என் மலர்
பாகிஸ்தான்
- முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 351 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 356 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
லாகூர்:
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய பென் டக்கெட்சதமடித்து அசத்தினார். அவர் 165 ரன்களில் அவுட் ஆனார். ஜோ ரூட் அரை சதம் கடந்து 68 ரன்னில் அவுட் ஆனார்.
ஆஸ்திரேலியா சார்பில் பென் துவார்ஷியஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் அரை சதம் கடந்து 63 ரன்னில் அவுட்டானார். அலெக்ஸ் கேரி 69 ரன்னில் வெளியேரினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் லபுசேன்47 ரன்னில் வெளியேறினார்.
ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக ஆடி சதம் கடந்து அசத்தினார். இறுதிவரை நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், ஆஸ்திரேலியா அணி 47.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜோஷ் இங்கிலிஸ் 120 ரன்னும், மேக்ஸ்வெல் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 315 ரன்கள் குவித்தது.
- சிறப்பாக ஆடிய ரியான் ரிக்கல்டன் சதமடித்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கராச்சி:
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கராச்சியில் இன்று நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ரிக்கல்டன் சதமடித்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் பவுமா 58 ரன்னும், வேன் டெர் டூசென் 52 ரன்னும், எய்டன் மார்க்ரம் 52 ரன்னும் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது நபி 2 விக்கெட்டும், ஃபரூக்கி, ஹஷ்மதுல்லா ஒமர்சாய், நூர் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.
ரஹ்மத் ஷா கடைசி வரை போராடினார். அரை சதம் கடந்த அவர் 90 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் 43.3 ஓவரில் 208 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், நிகிடி, முல்டர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 320 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 260 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
கராச்சி:
8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்கியது.
கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்தது. டாம் லாதம் 104 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 118 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். வில் யங் 113 பந்தில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 107 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
வில் யங்-டாம் லாதம் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தது. பிலிப்ஸ் 39 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்கருடன் 61 ரன்கள் குவித்தார்.
பாகிஸ்தான் சார்பில் ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அப்ரார் அகமது 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சவூத் ஷகில் 6 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய முகமது ரிஸ்வான் 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பகர் சமான் 22 ரன்னில் வெளியேறினார்.
விக்கெட்கள் ஒருபுறம் வீழ்ந்தாலும் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 64 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சல்மான் ஆகா அதிரடியாக ஆடி 42 ரன்கள் எடுத்து அவுட்டானார். 4வது விக்கெட்டுக்கு இணைந்த பாபர் அசாம்-சல்மான் ஆகா ஜோடி 58 ரன்கள் சேர்த்தது.
கடைசி கட்டத்தில் குஷ்தில் ஷா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 69 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், பாகிஸ்தான் 47.2 ஓவரில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சார்பில் சாண்ட்னர், வில்லியம் ரூர்கி தலா 3 விக்கெட்டும், மேட் ஹென்றி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான், துபாயில் நடைபெறுகிறது.
- பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்கான ஆட்டங்கள் துபாயில் நடக்கிறது.
லாகூர்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டி உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது.
2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 29 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.சி.சி.யின் பெரிய போட்டியை அந்த நாடு நடத்துகிறது.
9வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் ஒரு பாதுகாப்பான நாடு என்பதை உலகம் நம்புகிறது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ரமீஸ் ராஜா தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் ஒரு பாதுகாப்பான நாடு என்பதும், நிர்வாகக் கண்ணோட்டத்தில் அத்தகைய உலகளாவிய நிகழ்வை வழங்குவதற்கு வல்லமை வாய்ந்தது என்பதையும் உலகை ஏற்கவைப்பது தீவிர கடின உழைப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. உலகம் இறுதியில் நமது பார்வையைப் புரிந்து கொண்டது என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கடைசியாக 1996-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை இந்தியா, இலங்கையுடன் இணைந்து நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- லாரி டிரைவர் பலி, போலீஸ்காரர் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர்.
- நிவாரண பொருட்கள் ஏற்றிய லாரிகள் வேறு பாதையில் திரும்பி விடப்பட்டன.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள குர்ரம் மாவட்டத்தில் இரு பிரிவு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. வன்முறை பாதிக்கப்பட்ட குர்ரம் மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தால் பகுதியில் இருந்து குர்ரமுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் அணிவகுத்து சென்றன. அப்போது ஓச்சிட் என்ற பகுதியில் மர்ம நபர்கள், லாரிகள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஒரு லாரி டிரைவர் பலியானார். ஒரு போலீஸ்காரர் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர்.
இதேபோல் பாகன், மண்டோரி, டாட் கமர் மற்றும் சார் கேல் உள்பட பல இடங்களிலும் தாக்குதல் நடந்தது. இதையடுத்து நிவாரண பொருட்கள் ஏற்றிய லாரிகள் வேறு பாதையில் திரும்பி விடப்பட்டன.
இந்த தாக்குதலுக்கு கைபர் பக்துன்க்வா மாகாண முதல்-மந்திரி லி அமின் கந்தாபூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதியைக் குலைக்கும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- பாகிஸ்தானின் இருவேறு இடங்களில் சாலை விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்துகளில் மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் சிந்த் பகுதியில் நடைபெறும் மத நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கின.
இரு இடங்களில் நடந்த சாலை விபத்தில் மொத்தம் 16 பேர் உயிரிழந்ததாகவும், 45 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பெனாசிராபாத் மாவட்டத்தில் உள்ள காசி அகமத் நகர் அருகே வேன் மற்றும் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.
