என் மலர்
பிரிட்டன்
- இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாதத்திற்கு 200 ஸ்டிக்கர்கள் விற்பனை செய்தார்.
- கல்லூரிக்கு சென்று வந்த பிறகு தினமும் 3 மணி நேரம் வீட்டில் ஸ்டிக்கர்கள் தயாரிக்க செலவிட்டார்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பலரும் தங்கள் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆன்லைனில் ஸ்டிக்கர்களை விற்று மாதம் ரூ.16 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர் பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள லங்காஷையர் பகுதியை சேர்ந்தவர் கேலன் மெக்டொனால்ட். 17 வயதான இந்த இளைஞர் ஸ்டிக்கர்கள் தயாரிப்பதில் ஆர்வமாக இருந்தார். இதையறிந்த அவரது தாயார் கரேன் நியூஷாம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்துமஸ் பரிசாக தனது மகனுக்கு ஒரு டிஜிட்டல் கைவினை எந்திரத்தை பரிசாக வழங்கினார். அதன்மூலம் கண்ணாடி பொருட்களில் ஒட்டுவதற்காக ஸ்டிக்கர்களை உருவாக்கி அவற்றை பேஸ்புக்கில் பதிவிட்டார். புதுமையான வடிவமைப்புடன் கூடிய இந்த ஸ்டிக்கர்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாதத்திற்கு 200 ஸ்டிக்கர்கள் விற்பனை செய்தார். கல்லூரிக்கு சென்று வந்த பிறகு தினமும் 3 மணி நேரம் வீட்டில் ஸ்டிக்கர்கள் தயாரிக்க செலவிட்டார். பின்னர் தொழில்ரீதியாக பெரிய பிரிண்டர்களை வாங்கி கடந்த ஜூலை மாதம முதல் அதிக அளவிலான ஸ்டிக்கர்களை தயாரித்து ஆன்மூலம் விற்பனை செய்தார்.
டிக்டாக் மற்றும் பிற வணிக ரீதியிலான வலைதளங்கள் மூலம் இதுவரை இந்திய மதிப்பில் ரூ.83 லட்சம் வரை ஸ்டிக்கர்ளை விற்பனை செய்துள்ள கேலன் மெக்டொனால்ட் மாதம் சராசரியாக ரூ.16 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பெற்றதிலேயே சிறந்த கிறிஸ்துமஸ் பரிசு எனது தாய் எனக்கு கொடுத்த எந்திரம் தான். ஆரம்பத்தில் விளையாட்டாக தொடங்கிய இந்த ஸ்டிக்கர் தயாரிப்பு மூலம் நான் இந்த அளவுக்கு உயர்வேன் என்று நினைக்கவில்லை என்கிறார்.
- ரெயில் புறப்படும் நேரம் போன்ற விவரங்களை செயலியில் சரிபார்த்துக்கொண்டு வரும்படி பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர்.
- காலை நேரத்தில் இந்த ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
லண்டன்:
உலகம் முழுவதிலும் உள்ள பொது போக்குவரத்தில் ரெயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. போக்குவரத்து நெரிசல் இல்லாதது, குறைந்த செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரெயிலில் பயணம் செய்வதையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.
இந்தநிலையில் நேற்று இங்கிலாந்து முழுவதும் ஜி.எஸ்.எம்.ஆர். எனப்படும் ரேடியோ அமைப்பில் கோளாறு ஏற்பட்டது. இது ஓட்டுனர்களுக்கும், ஆபரேட்டர்களுக்கும் இடையே பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு அமைப்பு ஆகும்.
இதில் கோளாறு ஏற்பட்டதால் ரெயிலை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பல வழித்தடத்தில் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பல ரெயில்கள் தாமதமாக சென்று சேர்ந்தன. குறிப்பாக தலைநகர் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் செல்லும் எலிசபெத் வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரெயில்களும் நிறுத்தப்பட்டன.
இதனையடுத்து ரெயில் புறப்படும் நேரம் போன்ற விவரங்களை செயலியில் சரிபார்த்துக்கொண்டு வரும்படி பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர். பரபரப்பாக இயங்கும் காலை நேரத்தில் இந்த ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
பின்னர் தொழில்நுட்ப குழுவினர் அங்கு விரைந்து ரேடியோ அமைப்பில் ஏற்படும் கோளாறை சரிசெய்தனர். அதன்பிறகே ரெயில்கள் வழக்கம்போல் இயங்கின.
