என் மலர்tooltip icon

    இலங்கை

    • தமிழகம், புதுச்சேரி மீனவர்களின் படகுகளை 2வது முறையாக ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்களின் படகுகளை ஏலம்விட அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்களின் படகுகள் ஏலத்தில்விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2024ம் ஆண்டு பிடிக்கப்பட்ட தமிழகம், புதுச்சேரி மீனவர்களின் படகுகளை 2வது முறையாக ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 31 ராமேஸ்வரம் படகுகள், 14 புதுக்கோட்டை படகுகள், 8 கன்னியாகுமரி மாவட்ட படகுகள் உள்ளிட்ட 67 படகுகளை ஏலம் விடப்போவதாக இலங்கை நீரியல் வளத்துறை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய- மாநில அரசுகள் ஏலத்தை தடுத்து மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • மீனவர்கள் தற்போது வரை 70-க்கும் மேற்பட்டவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை செய்துள்ளது.

    இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களின் 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான மீனவர்களை யாழ்ப்பாணம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது வரை 70-க்கும் மேற்பட்டவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்.

    மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்த மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கைதானவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதைதொடர்ந்து, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு மார்ச் 5ம் தேதி வரை சிறை காவல் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • இலங்கையில் துணை மின்நிலையம் ஒன்றில் குரங்கு ஒன்று நுழைந்தது.
    • இதையடுத்து நேற்று நாடுதழுவிய மின்தடை ஏற்பட்டது என்றனர் அதிகாரிகள்.

    கொழும்பு:

    இலங்கையில் துணை மின்நிலையம் ஒன்றில் குரங்கு ஒன்று நுழைந்ததை அடுத்து நேற்று நாடு தழுவிய மின்தடை ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.30 மணியளவில் தொடங்கிய மின்தடை 3 மணி நேரத்துக்குப் பின்னரும் சீராகவில்லை.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எரிசக்தித்துறை மந்திரி, கொழும்பு புறநகர் பகுதியான பானாந்துறை மின்நிலையத்தில் ஏற்பட்ட மின் அழுத்த பிரச்சனையால் நாடுமுழுதும் மின் தடை ஏற்பட்டது. மின்சார தடைக்கு பானாந்துறை மின்நிலையத்தில் புகுந்து குரங்கு செய்த சேட்டையே காரணம். சில பகுதிகளில் மின்சார விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆனால் பல இடங்களில் மின்தடை நீடித்தது. விரைவில் மின்விநியோகம் சீராகும் என தெரிவித்தார்.

    குரங்கு செய்த சேட்டையால் இலங்கையில் மின்தடை ஏற்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை ஒயிட்வாஸ் செய்தது
    • 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதமடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    இலங்கை- ஆஸ்திரேலியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி காலேயில் நடைபெற்று வந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 257 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 414 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. பின்னர் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதனையடுத்து 75 ரங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது .

    இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை ஒயிட்வாஸ் செய்தது. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா சாதனை படைத்துள்ளது.

    156 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வித்திட்ட அலெக்ஸ் கேரி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த டெஸ்ட் தொடரின் 2 போட்டிகளிலும் சதமடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    • ஸ்மித் (131), அலெக்ஸ் கேரி (156) சதம் விளாசல்.
    • இலங்கை வீரர் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட் சாய்த்தார்.

    இலங்கை- ஆஸ்திரேலியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் 2-வது போட்டி நேற்று முன்தினம் காலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 257 ரன்கள் எடுத்து ஆலஅவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க், மேத்யூ குனேமான், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஸ்மித், அலெக்ஸ் கேரி அபாரமாக விளையாடி சதம் விளாசினர்.

    நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்திருந்தது. ஸ்மித் 120 ரன்களுடனம், கேரி 139 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஸ்மித் 131 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி 156 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் ஆஸ்திரேலியா விக்கெட்டுகள் மளமளவென சரிய 414 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இலங்கை அணியில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், நிஷான் பெய்ரிஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களான நிஷாங்கா 8 ரன்னிலும், கருணாரத்னே 14 ரன்னிலும், சண்டிமல் 12 ரன்னிலும் வெளியேறினார்.

    ஆனால் மேத்யூஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவருடன் குசால் மெண்டிஸ் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.

    இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. மேத்யூஸ் 72 ரன்களுடனும், மெண்டிஸ் 35 ரன்களுடனும் விளையாடி வருகிறது.

    • அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
    • ஒரு விசைப்படகையும் சிறைபிடித்து சென்றனர்.

    ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்த சம்பவம் அரங்கேறியது.

    ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்ததோடு, ஒரு விசைப்படகையும் சிறைபிடித்து சென்றனர். சமீபத்தில் தான் தமிழகத்தை சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

    இந்த நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழர்களுக்கு சொந்தமான சுமார் 3,500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டன.
    • விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு சென்றார்.

    ராணுவத்தின் வசம் உள்ள வடக்குப் பகுதி தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக உறுதியளித்துள்ளார்.