இதேபோல், கயிர்பூர் மாவட்டத்தில் உள்ள ராணிபூர் பகுதி அருகே பஸ் மற்றும் ஆட்டோ மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 35 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இரு விபத்துகளில் 16 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 49.3 ஓவரில் 242 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய நியூசிலாந்து 243 ரன்கள் எடுத்து வென்றது.
லாகூர்:
பாகிஸ்தானில் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் 49.3 ஓவரில் 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரிஸ்வான் 46 ரன்னிலும், சல்மான் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தையப் தாஹிர் 38 ரன்னும், பாபர் அசாம் 29 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. டேரில் மிட்செல், டாம் லாதம் அரை சதம் கடந்தனர். டேவன் கான்வே 48 ரன்னில் அவுட்டானார். கேன் வில்லியம்சன் 38 ரன் எடுத்தார்.
இறுதியில், நியூசிலாந்து 45.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 243 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
- பலுசிஸ்தானில் மக்கள், பாதுகாப்புப்படை வீரர்கள், தொழிலாளர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
- சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் தொழிலாளர்கள் உயிரிழப்பு.
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் லாரியில் சென்று கொண்டிருக்கும்போது, சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டடிருந்து வெடிகுண்டு (IED) வெடித்ததில் 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏழு பேர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.
பலுசிஸ்தான் அரசு செய்தி தொடர்பானர் ஷாஹித் ரிண்ட் "இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தொடக்க விசாரணையில் சாலையோரம் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு (IED), லாரி சென்றபோது வெடிக்க வைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் இதுபோன்ற கடந்த கால தாக்குதலுக்கு சட்டவிரோத பலுச் விடுதலைப்படை மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வடமேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் தடைசெய்யப்பட்ட குழுக்கள் பாதுகாப்புப்படைகள், பாதுகாப்பு கட்டமைப்புகள், மக்கள் மற்றும் சீன தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.
- ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
- அந்த நபரின் புத்திசாலித்தனத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
பொதுவாக ஆடம்பர பொருட்கள் மீது சாமானியர்களுக்கு அலாதி ஆசை உண்டு. ஆனால் அவற்றின் அதிக விலை காரணமாக அந்த ஆசை பெரும்பாலும் நிறைவேறுவது இல்லை. இதற்கு விதிவிலக்காக சிலர் தங்களது புத்திசாலித்தனம் மூலம் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
அதேசமயம் அவர்களது தனித்துவமான அந்த செயல் மற்றவர்களையும் ஈர்க்கிறது. அந்தவகையில் பாகிஸ்தானின் சாலையில் சென்ற ஒரு சொகுசு கார் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதாவது சிவப்பு நிறமுள்ள அந்த காரின் பின்புறத்தை பார்க்கும் எவரும் அதனை விலையுயர்ந்த கார் என்றே நினைப்பார்கள். ஆனால் அதன் முன்புறமோ மோட்டார் சைக்கிள் மூலம் பொருத்தப்பட்டு அந்த கார் இயங்கியது.
இதனை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து அந்த நபரின் புத்திசாலித்தனத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 352 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் ஹென்றிச் கிளாசன் அதிகபட்சமாக 87 ரன் எடுத்தார்.
கராச்சி:
நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
நியூசிலாந்து தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது.
இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் கராச்சியில் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது. கிளாசன் அதிரடியாக ஆடி 87 ரன்னும், பிரீட்ஸ்கே 83 ரன்னும், பவுமா 82 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஷாகின் அப்ரிடி 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாபர் அசாம் 23 ரன்னும், சவுத் ஷகீல் 15 ரன்னும், பகர் சமான் 41 ரன்னும் எடுத்தனர்.
ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் முகமது ரிஸ்வானுடன், ஆகா சல்மான் இணைந்தார். இந்த ஜோடி தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை திறம்பட சமாளித்தது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. இருவரும் சதமடித்து அசத்தினர்.
ஆகா சல்மான் 134 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 260 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
இறுதியில், பாகிஸ்தான் 49 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 355 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ரிஸ்வான் 122 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்துடன் மோதுகிறது.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 330 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 252 ரன்களில் ஆல் அவுட்டாகி தோற்றது.
லாகூர்:
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
லாகூரில் இன்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 330 ரன்கள் குவித்தது. 6-வது வீரராக களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 74 பந்தில் 106 ரன்கள் விளாசினார். டேரில் மிட்செல் 81 ரன்னும், கேன் வில்லியம்சன் 58 ரன்னும் சேர்த்தனர். ரச்சின் ரவீந்திரா 25 ரன்னிலும் வெளியேறினார்.
பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும், அப்ரார் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் அதிரடியாக ஆடி 69 பந்தில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சல்மான் ஆகா 40 ரன்னும் தயாப் தாஹிர் 30 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், பாகிஸ்தான் 47.5 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆட்ட நாயகன் விருது கிளென் பிலிப்சுக்கு அளிக்கப்பட்டது.
- கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 74 பந்தில் 106 ரன்கள் விளாசினார்.
- பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 10 ஓவரில் 88 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. லாகூரில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் வில் யங் 4 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 25 ரன்னிலும் வெளியேறினர்.
அதன்பின் வந்த கேன் வில்லிம்சன், டேரில் மிட்செல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேன் வில்லியம்சன் 89 பந்தில் 58 ரன்களும், டேரில் மிட்செல் 84 பந்தில் 81 ரன்களும் சேர்த்தனர்.
6-வது வீரரான களம் இறங்கிய கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 74 பந்தில் 106 ரன்கள் விளாச நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்துள்ளது.
பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 10 ஓவரில் 88 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அப்ரார் அகமது 10 ஓவரில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 331 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.