- இந்தப் பட்டியலில் பாரிஸ் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
- இதன்மூலம் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
லண்டன்:
யூரோமானிட்டர் இன்டர்நேஷனல் என்னும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு உலகின் சிறந்த 100 நகரங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சுற்றுலாவின் செயல்பாடுகள், சுற்றுலா உள்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 100 சிறந்த நகரங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் பாரிஸ் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் போன்ற முக்கிய நிகழ்வுகளை நடத்தியது, சுற்றுலா சலுகைகளை வழங்கியதால் மக்களைக் கவர்ந்த நகரங்களில் பாரிஸ் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேட்ரிட் 2-வது இடத்திலும், டோக்கியோ 3-வது இடத்திலும், ரோம் 4-வது இடத்திலும், மிலன் 5-வது இடத்திலும் உள்ளன.
நியூயார்க் (6), ஆம்ஸ்டர்டாம் (7), சிட்னி (8), சிங்கப்பூர் (9), பார்சிலோனா (10) ஆகிய நகரங்கள் டாப்-10 பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற நாடுகளாகும்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் முதல் 100 இடங்களில் தலைநகர் டெல்லி மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் டெல்லி 74-வது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் கெய்ரோ உள்ளது. ஜுஹாய் (சீனா) 99-வது இடத்திலும், ஜெருசலேம் 98-வது இடத்திலும் உள்ளது.
- இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் நேஷனல் லாட்டரியில் பரிசுச்சீட்டு வாங்கினார்.
- அவர் ஒரே நாளில் லாட்டரி மூலம் கோடீஸ்வரராகி உள்ளார்.
லண்டன்:
லாட்டரி எடுக்கும் எல்லோருக்குமே அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே எதிர்பாராத பம்பர் பரிசுகள் கிடைக்கும்.
அதன்படி, இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அங்குள்ள நேஷனல் லாட்டரியில் பரிசுச்சீட்டு வாங்கியுள்ளார்.
இந்நிலையில், லாட்டரி மூலம் அவருக்கு ஒரே நாளில் 177 மில்லியன் பவுண்டு (1800 கோடி ரூபாய்) பரிசு கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் இதற்கு முன் ஒரு முறை 195 மில்லியன் பவுண்டுகளும், ஒருமுறை 184 மில்லியன் பவுண்டுகளும் பரிசாகக் கிடைத்துள்ளன.
பிரபல இசையமைப்பாளர் ஹாரி ஸ்டைல்சை விட அதிக சொத்து மதிப்பு கொண்டவராக மாறியுள்ளார்.
இதன்மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒரே நாளில் லாட்டரி மூலம் கோடீஸ்வரராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்நாட்டுச் சட்டம் மற்றும் உண்மையில் சர்வதேச சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ள அதன் சட்டப்பூர்வ கடமைகளுக்கு இங்கிலாந்து எப்போதும் இணங்கும்.
- நாங்கள் சட்டத்தின் கீழ் எங்கள் கடமைகளை வெளிப்படையாக நிறைவேற்றுவோம்.
லண்டன்:
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இஸ்ரேல் மீது போர்க்குற்ற புகார்கள் முன் வைக்கப்பட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இங்கிலாந்துக்கு வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மரின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இங்கு வந்தால் அவரை இங்கிலாந்து போலீசார் தடுத்து வைப்பார்களா என்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது.
ஆனால் உள்நாட்டுச் சட்டம் மற்றும் உண்மையில் சர்வதேச சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ள அதன் சட்டப்பூர்வ கடமைகளுக்கு இங்கிலாந்து எப்போதும் இணங்கும். நாங்கள் சட்டத்தின் கீழ் எங்கள் கடமைகளை வெளிப்படையாக நிறைவேற்றுவோம் என்றார்.
இதன்மூலம் நெதன்யாகு இங்கிலாந்து வந்தால் அவர் கைது செய்யப்படுவார் என்று இங்கிலாந்து மறைமுகமாக தெரிவித்துள்ளது.
அதேபோல் கனடா, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், நார்வே, சுவீடன், பெல்ஜியம், துருக்கி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டுக்கு இணங்கப் போவதாக தெரிவித்து உள்ளன.
