என் மலர்tooltip icon

    ரஷ்யா

    • வரும் ஜனவரி மாதத்தில் டிரம்ப் மீண்டும் அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
    • அமெரிக்கா விரும்பினால் தொடர்பை தொடருவோம் என புதின் தெரிவித்தார்.

    மாஸ்கோ:

    சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

    கடந்த 2016 முதல் 2020 வரை டிரம்ப் அதிபராக இருந்தபோது சர்வதேச அரசியல் சூழலில் இணக்கத்தைப் பேணி வந்தார். வரும் ஜனவரி மாதத்தில் டிரம்ப் மீண்டும் அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

    இஸ்ரேல்-பாலஸ்தீன போர் மற்றும் உக்ரைன்-ரஷியா போர் ஆகியவை டிரம்ப் முன் இருக்கும் பெரிய சவால்கள். அதிபராக தேர்வு செய்யப்பட்ட டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்புகொண்டு பேசினார். மேலும், ரஷிய அதிபர் புதினுடனும் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது,, உக்ரைன் போரை நிறுத்துவதற்கான தீர்வு குறித்து பேசப்பட்டதாக செய்தி வெளியானது.

    டிரம்ப் அதிபரானதற்கு வாழ்த்து தெரிவித்த புதின், அமெரிக்கா விரும்பினால் தொடர்பை தொடருவோம் என தெரிவித்தார்.

    இந்நிலையில், உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள தயார் என ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

    அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புடன் இணைந்து போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும், உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என அதிபர் புதின் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • mRNA- அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷிய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
    • காதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் பேசியுள்ளார்

    புற்றுநோய்க்கு தங்கள் நாடு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. உலகளவில் பலரை ஆட்டிப்படைக்கும் கேன்சர் எனப்படும் புற்றுநோயை குணப்படுத்தப் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் mRNA- அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷிய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

     

    ரஷிய விஞ்ஞானிகள் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

    அதன்படி இன்று புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கிவிட்டோம் என்றும் இந்த தடுப்பூசி 2025 முதல் சந்தைகளில் கிடைக்கும் என்றும் தடுப்பூசிகளை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளதாகவும் ரஷிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

     

    இது குறித்து ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் பேசுகையில், புற்றுநோய்க்கு எதிராக சொந்தமாக mRNA- அடிப்படையிலான அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம் என்றும் இது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என கூறியுள்ளார்.

    தடுப்பூசிகளின் ஒரு வகையான mRNA [messenger RNA] தடுப்பூசி, உடலில் உள்ள mRNA molecule ஐ பிரதி எடுத்து அதிலிருந்து நோயெதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலானது. இந்நிலையில் ரஷியாவின் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தால் உலகம் முழுதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அதிக பயனுடையதாக இருக்கும். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எலெக்ட்ரிக் ஷூட்டரில் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்துச் சிதறியது
    • தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை உக்ரைன் மீது பயன்படுத்தியதாக அந்நாட்டு நீதித்துறை அதிகாரிகள் கிரில்லோவ் மீது குற்றம்சாட்டினர்

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இன்று குடியிருப்பு கட்டடம் ஒன்றின் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ரஷிய இராணுவத்தின் ரசாயன, உயிரியல் மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்புப் படைகளுக்கு தலைமை தாங்கிய இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டார்.

    மாஸ்கோவில் உள்ள ரியாசான்ஸ்கி அவென்யூவில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் வாயிலில் எலெக்ட்ரிக் ஷூட்டரில் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் இகோர் கிரில்லோவ் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் கொல்லப்பட்டனர் என்று ரஷிய பாதுகாப்பு அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.

     

    ரஷ்ய டெலிகிராம் சேனல்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்களில், இடிபாடுகளால் சூழ்ந்த கட்டிடத்தின் உடைந்த நுழைவாயில் மற்றும் பனிப் படலத்தின் மீது கிடந்த இரத்தக் கறை படிந்த இரண்டு உடல்கள் கிடக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை உக்ரைன் மீது பயன்படுத்தியதாக அந்நாட்டு நீதித்துறை அதிகாரிகள் கிரில்லோவ் மீது சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது இந்த கொலை அரங்கேறி உள்ளது.

     

    இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டதற்கு உக்ரைன் தான் காரணம் என்று கீவ் உளவுத்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வந்துள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் இதழ் கூறுகிறது.

    உக்ரைனின் பாதுகாப்பு அமைப்பான SBU இந்த கொலைக்கு பின்னால் இருப்பதாக அந்த தகவல் கூறுகிறது. ஜெனரல் ஒரு போர்க் குற்றவாளி என்றும் எனவே அவர் தான் இலக்கு என்றும் உக்ரைன் கருதுவதாக கூறப்படுகிறது.

    • புலிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
    • வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

    காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களிடமும் இருக்கிறது என்பது பல சம்பவங்களில் நிரூபிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரஷியாவை சேர்ந்த ஒரு புலி தனது துணையை தேடி 200 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.

    ரஷியாவில் சிஹோடா மலைப்பகுதியில் 2 புலிக்குட்டிகள் கடந்த 2012-ம் ஆண்டு வனத்துறையால் மீட்கப்பட்டது. அதில் ஆண் புலிக்கு போரீஸ் என்றும், பெண் புலிக்கு ஸ்வேத்லயா என்றும் பெயரிட்டு வளர்த்தனர். இந்த 2 புலிகளும் தனித்தனியாக தங்களது எல்லைகளை பகிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக அவற்றை பிரித்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் சைதிரியா வனப்பகுதியில் போரீஸ் புலியை விட்டனர்.

    ஆனால் அந்த புலி தனது இருப்பிடத்தை நோக்கி தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்தது. அதே நேரம் துணையை பிரிந்த ஸ்வேத்லயா வேறு எங்கும் பயணம் செய்யாமல் விட்ட இடத்திலேயே தொடர்ந்து சுற்றியது. இந்த புலிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் போரீஸ் புலி 3 ஆண்டுகள் பயணம் செய்து ஸ்வேத்லயா இருக்கும் வனப்பகுதிக்கு வந்து சேர்ந்தது. கடந்த 6 மாதங்களாக 2 புலிகளும் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்கின்றன. இவற்றின் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. 



    • சிரியா அதிபர் ஆசாத் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
    • பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவதே ஒரே நடவடிக்கையாக இருந்தது

    சிரியாவில் அதிபர் ஆசாத்தின் படைகளுக்கு எதிராக நீண்ட காலமாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சிக் குழுவினர் நாட்டின் பெரும்பகுதிகளை கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து 50 ஆண்டுக் கால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதிபர் ஆசாத் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனால் சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    ஆசாத் நாட்டை விட்டுச் சென்ற பிறகு அவரது ஆட்சியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் மற்றும் பெரும்பாலான உயர் அதிகாரிகளும் வெளியேறிவிட்டனர். அதேசமயம், பிரதமர் முகமது காஜி ஜலாலி தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், புதிய தலைமையை கொண்டு வருவதற்காகவும் கிளர்ச்சிக் குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.

    இந்நிலையில், சிரியாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதை அடுத்து, அங்கிருந்து தப்பிக்கத் தான் திட்டமிட்டிருந்ததாக வெளியான தகவலுக்கு அதிபர் பஷர் அல்-அசாத் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சிரியாவிலிருந்து நான் வெளியேறியது திட்டமிடப்பட்டதோ அல்லது போரின் இறுதி நேரத்தில் நடந்ததோ அல்ல. மாறாக, நான் டமாஸ்கஸில் இருந்தேன், டிசம்பர் 8, 2024 அன்று அதிகாலை வரை எனது வேலைகளை செய்தேன்.

    பின்னர் தனது ரஷிய கூட்டாளிகளுடன் இணைந்து ஹெமிமிம் விமான தளத்தில் 'போர் நடவடிக்கைகளை மேற்பார்வையிட' லதாகியாவிற்கு சென்றேன். அங்கு ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து மாஸ்கோவில் உள்ள தலைமை எங்களை ரஷ்யாவிற்கு வெளியேற்ற உத்தரவிட்டது.

    இந்த சம்பவத்தின் போது எந்த நேரத்திலும் நான் பதவி விலகுவதையோ அல்லது அடைக்கலம் தேடுவதையோ நினைத்து பார்க்கவில்லை. பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவதே ஒரே நடவடிக்கையாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரஷியாவுக்கும், கிரீமியாவுக்கும் இடையில் கெர்ச் ஜலசந்தியில் (Kerch Strait) உள்ளது
    • இந்த விபத்தில் 1 ஊழியர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கருங்கடலில் 29 ஊழியர்கள் சென்ற 2 ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் புயலில் சிக்கி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், அவற்றில் இருந்து எண்ணெய் கசிந்து வருவதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) ரஷ்யாவுக்கும், கிரீமியாவுக்கும் இடைப்பட்ட கெர்ச் ஜலசந்தியில் (Kerch Strait) ஏற்பட்ட கடுமையான புயலின் போது 15 ஊழியர்களுடன் ஆயிரக்கணக்கான டன் எரிபொருள் எண்ணெய்யை ஏற்றிச் சென்ற ரஷ்ய எண்ணெய் கப்பல் [வோல்கோனெப்ட் 212] இரண்டாக பிளந்து அதில் இருந்த எண்ணெய் கடலில் கசியத் தொடங்கி உள்ளது. இந்த விபத்தில் 1 ஊழியர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

