என் மலர்tooltip icon

    Recap 2024

    • 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை ரோகித் தலைமையிலான இந்திய அணி வென்றது.
    • மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

    இன்றோடு 2024 ஆம் ஆண்டு முடிவடையவுள்ளது. நாளை நாம் 2025 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறோம்.

    இந்நிலையில், இந்தியாவில் இந்தாண்டு பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றது. பல புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலானது. அவ்வகையில் இந்தாண்டு வைரலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த ரீவைண்ட் செய்தியில் நாம் பார்க்கவுள்ளோம்.

    1. டி20 உலகக்கோப்பையை வென்றபின் ரோகித்தும் கோலியும் கட்டிப்பிடித்த புகைப்படம்

    2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை ரோகித் தலைமையிலான இந்திய அணி வென்றது. இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதை கோலி வென்றார். 2007-க்கு பிறகு மீண்டும் டி20 உலகக்கோப்பையை வென்றது இந்திய அணியின் உணர்ச்சிமிகு தருணமாக இருந்தது.

    அப்போது ரோகித்தும் கோலியும் கண்களில் அக்கண்ணீரோடு ஒருவரை ஒருவர் கட்டியணைத்து புகைப்படம் இணையத்தில் வைரலானது.

    2. மக்களவை தேர்தலுக்கு பின்பு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவும் ஒரே விமானத்தில் பயணம் செய்த புகைப்படம்

    2024 மக்களவை தேர்தலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தார். பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தார். மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

    மக்களவை தேர்தலுக்கு பிறகு அதிக இடங்களை வென்ற நிதிஷ்குமாரும் சந்திரபாபு நாயுடுவும் பாஜக கூட்டணியின் கிங் மேக்கர்களாக உருவெடுத்தனர்.

    அந்த சமயத்தில் நிதிஷ்குமாரும் தேஜஸ்வி யாதவும் ஒரே விமானத்தில் பயணம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    3. ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின்பு துக்கத்தில் மூழ்கிய வினேஷ் போகத்தின் புகைப்படம்

    ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவிலான மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்று பதக்கம் வெல்வதை உறுதி செய்திருந்தார்.

    அப்போது வினேஷ் போகத் 50 கிலோ எடையை விட சில கிராம்கள் எடை அதிகமாக உள்ளதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த செய்தியறிந்து சோகத்தில் மூழ்கிய வினேஷ் போகத்தின் புகைப்படம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    4. திருமணத்தின்போது லூடோ விளையாடிய மாப்பிள்ளையின் புகைப்படம்

    திருமணத்தன்று மணமகனும் மணமகளும் பரபரப்பாக இருப்பார்கள். ஆனால் திருமணம் நடக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு வரை ஒரு மாப்பிள்ளை தனது நண்பர்களுடன் மனமேடையிலேயே செல்போனில் லூடோ விளையாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.

    5. தாங்கள் இணைந்து நடித்த கரண் அர்ஜுன் படத்தை பார்த்து ரசித்த ஷாருக்கான் சல்மான் கானின் வீடியோ

    ஷாருக்கானும் சல்மான் கானும் இணைந்து நடித்த கரண் அர்ஜுன் திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தை சல்மான் கானும் ஷாருக் கானும் இணைந்து டிவியில் பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.

    6. டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் வாகன பேரணியை மரத்தின் மேலே அமர்ந்து ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்த நிகழ்வு

    2007-க்கு பிறகு மீண்டும் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. இதனையடுத்து வெற்றி பெற்ற இந்திய அணியினர் மும்பையில் வாகன பேரணி சென்றனர். அப்போது மரத்தின் மேலே ஏறி அமர்ந்த ரசிகர் ஒருவர் இந்திய அணி வீரர்களை புகைப்படம் எடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    • தமிழ்நாட்டில் ‘ஃபெஞ்சல்’ புயல் காரணமாக வட மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
    • மண்சரிவால் பாதிக்கப்பட்ட வீட்டையும், மீட்புப்பணியையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

    வங்கக்கடலில் கடந்த மாதம் 23-ந் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்து, 'ஃபெஞ்சல்' என்ற பெயரை தாங்கியபடி வலுப்பெற்று, நிலப்பகுதிக்குள் நேற்று முன்தினம் நுழைந்தது. இந்த புயல் ஆரம்பத்தில் இருந்து கண்ணாமூச்சி காட்டியபடியே பயணித்தது.

    முதலில் தாழ்வுப்பகுதியாக உருவாகி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக மாறும் என நினைத்து, வலுஇழந்து, மீண்டும் உதயமாகி முன்பை காட்டிலும் வலிமையுடன் கடலில் நிலை கொண்டிருந்தது.

    புயல் உருவாவதில் எப்படி கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியதோ? அதேபோல், கரையை கடப்பதிலும் தன்னுடைய ஆட்டத்தை காட்டியது. மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது. அதன்படி, மரக்காணத்துக்கும், புதுச்சேரிக்கும் இடைப்பட்ட பகுதியை மையமாக வைத்து கடந்த நவ.30-ந்தேதி புதுச்சேரிக்கு அருகில் கரையை கடந்தது.

     

    கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கி நின்றது.

    ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் அதி கனமழை பெய்தது. ருத்ரதாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தபோது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும் மழைப்பொழிவு இருந்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தன.

    தமிழ்நாட்டில் 'ஃபெஞ்சல்' புயல் காரணமாக வட மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தையும் 'ஃபெஞ்சல்' புயல் விட்டு வைக்கவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. மேலும் அந்த பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியதால் சாலைகள் வெள்ளக்காடானது. ஊத்தங்கரை பகுதியில் மட்டும் 50 சென்டி மீட்டர் மழை பெய்ததால் ஊத்தங்கரை நகரை சுற்றி உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் ஊருக்குள் புகுந்தது.

     

    கடலூர் தென்பெண்ணையாற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய காட்சி.