- ருமேசா, 215.16 செமீ (7 அடி 1 அங்குலம்) உலகின் உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
- ஜோதி அம்கே, 62.8 செமீ (2 அடி 1 அங்குலம்) உலகின் உயரம் குறைந்த பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
துருக்கியைச் சேர்ந்த 27 வயதான ருமேசா, 215.16 செமீ (7 அடி 1 அங்குலம்) உலகின் உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த 30 வயதான ஜோதி அம்கே, 62.8 செமீ (2 அடி 1 அங்குலம்) உலகின் உயரம் குறைந்த பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
2024 கின்னஸ் உலக சாதனை தினத்தை கொண்டாடுவதற்காக, உலகின் மிக உயரமான பெண்ணான ருமேசா கெல்கியும், உலகின் உயரம் குறைந்த பெண்ணான ஜோதி அம்கேயும் லண்டனின் புகழ்பெற்ற சவோய் ஓட்டலில் தேநீர் அருந்துவதற்காக சந்தித்தனர்.
அவர்கள் இருவரும் சந்தித்த வீடியோவை கின்னஸ் உலக சாதனையாளர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
- இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தீபாவளி கொண்டாடியுள்ளார்.
- இங்கிலாந்து பிரதமரின் தீபாவளி விருந்தில் ஆட்டுக்கறி, பீர், ஒயின் ஆகிவையை பரிமாறப்பட்டது.
அக்டோபர் 31 அன்று இந்தியாவில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தீபாவளி கொண்டாடியுள்ளார். தீபாவளி பண்டிகையை ஒட்டி பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அளித்த விருந்தில் அசைவ உணவு மற்றும் மது வகைகள் பரிமாறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமரின் தீபாவளி விருந்தில் ஆட்டுக்கறி, பீர், ஒயின் ஆகிவையை பரிமாறப்பட்டது இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளதாக இந்து தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக இங்கிலாந்தில் வாழும் சில இந்து தலைவர்கள் அந்நாட்டு பிரதமரை கடுமையாக விமர்சித்தனர்.
சென்ற வருடம் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த ரிஷி சுனக் அளித்த விருந்தில் அசைவம் மற்றும் மது வகைகள் பரிமாறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி அன்று தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இந்துக்கள் அசைவ உணவை உண்டு பண்டிகையை கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- 15 ஆண்டுகால சட்ட போராட்டத்தில் இங்கிலாந்து தம்பதியினர் வெற்றி பெற்றனர்.
- கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது.
லண்டன்:
கூகுளின் ஷாப்பிங் ஒப்பீட்டு சேவை தொடர்பான சந்தை ஆதிக்க முறைகேடு பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு ஒன்று ஐரோப்பிய ஆணையத்தில் நடந்தது.
இந்த வழக்கை விலை ஒப்பீட்டு இணையதளமான பவுண்டேமின் நிறுவனர்கள் ஷிவான் மற்றும் அவரது கணவர் ஆடம் ராப் ஆகியோர் தொடுத்திருந்தனர்.
இங்கிலாந்தை சேர்ந்த சிவான்- ஆடம் ராப் தம்பதியினர் பவுண்டெம் என்ற விலை ஒப்பீட்டு இணைய தளத்தை 2006-ல் தொடங்கினர்.
கூகுள் தேடல் அபராதத்தால் தங்கள் தளம் நியாயமற்ற முறையில் தண்டிக்கப்பட்டது என குற்றம் சாட்டிய அவர்கள், இந்த விலை ஒப்பீடு மற்றும் ஒப்பீடு ஷாப்பிங் போன்ற தொடர்புடைய கேள்விகளுக்கான தேடல் முடிவுகளில் அவர்களின் தளத்தை கீழே தள்ளிவிட்டதாகக் கூறினர்.
இரு ஆண்டாக கூகுளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், தளத்தின் மீதான கட்டுப்பாடு ஒருபோதும் நீக்கப்படவில்லை. இந்த செயலற்ற தன்மை பவுண்டெம் நிறுவனத்துக்கு கடும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் மற்ற தேடுபொறிகள் அதை வழக்கமாக தரவரிசைப்படுத்தியது. இந்தச் சிக்கலால் பவுண்டேமை மூடிய அந்த தம்பதியினர், கூகுளுக்கு எதிராக நஷ்டஈடு கோரி வழக்கு தொடுத்தனர்.
கடந்த 2010-ம் ஆண்டில் ஐரோப்பிய ஆணையத்தை அவர்கள் அணுகினர். பவுண்டெம் போன்ற போட்டியாளர்களை விட கூகுள் தனது சொந்த ஷாப்பிங் சேவையை நியாயமற்ற முறையில் விளம்பரப் படுத்தியதாக ஒரு விரிவான நம்பிக்கையற்ற விசாரணையில் கண்டறியப்பட்டது.