     14 ஊழியர்களுடன் சென்ற இரண்டாவது டேங்கர் கப்பலும் [வோல்கோனெப்ட் 239] புயலால் சேதம் அடைந்து அதே பகுதியில் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் இழுவைப் படகுகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்களை உள்ளடக்கிய குழு மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாக ரஷிய ஊடகம் தெரிவித்துள்ளது.

    • இந்தியா-ரஷ்யா அரசுகளுக்கு இடையேயான 21-வது கூட்டம்
    • உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.

    மாஸ்கோ:

    இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் சுற்றுப் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். நேற்று இரவு ரஷ்யா தலைநகர் மாஸ்கோவுக்கு சென்ற ராஜ்நாத் சிங்கை இந்திய ரஷ்ய தூதர் வினய்குமார் மற்றும் ரஷ்ய துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் போமின் வரவேற்றனர்.

    ரஷ்யாவில் தயாரிக்கப் பட்ட ஐ.என்.எஸ். துஷில் போர் கப்பல் இன்று கலினியின் கிராட்டில் உள்ள யந்த்ரா கப்பல் கட்டும் தளத்தில் இந்திய கடற்படையுடன் சேர்க்கப்படும் விழா நடக்கிறது.

    இதில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி கலந்து கொள்கின்றனர். மல்டி ரோல் ஸ்டெல்த்-கைடட் ஏவுகனை போர் கப்பல் உலகளவில் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போர் கப்பல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    இது இந்தியப் பெருங்கடலில் இந்திய கடற்படையின் செயல்பாட்டு திறனை கணிசமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை (செவ்வாய்க் கிழமை) மாஸ்கோவில் ராணுவம் மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்தியா-ரஷ்யா அரசுகளுக்கு இடையேயான 21-வது கூட்டம் நடக்கிறது. இதில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கும், ரஷ்ய பிரதிநிதியான ஆண்ட்ராய் பிளசோவ் இணைந்து தலைமை தாங்குகின்றனர்.

    இதில் இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு துறையில் ராணுவம் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு உள்பட பலத்தரப்பட்ட உறவுகள் குறித்து ஆலோசனை நடக்கிறது.

    உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.

    இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பார் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த சந்திப்பு நடைபெறும் நாள், இடம் பற்றிய விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. 

    • மனிதாபிமான அடிப்படையில் ரஷியா அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.
    • சிரியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணவேண்டும்.

    மாஸ்கோ:

    சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டாக வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது.

    சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

    இதற்கிடையே, தலைநகர் டமாஸ்கஸ் நேற்று கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆசாத்துக்கு ஆதரவாக செயல்படும் ரஷியாவின் கடற்படை விமான தளங்கள் அமைத்துள்ள கடலோர பகுதிகளுடன் டமாஸ்கஸ் தொடர்பைக் கிளர்ச்சியாளர்கள் துண்டித்துள்ளனர். அதிபர் ஆசாத் நாட்டை விட்டு விமானம் மூலம் தப்பியோடியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து தப்பியோடிய ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஷியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர் என கிரெம்ளின் மாளிகை வட்டாரம் தெரிவிக்கின்றது.

    இதுதொடர்பாக ரஷிய செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மாஸ்கோ வந்துள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் ரஷியா அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. சிரியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என எப்போதும் ரஷியா கூறி வருகிறது.

    ஐ.நா. மத்தியஸ்தம் செய்யும் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரஷியாவில் தயாரான ஏவுகணை போர்க்கப்பல் ஐஎன்எஸ் துஷில் இந்திய கடற்படையில் இணைக்கப்படுகிறது.
    • இந்தியா-ரஷியா இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

    மாஸ்கோ:

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று ரஷியா சென்றுள்ளார். மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போர்க்கப்பல் ஐ.என்.எஸ். துஷில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. கலினின்கிராட்டில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதியும் பங்கேற்க உள்ளார்.

    உலக அளவில் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட போர்க்கப்பல்களில் ஒன்றாக கருதப்படும் ஐ.என்.எஸ். துஷில் போர்க்கப்பல், இந்திய பெருங்கடலில் இந்திய கடற்படையின் செயல்பாட்டுத் திறனை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், மாஸ்கோவில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ள இந்தியா-ரஷியா அரசு ஆணையத்தின் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 21-வது கூட்டத்தில் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.