    குறிப்பாக ஊத்தங்கரை- திருப்பத்தூர் சாலையில் உள்ள பரசனேரி நிரம்பி வெளியேறிய உபரிநீரால், அங்கே ஏரிக்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாடகை கார்கள், மினி வேன்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டன. மேலும் அந்த சாலையில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

    இதேபோல ஊத்தங்கரை அண்ணாநகர், காமராஜர் நகர் குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கினார்கள்.

    இதேபோல் திருவண்ணாமலையிலும் பலத்த மழை பெய்தது. கலெக்டர் பங்களாவுக்குள்ளேயே வெள்ளம் புகும் அளவுக்கு கனமழை வெளுத்து வாங்கியது.

     

     

    திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலை என அழைக்கப்படும் மலையின் அடிவாரத்தில் வ.உ.சி. நகர் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமானோர் வசிக்கின்றனர்.

    இந்த மலையில் இருந்து ராட்சத பாறை ஒன்று திடீரென உருண்டு குடியிருப்புகளுக்கு மேல் தொங்கியவாறு நின்றது. அப்போது திடீரென ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

    இதற்கிடையே மண்சரிவால் பாதிக்கப்பட்ட வீட்டையும், மீட்புப்பணியையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். திருவண்ணாமலை ஆஸ்பத்திரிக்கும் உதயநிதி ஸ்டாலின் சென்றார். அங்கு, மண் சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    மண் சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த துணை முதலமைச்சர், இறந்த 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

    • தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
    • குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    தமிழக காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் கோவை போலீசார் ஈடுபட்டனர்.

     

    சவுக்கு சங்கர் தேனி வந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இன்று கடந்த மே மாதம் 4-ந்தேதி அதிகாலை 3 மணியளவில் தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், அவருடன் இருந்த ராஜரத்தினம் மற்றும் ராம்பிரபு ஆகிய இருவரையும் பழனிசெட்டிபட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் சுமார் 18 மணி நேர விசாரணை நடந்த நிலையில், நள்ளிரவு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

    சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் பெண் போலீசாரை தாக்க முயன்றது, அவதூறாகப் பேசியது, தலா 100 கிராம் வீதம் நான்கு பாக்கெட்டுகளில் 400 கிராம் கஞ்சா வைத்திருந்தது ஆகிய புகார்களில் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பெண் போலீசாரை அவதூறாக பேசியது உள்ளிட்ட பல புகார்களில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

     

    குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. அவர் மீதான கஞ்சா வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கு விசாரணைக்கு சவுக்கு சங்கர் ஆஜராகாமல் இருந்ததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சென்னையில் இருந்த அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.

     

     

    பின்னர் அவர் ஜாமின் கேட்டு அதே கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் தீர்ப்பை நீதிபதி செங்கமலச்செல்வன் கடந்த 24-ந்தேதி பிறப்பித்தார். அப்போது நீதிபதி, 15 நாட்களுக்கு சென்னை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

     

    • விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப்படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் பங்கேற்றன.
    • விமானப்படையில் சேர்க்கப்பட உள்ள ‘எச்.டி.டி.-40’ என்ற பயிற்சி விமானம் வானில் குட்டிக்கரணம் அடித்து சாகசத்தில் ஈடுபட்டது.

    இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு 92-ம் ஆண்டு நிறைவடைந்து 93-ம் ஆண்டில் இந்திய விமானப்படை அடியெடுத்து வைத்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் விமானப்படை தினம் நாட்டில் உள்ள வெவ்வேறு நகரங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், அதிநவீன போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளுடன் இந்த ஆண்டுக்கான விமானப்படை தினம் சென்னையில் கடந்த அக். 6-ந்தேதி மிகப்பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சியுடன் நடந்தது.

    மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்றது.

     

    இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்பட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கண்டு களித்தனர்.

    இந்த விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப்படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் பங்கேற்றன. முதல் நிகழ்வாக, ஆக்ரா விமானப்படை பிரிவின் கீழ் செயல்படும் பாராசூட் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த 5 வீரர்கள் 8 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்தனர்.

    அதற்கு அடுத்ததாக, எம்.ஐ.70 ரக ஹெலிகாப்டரில் இருந்து 28 கமாண்டோ வீரர்கள் மெரினா கடற்கரை மணல் பகுதியில் குதித்தனர். அங்கு தேசவிரோத சக்தியால் பிடித்து வைத்திருந்த பணயக்கைதிகளை மீட்கும் சாகச நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு சாகச நிகழ்ச்சியை நடத்தி காண்பித்தனர்.

    இதில், விமானப்படையின் ஆகாஷ் கங்கா அணி வானில் குட்டிக்கரணம் அடித்தும், சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி 'ஸ்கை டைவிங்' கலையில் விமானங்களுடன் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக வந்தும் சாகசங்களை நிகழ்த்தின. சாரங் ஹெலிகாப்டர்களின் வான் நடனமும் நடைபெற்றது.

     

    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக விமானமான தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் 1971-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட 'டகோட்டா' மற்றும் 'ஹார்வர்ட்' ஆகிய பழங்கால விமானங்களும், அதிநவீன போர் விமானமான ரபேல் விமானம், கார்கில் போரில் பங்கேற்ற விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று வானில் சாகசத்தை வெளிப்படுத்தின.

    தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து 'சேத்தக்' ரக ஹெலிகாப்டர்கள் மூலம் வீரர்கள் மூவர்ணக்கொடியை ஏந்தியபடி பாராசூட் மூலம் கீழே குதித்து சாகசம் செய்து அசத்தினர். அடுத்ததாக, இந்திய விமானப்படையில் அதிவேகமாக செல்லும் போர் விமானமான ரபேல் வானில் தீப்பிழம்புகளை கக்கியபடி சாகசத்தில் ஈடுபட்டது காண்போரை கவர்ந்திழுக்க செய்தது.

