என் மலர்tooltip icon

    ஜிம்பாப்வே

    • முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 586 ரன்கள் குவித்தது.
    • சீன் வில்லியம்ஸ், எர்வின், பென்னெட் ஆகியோர் சதமடித்தனர்.

    புலவாயோ:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.

    இவ்விரு அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் பென் கர்ரன் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 74 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கைடனோ 46 ரன்னில் அவுட்டானார்.

    சீன் வில்லியம்ஸ் சிறப்பாக ஆடி சதமடித்தார். கேப்டன் கிரெய்க் எர்வின் மற்றும் பென்னெட் ஆகியோரும் சதம் கடந்து அசத்தினர்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 586 ரன்கள் குவித்தது. பென்னெட் 110 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்துள்ளது.

    • டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதல் நாள் முடிவில் ஜிம்பாப்வே 363 ரன்கள் குவித்தது.

    புலவாயோ:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.

    இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் புலவாயோவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஜாய்லார்டு கம்பே 9 ரன்னில் அவுட்டானார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பென் கர்ரன் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 74 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கைடனோ 46 ரன்னில் அவுட்டானார். டயான் மையர்ஸ் 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சீன் வில்லியம்ஸ் சிறப்பாக ஆடி சதமடித்தார். கேப்டன் கிரெய்க் எர்வின் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் எடுத்தது. சீன் வில்லியம்ஸ் 145 ரன்னும், எர்வின் 56 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 131 ரன்கள் எடுத்து வென்றது.

    புலவாயோ:

    ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் இரு ஆட்டங்கள் முடிந்த நிலையில் 1-0 என ஆப்கானிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி ஆப்கானிஸ்தான் அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 30.1 ஓவரில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சீன் வில்லியம்ஸ் 60 ரன்கள் எடுத்தார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் கசன்பர் 5 விக்கெட்டும், ரஷித் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர் .

    இதையடுத்து, 128 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 26.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் விருது கசன்பருக்கும், தொடர் நாயகன் விருது செதிகுல்லா அடலுக்கும் வழங்கப்பட்டது.

    • டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • ஜிம்பாப்வே அணி 44 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது

    ஹராரே:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது. மழை காரணமாக இந்தப் போட்டி 28 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. 9.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு ஜிம்பாப்வே அணி 44 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    • முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 127 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    ஹராரே:

    ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே 19.5 ஓவரில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரையன் பென்னட் 31 ரன்னும், வெஸ்லே மாதவரே 21 ரன்னும் எடுத்தனர்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்டும், நவீன் உல்-ஹக், அஸ்மதுல்லா, முஜிபுர் ரகுமான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. அஸ்மதுல்லா ஒமர்சாய் 34 ரன்னிலும், குல்பதின் நயீப் 22 ரன்னிலும் அவுட்டாகினர்.

    கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய முகமது நபி 24 ரன்னுட ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் 19.3 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.

    ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா, முசாராபானி, ட்ரெவர் குவாண்டு ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகன் விருது அஸ்மதுல்லா ஓமர்சாய்க்கும், தொடர் நாயகன் விருது நவீன் உல் ஹக்குக்கும் வழங்கப்பட்டது.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய ஜிம்பாப்வே 12.4 ஓவரில் 57 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • பாகிஸ்தானின் சுபியான் முக்கிம் 3 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.

    புலவாயோ:

    பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 2-1 என தொடரைக் கைப்பற்றியது. முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே 12.4 ஓவரில் 57 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர்கள் மட்டும் இரட்டை இலக்கத்தை தாண்டினர்.

    பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சுபியான் முக்கிம் 2.4 ஓவரில் வெறும் 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 5.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரையும் கைப்பற்றியது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 303 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 204 ரன்கள் எடுத்து தோற்றது.

    புலவாயோ:

    ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டி தொடரில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணி தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமனிலை வகித்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது. கம்ரன் குலாம் சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் 50 ரன்கள் எடுத்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ரசா, ரிச்சர்ட் நரவா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் துல்லியமாகப் பந்து வீசி விக்கெட்களை இழந்தனர்.

    கேப்டன் கிரெய்க் எர்வின் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்து 51 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 40.1 ஓவரில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் ஒருநாள் தொடரை 2-1 கைப்பற்றியது.

    இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக கம்ரான் குலாமும், தொடர் நாயகனாக சயீம் அயூபும் தேர்வு செய்யப்பட்டனர்.

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 145 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 18.2 ஓவரில் 148 ரன்கள் எடுத்து வென்றது.

    புலவாயோ:

    ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 32.3 ஓவரில் 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டியான் மையர்ஸ் 33 ரன்னும், சீன் வில்லியம்ஸ் 31 ரன்னும், எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும், ஆகா சல்மான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்கம் ஆட்டக்காரர் சயீம் அயூப் அதிரடியில் மிரட்டினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 18.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 148 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சயீம் அயூப் 62 பந்தில் 113 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதன்மூலம் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 சமனிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக சயீம் அயூப் தேர்வு செய்யப்பட்டார்.

    • டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே 145 ரன்களில் ஆல் அவுட்டானது.

    புலவாயோ:

    ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 32.3 ஓவரில் 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டியான் மையர்ஸ் 33 ரன்னும், சீன் வில்லியம்ஸ் 31 ரன்னும், எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும், ஆகா சல்மான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 205 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • சிக்கந்தர் ராசா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    புலவாயோ:

    ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 40.2 ஓவரில் 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நகர்வா 48 ரன்னும், சிக்கந்தர் ராசா 39 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் பைசல் அக்ரம், ஆகா சல்மான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை பாகிஸ்தான் களமிறங்கியது. ஆரம்பத்திலேயே துல்லியமாக பந்து வீசி ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தனர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    பாகிஸ்தான் அணி 21 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நிற்காததால் ஆட்டத்தை தொடர முடியவில்லை. எனவே, வெற்றியாளரை தீர்மானிக்க டக்வொர்த் லூயிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் ஜிம்பாப்வே அணி 80 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    ஜிம்பாப்வே சார்பில் முசரபானி, சிக்கந்தர் ராசா, சீன் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதன்மூலம் ஒருநாள் தொடரில் ஜிம்பாப்வே 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக சிக்கந்தர் ராசா தேர்வு செய்யப்பட்டார்.

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 152 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 156 ரன்கள் எடுத்து வென்றது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே, இந்தியா அணிகள் மோதும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் சிக்கந்தர் ராசா 28 பந்தில் 46 ரன்கள் எடுத்தார். டாடிவான்சே மருமானி 32 ரன்னில் அவுட்டானார். வெஸ்லி மாதவரே 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தனர்.

    இறுதியில், இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 3-1 என முன்னிலையில் உள்ளது.

    ஜெய்ஸ்வால் 53 பந்தில் 93 ரன்னும், சுப்மன் கில் 39 பந்தில் 58 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது.
    • அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே 152 ரன்கள் எடுத்தது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே, இந்தியா அணிகள் மோதும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் துஷார் தேஷ்பாண்டே அறிமுகம் ஆகிறார்.

    அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்த நிலையில் டாடிவான்சே மருமானி 32 ரன்னில் அவுட்டானார். வெஸ்லி மாதவரே 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதிரடியாக ஆடிய கேப்டன் சிக்கந்தர் ராசா 28 பந்தில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது.

    இந்தியா சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    ×