    கடந்த 5 மாதத்துக்கு முன் பிரதமர் மோடி ரஷியாவிற்கு பயணம் செய்து அந்நாட்டின் அதிபர் புதினைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதியும் பங்கேற்க உள்ளார்.
    • இந்தியா-ரஷியா இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

    மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக நாளை ரஷியா செல்கிறார்.

    ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போர்க்கப்பல் 'ஐ.என்.எஸ். துஷில்' இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் திங்கள் அன்று கலினின்கிராட்டில் நடைபெற உள்ளது. இதில் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதியும் பங்கேற்க உள்ளார். உலக அளவில் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட போர்க்கப்பல்களில் ஒன்றாக கருதப்படும் 'ஐ.என்.எஸ். துஷில்' போர்க்கப்பல், இந்திய பெருங்கடலில் இந்திய கடற்படையின் செயல்பாட்டுத் திறனை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தனது ரஷிய சுற்றுப்பயணத்தின்போது ராஜ்நாத் சிங், மாஸ்கோவில் வரும் 10-ந்தேதி நடைபெற உள்ள இந்தியா-ரஷ்யா அரசு ஆணையத்தின் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 21-வது கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 5 மாதங்களுக்கு பிரதமர் மோடி ரஷியாவிற்கு பயணம் செய்து அந்நாட்டின் அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில், இந்தியா-ரஷியா இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் ரெயிலில் ஆண் பயணிகள் அருகே நெருக்கமாக அமர்ந்து கொள்கிறார்கள்.
    • வீடியோ ஒரு வாரத்திற்குள் 20 லட்சம் பார்வைகளையும் 2½ லட்சம் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

    ரஷியாவை சேர்ந்தவர் கேத் சும்ஸ்கயா. பிரபல மாடல் அழகியான இவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 30 லட்சம் பேர் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் தோழிகள் 3 பேருடன் இணைந்து குளியல் அறையில் பயன்படுத்தும் துண்டு மட்டும் அணிந்தவாறு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். இதுதொடர்பான வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி உள்ளார். அதில் அரைகுறையாக உடம்பை மூடியபடி, 'ஹை ஹீல்ஸ்' செருப்பு அணிந்தவாறு அவர்கள் 4 பேரும் மெட்ரோ ரெயிலுக்குள் ஏறுகிறார்கள்.

    பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் ரெயிலில் ஆண் பயணிகள் அருகே நெருக்கமாக அமர்ந்து கொள்கிறார்கள். பின்னர் அவர்களுடன் செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டு லூட்டி அடிக்கிறார்கள். இந்த வீடியோ ஒரு வாரத்திற்குள் 20 லட்சம் பார்வைகளையும் 2½ லட்சம் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.



    • உயர் தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரஷியா சாதனை படைத்து வருகிறது.
    • விவசாயம் செய்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் புதின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் இந்தியாவை பாராட்டினார். அதிபர் புதின் பேசியதாவது:-

    இந்திய பிரதமர் மோடியிடம் 'மேக் இன் இந்தியா' திட்டம் உள்ளது. அது ரஷியாவின் இறக்குமதி மாற்று திட்டத்துக்கு இணையாக உள்ளது. 'மேக் இன் இந்தியா' திட்ட முயற்சி பாராட்டுக்குரியது. இந்தியாவில் பொருளாதார திட்டங்கள் சிறப்பாக உள்ளது.

    தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமர் மோடி சிறப்பாக கவனம் செலுத்தி வருகிறார். எங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைக்க நாங்களும் தயாராக உள்ளோம். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பிரதமர் மோடியும், இந்திய அரசும் நிலையான தன்மைகளை உருவாக்கி வருகின்றனர். இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது என்று நாங்கள் நம்புகிறோம்.

    நுகர்வோர் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், உயர் தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரஷியா சாதனை படைத்து வருகிறது. மேற்கத்திய பொருட்களை விட ரஷிய பொருட்கள் அதிகமாக விற்பனையாகிறது. மேலும் விவசாய உற்பத்தியும் ரஷியாவில் பெருகியுள்ளது. விவசாயம் செய்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

    1988-ம் ஆண்டு ரஷ்யா 35 பில்லியன் டாலர்களுக்கு தானியங்களை இறக்குமதி செய்தது. கடந்த ஆண்டு நாங்கள் 66 பில்லியன் டாலர்களுக்கு தானியங்களை ஏற்றுமதி செய்தோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×