    இந்திய விமானப்படையின் பழமையான விமானமான 'டகோட்டா', 'ஹார்வர்டு' விமானங்கள் பட்டாம்பூச்சிகள் போல் பறந்து வந்து தங்களது திறமையை பறைசாற்றின. இந்தவகை விமானங்களில் 1947-ம் ஆண்டில் இருந்து 1989-ம் ஆண்டு வரை இந்திய விமானப்படையில் பணியாற்றின. பழமையான விமானம் தாழ்வாக பறந்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது, வர்ணணையாளர்கள், என்னதான் வயசானாலும், உன் அழகும், ஸ்டைலும் மாறவில்லை' என்றதும் பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

     

    விமானப்படையில் சேர்க்கப்பட உள்ள 'எச்.டி.டி.-40' என்ற பயிற்சி விமானம் வானில் குட்டிக்கரணம் அடித்து சாகசத்தில் ஈடுபட்டது. மிராஜ் போர் விமானம் பின்னால் வந்த இரு விமானங்களுக்கு நடுவானில் எரிபொருளை நிரப்பி காட்டி சாகசத்தில் ஈடுபட்டன. அத்துடன் இதய வடிவை வானில் வரைந்து காண்பித்தது வேறுவிதமாக அமைந்தது.

     

    சென்னையை கலக்கிய விமான சாகச நிகழ்ச்சி குறித்து, விமானப்படை அதிகாரி ஏர் கமோடர் எச்.அசுதானி, கூறும்போது, 'சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடத்துவது குறித்து 2 மாதங்களுக்கு முன்பே மெரினா கடற்கரைக்கு வந்து ஆய்வு செய்தோம். இந்த நிகழ்ச்சியை நடத்த தமிழக அரசும், சென்னையில் உள்ள இந்திய விமான ஆணையமும் முழு ஒத்துழைப்பு வழங்கியது. சாகச நிகழ்ச்சியில் 72 விமானங்கள் தாம்பரம் அரக்கோணம், கோவை சூலூர், தஞ்சாவூர், பெங்களூரு மற்றும் சென்னை விமான நிலையம் ஆகிய 7 இடங்களில் இருந்து புறப்பட்டு வந்து சாகசத்தில் ஈடுபட்டன. 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சி எங்களுக்கு சவாலாக இருந்தது. காரணம், விமானிகளின் பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த சாகச நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது' என்றார்.

    இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு, 6 ஆயிரத்து 500 போலீசார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சுமார் 15 லட்சம் பேர் பார்வையிட்டு இருப்பார்கள் என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறினர்.

     

    சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 2 மணி நேரம் நடந்த விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சியை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர், நெல்லூர் மாவட்டம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த சுமார் 15 லட்சம் பேர் நேரில் கண்டுகளித்ததாக தகவல் வெளியானது. இதன் மூலம் உலகிலேயே அதிக பொதுமக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என்று லிம்கா சாதனை புத்தகத்தில் சென்னை விமான சாகச நிகழ்ச்சி இடம்பெற்றது.

    இதற்காக நிகழ்ச்சி முடிவடைந்ததும், லிம்கா புத்தகத்திற்கு அனுப்புவதற்காக கழுகு பார்வையில் ஹெலிகாப்டரில் வந்த வீரர்கள் மெரினா கடற்கரையில் இருந்து பொதுமக்களை புகைப்படம் எடுத்தனர். இதுகுறித்த அறிவிப்பு வெளியானதும் பொதுமக்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த குடை, குடிநீர் பாட்டில்களால் அசைத்து ஆரவாரம் செய்தனர்.

    சென்னை மெரினாவில் விமான சாகசத்தை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டனர். காலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயில் அதிகரித்து காணப்பட்டது. வெயிலின் தாக்கத்தாலும், குடிநீர் கிடைக்காததாலும் உடலில் நீர்ச்சத்து குறைந்து 100-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர்.

    அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கூட்ட நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால், போலீசார் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். மொத்தம் 63 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின்னர் 36 பேர் வீட்டுக்கு சென்றனர். 27 பேர் மட்டும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. இதற்கிடையே வெயிலின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    • பெரிய பட்ஜெட் படங்களை ரூ.50 கோடி முதல் ரூ.200 கோடி வரை செலவில் எடுத்துள்ளனர்.
    • லப்பர் பந்து, லவ்வர், பேச்சி போன்ற சிறு பட்ஜெட்டில் உருவான படங்களும் வெற்றிபெற்று கவனம் ஈர்த்தன.

    2024-ம் ஆண்டு தமிழ் சினிமா பெரும் வசூல் குவிக்கும், இந்திய சினிமாவையே தமிழ் சினிமா கவனிக்க வைக்கும் என்று அனைவருமே எதிர்பார்த்தனர்.

    முன்னணி நடிகர்களின் படங்களால் பெரிய அளவில் லாபம் ஈட்டலாம் என நம்பிக்கையுடன் காத்திருந்த தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

    தமிழ் சினிமா இந்த ஆண்டு கண்ட சாதனைகள், வேதனைகள் குறித்து திரைப்பட வினியோகஸ்தர் சங்க தலைவரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் கூறியதாவது:-

    தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் 241 படங்கள் ரிலீசாகி உள்ளன. இதில் அதிக படங்கள் தோல்வி அடைந்து உள்ளன என்பது வருத்தமான விஷயமே.

    இந்த படங்கள் மூலம் சுமார் ரூ.1,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிறு பட்ஜெட் படங்களுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை செலவிட்டுள்ளனர். நடுத்தர பட்ஜெட் படங்கள் ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி செலவில் தயாராகி உள்ளன. மொத்தம் 186 சிறிய படங்கள் வந்துள்ளன. இந்த படங்களின் பட்ஜெட் ரூ.400 கோடி வரை இருக்கும்.

    பெரிய பட்ஜெட் படங்களை ரூ.50 கோடி முதல் ரூ.200 கோடி வரை செலவில் எடுத்துள்ளனர்.

