸ்பர்க்கில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதுவதாக இருந்தது.
இந்நிலையில், அங்கு மழை பெய்ததால் போட்டி தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நாளை (12-02-2023) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- துணை கேப்டன் மந்தனா நாளைய போட்டியில் விளையாடாதது அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
- கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முழுமையாக குணமடைந்துள்ளதாக பயிற்சியாளர் கூறினார்.
கேப் டவுன்:
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நாளை பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதற்காக இந்திய வீராங்கனைகள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டனர்.
இந்நிலையில், இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, கைவிரல் காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியுள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், பீல்டிங் செய்தபோது ஸ்மிருதி மந்தனாவின் கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் வங்காளதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. தற்போது காயம் குணமடையாததால், பாகிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெறும் போட்டியிலும் அவர் பங்கேற்கமாட்டார்.
இதுபற்றி பயிற்சியாளர் கனித்கர் கூறுகையில், 'ஸ்மிருதிக்கு விரலில் காயம் ஏற்பட்டு இன்னும் குணமடைந்து வருவதால், அவர் பெரும்பாலும் விளையாட மாட்டார். இது எலும்பு முறிவு அல்ல. எனவே, இரண்டாவது லீக் ஆட்டத்தில் இருந்து அவர் விளையாடுவார் என நம்புகிறோம்' என்றார்.
மேலும், வெஸ்ட் இண்டீ1 மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முத்தரப்பு தொடரின்போது ஏற்பட்ட தோள்பட்டை காயத்திலிருந்து கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் பயிற்சியாளர் கூறினார். துணை கேப்டன் மந்தனா நாளைய போட்டியில் விளையாடாதது அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
உலக கோப்பையில் இந்திய அணி பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளான இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய அணிகளுடன் இந்தியா லீக் சுற்றில் மோத உள்ளது.
- மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது.
- முதல் போட்டியில் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
கேப்டவுன்:
8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது.
இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. கேப்டன் சமாரி
அடப்பட்டு பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 68 ரன்னில் அவுட்டானார். விஷ்மி குணரத்னே 38 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்கம் முதல் அந்த அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 9 ரன்களை மட்டுமே எடுத்தது.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுக்கு 126 ரன்களை எடுத்தது. இதன்மூலம் 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகி விருது சமாரி அடப்பட்டுக்கு வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்