கூகுள் நிறுவனம் தனது சந்தை ஆதிக்கத்தை தவறாகப் பயன்படுத்தியதாக ஆணையம் தீர்ப்பளித்ததுடன் 2.4 பில்லியன் பவுண்டுகள் இழப்பீடும் விதித்து 2017-ம் ஆண்டில் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. கடந்த 7 ஆண்டாக நடந்த சட்டப்போராட்டத்தின் முடிவில் 2024-ல் கூகுள் மேல்முறையீட்டை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்ததுடன், அபராதத்தையும் உறுதி செய்தது.
இதன்படி கூகுள் நிறுவனம் இங்கிலாந்து தம்பதிக்கு 26,000 கோடி ரூபாய் இழப்பீடாக கொடுக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- மறைந்த இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத்துக்கு பிடித்தமான புனைவு பாத்திரமாக ‘பட்டிங்டன்’ கரடி விளங்கியது.
- இங்கிலாந்து அரசு புனைவு கதாபாத்திரம் ஒன்றுக்கு பாஸ்போர்ட் வழங்குவது இதுவே முதல்முறையாகும்.
லண்டன்:
இங்கிலாந்தை சேர்ந்த எழுத்தாளரான மைக்கேல் பான்ட், 1958-ம் ஆண்டு 'பட்டிங்டன்' என்ற சிறுகதை புத்தகத்தை எழுதினார். பழுப்பு கரடியை கதாநாயகனாக கொண்டு எழுதப்பட்ட இந்த புனைவு சிறுகதை புத்தகத்தின் பிரதிகள் கோடிக்கணக்கில் விற்று தீர்ந்து பிரபலமானது.
இதனை தொடர்ந்து அந்த பாத்திரத்தை மையமாக கொண்டு தொடர்கதைகள், கார்ட்டூன் தொடர் மட்டுமின்றி சினிமா படங்களும் எடுக்கப்பட்டு வருகிறது. மறைந்த இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத்துக்கு பிடித்தமான புனைவு பாத்திரமாக 'பட்டிங்டன்' கரடி விளங்கியது.
இந்தநிலையில் 'பட்டிங்டன்' கதாபாத்திரத்தை தழுவி உருவாகும் புதிய சினிமா படத்துக்காக போலியாக பாஸ்போர்ட் ஒன்றை உருவாக்கி தருமாறு குடியேற்றத்துறை அதிகாரிகளிடம் படக்குழுவினர் விண்ணப்பித்திருந்தனர்.
இதனைதொடர்ந்து இங்கிலாந்து அரசு 'பட்டிங்டன்' பெயரில் அசல் பாஸ்போர்ட்டை வழங்கி கவுரவித்துள்ளது. இங்கிலாந்து அரசு புனைவு கதாபாத்திரம் ஒன்றுக்கு பாஸ்போர்ட் வழங்குவது இதுவே முதல்முறையாகும்.
- பாகிஸ்தான், இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என சமனிலை வகிக்கிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது.
லண்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
இந்த தொடரில் 2 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 24-ம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இதில் வெற்றிபெற இரு அணிகளும் கடுமையாக போராடும்.
இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் வீரர்களை (ஆடும் லெவன்) இங்கிலாந்து அறிவித்துள்ளது.
இந்த அணியில் கடந்த போட்டியில் விளையாடாத கஸ் அட்கின்சன் மற்றும் ரெஹான் அகமது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணி விவரம்; ஜாக் க்ராவ்லி, பென் டக்கட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கஸ் அட்கின்சன், ரெஹான் அகமது, ஜேக் லீச், ஷோயப் பஷீர்.
- குழந்தை ஒன்று மூன்று ஆணுறுப்புகளுடன் பிறந்தது.
- வாழ்நாள் முழுக்க தன் நிலையை அறியாமலேயே வாழ்ந்திருக்கலாம்.
பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவருக்கு மூன்று ஆண்குறிகள் இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மிகவும் அரிய பிறவி குறைபாடு என்ற வகையிலும் இது உலகில் இரண்டாவது நிகழ்வு ஆகும். மருத்துவ உலகில் இது 'டிரிஃபாலியா' என்று அழைக்கப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு ஈராக் நாட்டின் டுஹோக்கில் டிரிஃபாலியா குறைபாட்டை மருத்துவர்கள் முதன் முதலில் பதிவு செய்தனர். அப்போது குழந்தை ஒன்று, 3 ஆணுறுப்புகளுடன் பிறந்தது.