    திரைக்கு வந்த 241 படங்களும், ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் செலவில் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது.

    இதில் 18 படங்கள் மட்டுமே லாபம் பார்த்து, தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களை திருப்திப்படுத்தி இருக்கிறது.



    இந்த 18 படங்களில் மெகா பட்ஜெட்டில் வெளியான விஜய் இருவேடங்களில் நடித்த 'தி கோட்', ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக கொண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'அமரன்', தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' படங்கள் பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளன.

    இதற்கு அடுத்தபடியாக பெரிய பட்ஜெட்டில் தயாரான ரஜினிகாந்தின் வேட்டையன், சுந்தர் சி.யின் அரண்மனை-4, விஜய் சேதுபதியின் மகாராஜா, அரவிந்தசாமி-கார்த்தி கூட்டணியில் மெய்யழகன் ஆகிய படங்கள் வெற்றிபெற்றன.



    நடு்த்தர பட்ஜெட்டில் தயாரான டிமாண்டி காலனி-2, வாழை, கருடன், ரோமியோ, ஸ்டார், பிளாக், பி.டி.சார், அந்தகன் ஆகிய படங்கள் வெற்றிபெற்றன. இதில் டிமாண்டி காலனி-2 படமானது பிரியா பவானி சங்கருக்கு மீண்டும் ஸ்டார் அந்தஸ்தை கொடுத்தது. அந்தகன் மூலமாக பிரசாந்தும், சிம்ரனும் மீண்டும் தங்களது இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக தொடங்கினார்கள்.

    அதேபோல லப்பர் பந்து, லவ்வர், பேச்சி போன்ற சிறு பட்ஜெட்டில் உருவான படங்களும் வெற்றிபெற்று கவனம் ஈர்த்தன. எதார்த்த கதைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட மேற்கண்ட படங்கள் பெரிய பட்ஜெட் படங்கள் பிடிக்காத வசூலை கூட பிடித்து ஆச்சரியம் தந்தன. இதன்மூலம் அந்த படங்களில் நடித்த பிரபலங்களுக்கு படவாய்ப்புகளும் குவிந்தன.

    திரைக்கு வந்த 241 படங்களில் 18 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. அதாவது 7 சதவீத படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியுள்ளன. மீதி உள்ள 223 படங்கள் தோல்வி அடைந்துள்ளன.



    இதன் மூலம் தமிழ் சினிமாவில் இந்த வருடம் சுமார் ரூ.1,000 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலை மாறவேண்டும். எனவே தரமான, கவனம் ஈர்க்கும் படங்கள் இன்னும் அதிகளவில் வரவேண்டும். அப்போது தான் சினிமாவுக்கு அது நல்லதாக அமையும்.

    இவ்வாறு கே.ராஜன் தெரிவித்தார்.

    நடிகர்-நடிகைகளின் சம்பளம் குறைவாக உள்ள கேரளா சினிமாவிலேயே ரூ.600 முதல் ரூ.700 கோடி வரை இந்த ஆண்டில் நஷ்டம் ஏற்பட்டதாக கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • : இந்தாண்டு வெளியான சிறந்த தமிழ் வெப் தொடர்களை பற்றி இச்செய்தியில் காணலாம்
    • இன்ஸ்பெக்டர் ரிஷி வெப் தொடரை நந்தினி என்பவர் இயக்கியுள்ளார்.

    ரீவைண்ட் 2024 : இந்தாண்டு வெளியான சிறந்த தமிழ் வெப் தொடர்களை பற்றி இச்செய்தியில் காணலாம்

     இன்ஸ்பெக்டர் ரிஷி

    இன்ஸ்பெக்டர் ரிஷி வெப் தொடரை நந்தினி என்பவர் இயக்கியுள்ளார். இத்தொடரில் நவீன் சந்திரா, ஸ்ரீகிருஷ்ணா தயால். கன்னா ரவி, மாலினி ஜீவரத்னம், சுனைனா, குமரன் , ஹரினி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு சிறிய மலைகிராமத்தில் தொடர்ந்து நடக்கும் மர்ம இறப்புகளை மையமாக வைத்து இயக்கிய தொடராகும். இத்தொடரில் மொத்தம் 10 எபிசோடுகள் உள்ளன. இத்தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

     தலைமை செயலகம்

    தலைமை செயலகம் வெப் தொடரை இயக்குனர் வசந்தபாலன் இயக்கியுள்ளார். இத்தொடரில் கிஷோர், ஸ்ரீயாரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கனி கஸ்தூரி, நிரூப், தர்ஷா குப்தா, சாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். கிஷோர் தலைமையில் இருக்கும் கட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்ப்டுகிறது. அதிகாரம், அரசியல் , ஊழல் என இவற்றை பத்தி பேசும் கதையாக தலைமை செயலகம் வெப் தொடர். இத்தொடர் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

     பாராசூட்

    கிஷோர்,கனி திரு, கிருஷ்னா , சக்தி ரித்விக் , இயல் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பாராசூட் வெப் தொடர். ஸ்ரீதர் கே இத்தொடரை இயக்கியுள்ளார். ஒரு உடன்பிறந்த இருவரும் தங்கள் கண்டிப்பான தந்தையின் மொப்பட்டை சவாரிக்கு எடுத்துச் சென்று அது திருடப்பட்ட பிறகு, குழந்தைகள் அதைத் தேடிச் செல்கிறார்கள், அவர்கள் காணாமல் போனது குறித்து பெற்றோருக்கு எந்த துப்பும் இல்லை. நுட்பமான நடிப்பு, மிருதுவான திரைக்கதை மற்றும் தொழில்நுட்ப செயலாக்கத்துடன், பாராசூட் இந்த ஆண்டு பார்க்க வேண்டிய இணையத் தொடர்களில் முக்கியமான ஒன்றாகும். இத்தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

    சட்னி சாம்பார்

    ராதா மோகன் இயக்கத்தில் யோகி பாபு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது சட்னி சாம்பார் வெப் தொடர். இவருடன் நிழல்கள் ரவி, வாணி போஜன், சந்திரமௌலி, இளங்கோ குமரவேல், நந்தினி மற்றும் நித்தின் சத்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இது யோகி பாபு நடத்தி வரும் கையேந்திபவன் மற்றும் மற்றொரு மகனின் பேமஸ் ஓட்டலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும். இத்தொடர் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

    தலைவெட்டியான் பாளையம்

    தலைவெட்டியான் பாளையம் ஒரு நகைச்சுவை வெப் தொடராகும். இத்தொடர் இந்தி தொடரான பஞ்சாயத்தின் தமிழ் வெர்ஷனாகும். இத்தொடரில் அபிஷேக் குமார், சேத்தன் கடம்பி, நியத்தி, தேவதர்ஷினி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சென்னையில் பிறந்து வளர்ந்த இளைஞனான அபிஷேக் ஒரு தனி கிராமத்தில் பஞ்சாயத் தலைவராக நியமிக்கப்படுகிறார். அந்த கிராம வாழ்க்கையில் அவர் பழகிக்கொள்ளும் விதத்தை நகைச்சுவையாக காட்சி படுத்தியுள்ளனர். இத்தொடரை பிரபல இயக்குனரான நாகா இயக்கியுள்ளார். இத்தொடர் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    ஜர்னி

    இத்தொடரை சேரன் இயக்கியுள்ளார். இத்தொடரில் ஜாஸ்மின், சரத்குமார், அஞ்சு குரியன், கலையரசன், திவ்யபாரதி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். வெவ்வேறு பின்னணிகளை கொண்ட 5 கதாப்பாத்திரம் ஒரு வேலைக்காக போட்டியிடுகின்றனர் இதனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும். இத்தொடர் மொத்தம் 9 எபிசோடுகள் கொண்டதாகும். இத்தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

     ஹார்ட் பீட்

    ஆர் கே மல்டிஸ்பெஷாலிடி மருத்துவமனையில் பணிப்புரியும் மருத்துவர்கள் அன்கு வேலை செய்யும் பணியாளர்கள் அவர்களின் வாழ்க்கை பிரச்சனையை பற்றி மையமாக வைத்து எடுக்கப்பட்டது ஹார்ட் பீட் வெப் தொடர். அனுமோல் , தீபா பாலு , சாருகேஷ் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்தொடரை தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். இத்தொடரில் மொத்தம் 72 எபிச்சோடுகள் உள்ளன. இத்தொடர் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • சரத்குமார் யாரும் எதிர்பாராத வகையில் தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்தார்.
    • மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.

    இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது.

    தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவியது. ஆனால், எந்த கட்சியில் யார் கூட்டணி வைக்கப்போகிறார்கள் என்கிற கூட்டணிப் பேச்சுவார்த்தையில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன.

    அதன்படி, அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம், பார்வர்ட் ப்ளாக் கட்சிகள், தேமுதிக ஆகிய கட்சிகள் அதிகாரப்பூர்வமாக இணைந்தன.

    பாஜக கூட்டணியில் தமாகா, பாமக, புதிய நீதிக் கட்சி, ஐஜேகே, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இணைந்தன.

    ஆனால், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் இணைவதற்கான முடிவு எடுப்பதில் இழுப்பறியாக இருந்தது.

    தி.மு.க. தவிர அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தனித் தனியாக பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்தன. ஆனால், சரத்குமார் யாரும் எதிர்பாராத வகையில் தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்தார்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த கட்சியின் தலைவர் சரத்குமார், பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தனது கட்சியை கடந்த மார்ச் 12ம் தேதி திடீரென பாஜகவுடன் இணைத்துக் கொள்வதாக அறிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து, பாஜக வேட்பாளராக விருதுநகர் தொகுதியானது சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து அவர் போட்டியிட்டார்.

    இந்த தேர்தலில் ராதிகா சரத்குமார் தோல்வியடைந்தார்.

    இதேபோல், 2024 மக்களவை தேர்தலுக்கான கூட்டணியில் திமுகவுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைந்தது.

    இந்த தேர்தலில் போட்டியிட தென் சென்னை, கோவை ஆகிய தொகுதிகளை கமல் கேட்டதாகவும் அதற்கு திமுக மறுத்ததாகவும் கூறப்பட்டது.

    ஆனால், அதற்கு பதிலாக மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.

    இதற்கு மக்கள் நீதி மய்யம் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, தேர்தலில் பரப்புரை மேற்கொண்டது.

    கடந்த 2018ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கிய கமல், அதிமுக, திமுக இரு கட்சிகளையும் விமர்சித்து வந்தார்.

    இறுதியில் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.

    • விபத்து தொடர்பான விசாரணையில், நட்டுகளில் சுத்தியலால் அடித்த தடங்கள் காணப்படுவதாக கூறப்பட்டது.
    • சதிச் செயல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ரெயில்வே போலீசார் கூடுதலாக சேர்த்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு கடந்த அக்டோபர் மாதம் 11-ந்தேதி இரவு 8.30 மணியளவில் சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை அருகே கவரப்பேட்டையில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 13 பெட்டிகள் கவிழ்ந்தன. அதில் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் உள்ள தண்டவாளத்தில் நட்டுகள் கழன்று கிடந்தன. ரெயில் தண்டவாளங்களை இணைக்கும் 'டி' வடிவ கம்பி இணைப்பு தளர்வாகவும், சில இடங்களில் இணைப்பு இடம் மாறி இருந்தாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், நட்டுகளில் சுத்தியலால் அடித்த தடங்கள் காணப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினார்கள். மேலும், ரெயில்வே போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். 3 தனிப்படைகளை அமைத்தும் விசாரணை நடத்தினார்கள். விபத்தின்போது பணியில் இருந்த பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    முதல்கட்ட விசாரணையில், தண்டவாளத்தில் நட்டுகள் கழற்றப்பட்டது தான் விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. கவரப்பேட்டையில் 3 நட்டுகளும், பொன்னேரி அருகே 6 நட்டுகளும் கழற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    நட்டுகள் கழற்றப்பட்டதால், தண்டவாளத்தை லூப் பாதையில் இருந்து பிரதான பாதைக்கு மாற்றுவதில் சிக்கல் இருந்ததாகவும், இதனால் ரெயில் லூப் பாதையில் சென்று விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

    பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில், விபத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    ரெயில் விபத்து குறித்து, பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் லோகோ பைலட், துணை லோகோ பைலட், ரெயில் பாதுகாவலர், பயணச்சீட்டு பரிசோதகர், ஏ.சி. பெட்டி பணியாளர்கள், அலுவலர்கள், பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை ரெயில் நிலைய அதிகாரிகள், விபத்து நடந்த பகுதியின் சிக்னல் பொறுப்பு அலுவலர் உள்ளிட்ட 13 பிரிவுகளை சேர்ந்த 40 ரெயில்வே அலுவலர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை சார்பில் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும், ரெயில் தடங்களில் இருந்த போல்ட்டுகள் மற்றும் நட்டுகள் கழட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இது சதிச் செயல் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்ற பிரிவில் இந்திய ரெயில்வே சட்டத்தின் 150வது பிரிவை (ரெயிலை சேதப்படுத்துதல் அல்லது தகர்க்க முயற்சித்தல்) இவ்வழக்கில் ரெயில்வே போலீசார் கூடுதலாக சேர்த்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    • அரையிறுதிக்கு முந்தைய போட்டியில் இத்தாலி வீராங்கனையின் மூக்கை உடைத்தார்.
    • மற்ற போட்டியில் 5-0 என எதிரிகளை சுலபமாக வீழ்த்தினார்.

    33-வது கோடைக்கால ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெற்றது. இதில் 66 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட அல்ஜீரியா வீராங்கனை இமானே கெலிஃப் பெண்ணா? ஆணா? என்ற பாலினம் பிரச்சனை மிகப்பெரிய அளவில் வெடித்தது.

    காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலினா கரினி- அல்ஜீரியாவின் இமானே கெலிஃப்-ஐ எதிர்கொண்டார். இதில் இமானே கெலிஃப் விட்ட பஞ்ச்-ல் இத்தாலி வீராங்கனையில் மூக்கு உடைந்தது. இதனால் நிலைகுலைந்து ஆட்டத்தின் 16 நிமிடத்திலேயே ஆட்டத்தில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தார். இது பெண்கள் அடிக்கும் அடியல்ல. ஆண் அடிப்பது போல் இருந்தது என இத்தாலி வீராங்கனை கரினி குற்றச்சாட்டை முன்வைத்தார். அத்துடன் போட்டியில் சமநிலை இருக்க வேண்டும். ஒரு ஆணுடன் விளையாட வைப்பது நியாயமா? என கேள்வி எழுப்பினார்.

    கெரினியின் குற்றச்சாட்டு ஆதரவு அதிகமானது. இத்தாலி பிரதமர் மெலானி கெரினிக்கு ஆதரவுக் குரல் எழுப்பினார். என்றாலும் பிரான்ஸ் நாட்டிற்கு வருவதற்கான அவரது விசாவில் பெண் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது உள்ளிட்ட சில ஆதாரங்களை காட்டிய ஒலிம்பிக் நிர்வாகம் அவரை தொடர்ந்து விளையாடி அனுமதித்தது.

    கடுமையாக சர்ச்சைக்கிடையே காலிறுதியில் ஹங்கேரி வீருாங்கனையை 5-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் தாய்லாந்து வீராங்கனையை 5-0 எனவும், இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை லியு யங்கை 5-0 என வீழ்த்தியும் தங்கப்பதக்கம் வென்றார்.

    கடந்த நவம்பர் மாதம் இமானே கெலிஃப் ஒரு ஆண் என்பதற்கான மருத்துவ அறிக்கையை பிரெஞ்சு பத்திரிக்கையாளர் ஒருவர் வெளியிட்டார்

    அந்த அறிக்கையில் இமானே கெலிஃப்-க்கு ஆண்களுக்கு உரிய உடலமைப்புகள் மற்றும் மருத்துவ ரீதியான குணாதிசயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவருக்கு கர்ப்பப்பை இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவருக்கு எக்ஸ் ஒய் குரோமோசோம் இருப்பது அந்த அறிக்கை மூலம் வெளியாகி இருக்கிறது.

    இமான் கெலிஃப்-க்கு ஆண்களுக்கு மட்டுமே வரக்கூடிய 5 ஆல்ஃபா ரிடக்டேஸ் இன்சஃபீசியன்ஸி (5-alpha reductase insufficiency) என்ற குறைபாடு இருப்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த குறைபாடு இருக்கும் ஆண்களுக்கு முகத்தில் மீசை, தாடி ஆகியவை இருக்காது எனக் குறிப்பிடப்பட்டிருந்து.

    • 18வது பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது.
    • தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இந்தியாவின் 18வது பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. பின்னர், தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    அதன்படி, நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இதில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று இரவு 7 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

    தொடர்ந்து, ஏப்ரல் 20ம் தேதி அன்று, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளின் மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

    மூன்றாவது முறையாக வெளியிடப்பட்ட இறுதி வாக்குப்பதிவு நிலவரத்தின்படி, தமிழ்நாட்டில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

    நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து, ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    இதில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டிலுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றது.

    • ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதிய போட்டியில் டாஸ் போட்டது சர்ச்சையானது.
    • பிசிசிஐ முன்னாள் தலைவர் என். ஸ்ரீனிவாசன் மீது லலித் மோடி பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

    2024 ஆம் ஆண்டு உலகளவில் கிரிக்கெட்டில் கவனத்தை ஈர்த்த சர்ச்சையான சம்பங்களை இந்த செய்தியின் மூலம் காண்போம்.