பர்மிங்காம் மருத்துவப் பள்ளியின் மாணவர் ஆராய்ச்சியாளர்கள் 78 வயது முதியவரின் சடலத்தை ஆய்வு செய்தனர். முதியவர் தனது உடலை ஆய்வுக்கு பயன்படுத்த அனுமதி அளித்த நிலையில், அவரது உடல் தானமாக வழங்கப்பட்டது. அந்த முதியவர் தன் வாழ்நாள் முழுக்க தன் நிலையை அறியாமலேயே வாழ்ந்திருக்கலாம் என்று தெரிகிறது.
டிஃபாலியா, அல்லது இரண்டு ஆண்குறிகள் கொண்ட நிலை, டிரிபாலியாவுடன் ஒப்பிடுகையில் மிகவும் பொதுவான நிகழ்வு ஆகும். உலகில் ஐந்து முதல் ஆறு மில்லியன் மக்களில் ஒருவரை மட்டுமே இது பாதிக்கிறது. இன்றுவரை சுமார் 100 பேருக்கு மட்டுமே டிஃபாலியா ஏற்பட்டுள்ளது.
ஜர்னல் ஆஃப் மெடிக்கல் கேஸ் ரிப்போர்ட்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, டிரிஃபாலியாவின் ஒரே ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மூன்று தனித்தனி ஆண்குறி தண்டுகள் இருப்பதால் வகைப்படுத்தப்படும் ஒரு அரிய பிறவி நிலை என வரையறுக்கப்படுகிறது.
- கூண்டில் உள்ள பறவைகளுக்கு உணவளித்து, வீட்டை துடைத்து, சமையல் செய்து வைத்தார்
- டாமியன் சிறுவயது முதலே தங்க வீடில்லாமல் பல கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளார்
பிரிட்டனில் திருடப் போன வீட்டில் கூட்டிப் பெருக்கி, சாப்பாடு சமைத்து, துணிதுவைத்து காயப்போட்டுவிட்டு தப்பிய பலே திருடன் பற்றிய உண்மை வெளிவந்துள்ளது. பிரிட்டனில் கார்டிப் [Cardiff] நகரில் தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டில் திருடுவதற்காக டாமியன் வோஜ்னிலோவிச் [Damian Wojnilowicz] என்ற 36 வயது திருடன் உள்ளே நுழைந்துள்ளான்.

பெண் வீட்டில் இல்லாத சமயமாகப் பார்த்து நுழைந்த டாமியன், வீட்டில் சேர்ந்த குப்பைகளை அப்புறப்படுத்தி, சமையலறை, கழிவறையில் உள்ள பொருட்களைச் சீராக அடுக்கி வைத்து, கடையில் வாங்கி வைத்திருந்த பலசரக்கு பொருட்களை பிரிட்ஜில் அடுக்கி வைத்து , கூண்டில் உள்ள பறவைகளுக்கு உணவளித்து, வீட்டை துடைத்து, சமையல் செய்து, துணிகளைத் துவைத்து அதைக் காயப்போட்டு விட்டுச் சென்றுள்ளார்.

வீட்டை விட்டு வரும்போது, 'டோன்ட் வொரி, பி ஹாப்பி, நன்றாக சாப்பிடுங்கள்' என்று எழுதி வைத்துவிட்டும் வந்துள்ளார். வீட்டில் வசித்து வந்த அந்தப்பெண் திரும்பிவைத்தும் இதைப் பார்த்து அதிர்ந்துபோனார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தபின், திருடனின் வினோத செய்கையால் பயந்து தனது வீட்டில் வசிக்காமல் தோழி வீட்டில் தங்கியுள்ளார்.
இந்த சம்பவம் ஜூலை 16 ஆம் தேதி நடந்த நிலையில் ஒருவாரம் கழித்து ஜூலை 26 ஆம் தேதி மற்றொரு வீட்டில் திருடும்போது டாமியன் பிடிபட்டுள்ளார். டாமியன் சிறுவயது முதலே தங்க வீடில்லாமல் பல கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளார் என்று அவரது வக்கீல் தெரிவித்தார். இதுதொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் அவர் மீது விசாரணை நடந்து வரும் வேலையில் இந்த விசித்திர திருடனின் கதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.