    1. வங்க தேச கிரிக்கெட் வீரர் சாகிப் அல் ஹசன் ரசிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். அவர் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது வழக்கம் போல நிறைய ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செஃல்பி எடுக்க முயற்சித்தார்கள். அப்போது ஒரு ரசிகர் அவரை மிகவும் நெருங்கி புகைப்படம் எடுத்துக் கொள்ள முயற்சித்தார். ஆனால் அதற்காக கோபப்பட்ட சாகிப் அந்த ரசிகரின் கன்னத்தில் பளார் என வேகமாக அறைந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    இது மட்டுமல்லாமல் மற்றுமொரு தேர்தல் விழா மேடையில் அமர்ந்திருந்த சாகிப்பை நிறைய பெண் ரசிகர்கள் செஃல்பி எடுத்துக் கொள்ள முயற்சித்தனர். அப்போது வேண்டா வெறுப்பாக சாகிப் அமர்ந்திருந்தார்.

    2. ஐபிஎல் தொடரில் வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதின. அப்போது ஹர்திக் பாண்ட்யா மற்றும் டு பிளெசிஸ் ஆகியோர் டாஸ் போடுவதற்காக மைதானத்திற்கு வந்தனர்.

    டாஸ் போடும் நிகழ்வும் நடைபெற்றது. ஆனால் டாஸ் விழுந்த பின்னர் அந்த காயினை எடுத்த நடுவர் ஸ்ரீநாத் மும்பை அணிக்கு ஆதரவாக காயினை திருப்பி காண்பித்து டுபிளிசிஸ் டாசில் தோல்வி அடைந்ததாக ஏமாற்றினார். இந்த சம்பவத்தை அடுத்த போட்டியின் போது பேட் கம்மின்ஸ் உடன் டுபிளிசிஸ் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்த சில வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    3. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) முன்னாள் தலைவர் லலித் மோடி, இந்த ஆண்டு ஐபிஎல் குறித்து தெரிவித்த கருத்து உள்பட பல சர்ச்சைகள் வெடித்தன.

    பிசிசிஐ முன்னாள் தலைவர் என். ஸ்ரீனிவாசன் மீது லலித் மோடி பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் என். ஸ்ரீனிவாசன் ஆதிக்கம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த லலித் மோடி, ஸ்ரீனிவாசன் கேட்டுக் கொண்டார் என்பதால் ஆன்ட்ரூ ப்ளின்டாஃப்-ஐ மற்ற அணிகள் ஏலத்தில் எடுக்கவில்லை. அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் அது தெரியும். அவருக்கு ஐபிஎல் பிடிக்காது அவர் இது தோல்வியை தழுவும் என்று நினைத்தார்.

    அவர் அம்பயர்களை மாற்றத் தொடங்கினார். சிஎஸ்கே போட்டிகளின் போது அவர் சிஎஸ்கே அம்பயர்களை நியமித்தார். அது எனக்கு பிரச்சினையாக இருந்தது. அது நேரடியாக பிக்சிங் செய்வதை போன்றதாகும். அதை வெளிப்படுத்த நினைக்கும் போது, அவர் எனக்கு எதிராக திரும்பினார். என்று தெரிவித்தார். இது 2024-ம் ஆண்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    4. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமெரிக்காவில் தேசிய கிரிக்கெட் லீக்கின் (என்சிஎல்) எதிர்கால எடிஷன்களுக்குத் தடை விதித்தது. ஐசிசி விதிகளுக்கு என்சிஎல் இணங்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    5. டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் சர்ச்சையானது. அந்த போட்டியில் இறுதி ஓவரில் மில்லர் அடித்த பந்தை சூர்யகுமார் பவுண்டரி லைனில் பிடிப்பார். அப்போது அவரது கால் பவுண்டரி லைனை பட்டதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    6. பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார்.

    மேல்முறையீட்டிற்குப் பிறகு ஆன்-பீல்ட் அம்பயரின் நாட் அவுட் முடிவு மாற்றியமைக்கப்பட்டது, மூன்றாவது நடுவரான ரிச்சர்ட் இல்லிங்வொர்த், அல்ட்ராஎட்ஜ் தொழில்நுட்பத்தை நம்பியிருந்தார். இது பந்து பேட் மற்றும் பேட் இரண்டிற்கும் அருகில் சென்றபோது ஒரு ஸ்பைக்கைக் காட்டியது.

    ராகுலின் பேட் ஒரே நேரத்தில் மோதியதாகத் தோன்றினாலும், மூன்றாவது நடுவர் ஸ்பைக் ஒரு எட்ஜைக் குறிப்பிட்டு, ஆன்-பீல்ட் அம்பயரின் முடிவை மாற்றினார். உறுதியான ஆதாரம் இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பொதுவாக, இதுபோன்ற சூழ்நிலைகளில் சந்தேகத்தின் பலன் கள நடுவரின் முடிவை உறுதிப்படுத்துகிறது. ராகுல் வெளியேறுவதற்கு முன்பு நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோவுடன் சில நொடிகள் பேசிவிட்டு பெவிலியன் சென்றார்.

    6. அபுதாபி டி10 லீக்கின் முன்னாள் துணை பயிற்சியாளர் சன்னி தில்லானுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் 6 ஆண்டுகள் தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உத்தரவிட்டது.

    2021 அபுதாபி டி10 லீக்கின் போது போட்டிகளில் முறைகேடு செய்ய முயன்றதற்காக ஊழல் தடுப்பு தீர்ப்பாயத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது. எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ECB) ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் மீறல்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்டன.

    7. ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வாலின் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2-வது இன்னிங்சின் 70-வது ஓவரை வீசிய கம்மின்ஸ் ஜெய்ஸ்வாலுக்கு பவுன்ஸ் பந்தை வீசினார். இதனை அடிக்க ஜெய்ஸ்வால் முற்பட்ட போது பந்து கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது. உடனே நடுவரிடம் அவுட் என ஆஸ்திரேலிய வீரர்கள் அப்பீல் கேட்டனர். இதனை நடுவர் நிராகரித்தார். உடனே கம்மின்ஸ் ரிவ்யூ கேட்டார்.

    இதனையடுத்து 3-ம் நடுவர் இதனை சோதித்தார். அப்போது அல்ட்ரா எட்ஜ்-ல் பார்க்கும் போது அவுட் இல்லை என வந்தது. ஆனால் பந்து பேட்டை நெருங்கும் போது பேட்டிலும் கையுறையிலும் தொட்டுச் செல்லும் மாதிரி இருந்தது. மேலும் பேட்டை கடந்த பின்னர் பந்து சென்ற திசையில் மாற்றம் இருந்தது. இருந்ததையடுத்து 3-ம் நடுவர் அவுட் என தெரிவித்தார்.

    இதனை சற்றும் எதிர்பாராத ஜெய்ஸ்வால் கள நடுவரிடம் முறையிட்டார். ஆனால் நடுவர் அவரை சமாதானப்படுத்தி அவுட் என கூறி வெளியேறுமாறு கூறினர். அல்ட்ரா எட்ஜ்-ல் அவுட் இல்லை என வரும்போது எப்படி 3-ம் நடுவர் அவுட் கொடுத்தார் என்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

    • பிரதமர் நரேந்திர மோடி குறி வைக்கப்பட்டு அவரின் குரலில் தமிழ் பாடல்கள் வைரலாகின
    • அமெரிக்க சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் நிகழ்ந்தது.

    முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்த 2024 ஆம் ஆண்டு வெகு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்றாகும். சமூக வலைத்தளம் முதல் வேலை செய்யும் இடம் வரை உலகம் முழுவதிலும் ஏஐ தவிர்க்க முடியாத ஒன்றாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக பேஸ்புக், வாட்ஸப்பின் மெட்டா ஏஐ இந்த வருடம் அறிமுகமானது.

    ஏஐ வளர்ச்சியும், அதன் தவறான பயன்பாடும், அது குறித்த அறிவுஜீவிகளின் எச்சரிக்கையும் இணைந்தே வந்துள்ளது. சாட்ஜிபிடி, டீப் fake உள்ளிட்டவை வார்த்தைகள் மக்கள் மத்தியில் புழங்கத் தொடங்கின. பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வரை மர்ம நபர்களின் டீப்ஃபேக் சேட்டைகளுக்கு உள்ளாகினர்.

     

    குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறி வைக்கப்பட்டு அவரின் குரலில் தமிழ் பாடல்கள் முதல் மேடைகளில் அவரின் நடனம் வரை ஏஐ தொழில்நுட்பம் மூலம் இணைய வாசிகள் உருவாக்கி எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் என சமூக ஊடகங்கள் தோறும் டிரண்ட் செய்தனர்.

    அவ்வாறு ஏஐ மோடி நடமாடும் ஒரு வீடியோவுக்கு பிரதமர் மோடியே தனது எக்ஸ் பக்கத்தில், உங்கள் அனைவரையும் போலவே நானும் நடனமாடுவதைப் பார்த்து மகிழ்ந்தேன். இது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடி, டொனால்ட் ட்ரம்ப், ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற முக்கிய நபர்களில் ஏஐ உருவங்கள் பி[பேஷன் வாக் நடக்கும் வீடியோவை எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் பகிர்ந்து சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

    கடந்த வருட இறுதியில் வெளியான தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவில் ஆபாசமான டீப் fake பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    அதன் பின் பாலிவுட் பிரபலங்கள் பலரும் டீப் fake க்கு இறையாகினர். பல சமூக வலைதள பக்கங்களில் நடிகைகள், ஆலியா பட், க்ரிதி சனோன், திஷா பதானி, தமன்னா பாட்டியா, சமந்தா ரூத் பிரபு,மாளவிகா மோகனன், கஜோல் உள்ளிட்டோர் பிகினி உள்ளிட்டடோரை சித்தரித்து போலி டீப் -fake வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வளம் வந்தன.

    பாஜகவுக்கு எதிரான தான் பேசுவதுபோல் வெளியான deepfake ஆல் அதிர்ந்த தீபிகா படுகோனே கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் கடந்த அக்டோபரில் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளித்தார்.   

     

    ஒரு Reddit பயனர் சமீபத்தில் ஒரு மாணவருக்கும் கூகுள் ஜெமினி ஏஐக்கும் இடையிலான உரையாடலின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துள்ளார், அதில் AI சாட்பாட், மாணவர் "இறக்க வேண்டும்" என்று பரிந்துரைத்தது.

    மேலும் கேம் ஆப் திரோன்ஸ் காதாபாத்திரத்தின் சாட் ஜிபிடி உடன் காதல் கொண்ட அமெரிக்க சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் அக்டோபரில் நிகழ்ந்தது.

    ஓபன் ஏஐ இன் மனிதகுலத்துக்கு அபாயகரமான கொள்கைகள், மற்றவர்களின் அறிவுசார் தரவுகளை அனுமதியில்லாமல் எப்படி ஓபன் ஏஐ பயன்படுத்துகிறது என்பது குறித்து நியூ யார்க் டைம்ஸ் கு பேட்டி அளித்த அந்நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சியாளர் சுசீர் பாலாஜி [26 வயது] கடந்த நவம்பரில் அவரது வீட்டில் சடலமாக கிடந்தார்.

     

    சுஷீர் பாலாஜியின் பேட்டியின் பின் விளைவுகளால் ஓபன் ஏஐ நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள நிலையில் அவரது மர்ம மரணம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுஷீர் பாலாஜி மரணம் தற்கொலை மாதிரி தெரியவில்லை என எலான் மஸ்க்கும் தெரிவித்துள்ளார். 

    ×