    1980 களில் இருந்து ஆயுதப் போராட்டத்தின் போது, ராணுவத் தேவைகளுக்காக அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களின் நிலங்களை அபகரித்தது.

    குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் நகரில் பலாலி இராணுவத் தளத்தைச் சுற்றி உயர் பாதுகாப்பு வலயத்தை உருவாக்குவதற்காக தமிழர்களுக்கு சொந்தமான சுமார் 3,500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டன.

    2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் 2015 முதல் அவ்வாறு கைப்பற்றப்பட்ட நிலங்கள் சிலவற்றை அரசு உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைத்தது. இருப்பினும் தமிழ் மக்களுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலம் இன்னும் அரசு வசமே உள்ளது.

    இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிபராக  தேர்வு செய்யப்பட்ட பின்னர் முதன்முறையாக வடக்கு பகுதியின் முக்கிய நகரமான யாழ்ப்பாணத்திற்கு திசநாயக நேற்று [வெள்ளிக்கிழமை] வருகை தந்தார். அங்கு யாழ்ப்பாண மாவட்ட பிரதிநிதிகளுடன் அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஆலோசித்தார்.

    அப்போது, வடக்குப் பகுதி தமிழர்களிடம் இருந்து ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்கள் விரைவில் திரும்ப ஒப்படைக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதற்கான செயல்முறை விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    மேலும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு சென்று அங்கு நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அதிபர் அனுர குமார திசநாயக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    • உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 475 ரன்கள் எடுத்துள்ளது.
    • கவாஜா 204 ரன்னும், ஜோஷ் லிங்கிஸ் 44 ரன்னும் எடுத்துள்ளனர்.

    காலே:

    இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களான கவாஜா, டிராவிஸ் ஹெட் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி அரைசதமடித்து 57 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுசேன் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    3வது விக்கெட்டுக்கு ஸ்டீவன் ஸ்மித் கவாஜாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் நிலைத்து நின்று ஆடி சதமடித்து அசத்தினர்.

    முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்கு 330 ரன்கள் எடுத்தது. கவாஜா 147 ரன்னும், ஸ்மித் 104 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், 2வது நாள் இன்று நடந்து வருகிறது. சிறப்பாக ஆடிய ஸ்மித் 141 ரன்னில் அவுட்டானார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 266 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய கவாஜா இரட்டை சதமடித்து அசத்தினார். உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்கு 475 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. கவாஜா 204 ரன்னும், ஜோஷ் லிங்கிஸ் 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • மீனவர்களை கைது செய்ததோடு, விசைப்படகையும் சிறைபிடித்தது.
    • துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்ததோடு, விசைப்படகையும் சிறைபிடித்தது.

    மேலும், கைது செய்யப்படுவதில் இருந்து தப்பி செல்ல முயன்ற இரண்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கி சூட்டில் காயமுற்ற தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் சிகிச்சை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

    சமீபத்தில் தான் தமிழகத்தை சேர்ந்த 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர். மீனவர்கள் கைது சம்பவத்தை கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ள நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • இறுதிக்கட்ட போரின் போது பிரபாகரன் தப்பி சென்று விட்டதாக மற்றொரு தகவல் வெளியானது.
    • உடலை சிங்கள ராணுவம் கைப்பற்றி தகனம் செய்து விட்டது.

    கொழும்பு:

    இலங்கையில் வடகிழக்கு பகுதியில் தமிழர் அதிகம் வசிக்கும் இடங்களை ஒருங்கிணைத்து தனி தமிழ் ஈழம் நாட்டை உருவாக்க பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி போராடி வந்தார்கள்.

    இலங்கையில் உள்ள சிங்கள அரசால் தமிழ் விடுதலைப்புலிகளை அடக்க இயலவில்லை. இந்த நிலையில் கடந்த 2000-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா உள்பட பல வெளிநாடுகளில் ஆயுத உதவியை பெற்ற இலங்கை அரசு தீவிர போரை மேற்கொண்டது.

    2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள படைகளுக்கும் இடையே மிக கடுமையான போர் நடந்தது. அந்த போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மே மாதம் 17-ந்தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது உடலை சிங்கள ராணுவம் கைப்பற்றி தகனம் செய்து விட்டது.

    பிரபாகரன் உடன் அவரது மூத்த மகன் சார்லஸ், மகள் துவாரகா ஆகியோரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இறுதிக்கட்ட போரின் போது பிரபாகரன் தப்பி சென்று விட்டதாக மற்றொரு தகவல் வெளியானது.

    இதனால் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பதில் தொடர்ந்து மாறுபட்ட தகவல்கள் அடிக்கடி வெளியாகியபடி உள்ளது. பிரபாகரன் நிச்சயமாக மீண்டும் வருவார் என்று பழ.நெடுமாறன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உறுதிப்பட தெரிவித்து வருகிறார்கள்.

    ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்த மற்றவர்களும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சில மூத்த தலைவர்களும் பிரபாகரன் 2009-ல் கொல்லப்பட்டு விட்டதை உறுதி செய்கிறார்கள். இதன் காரணமாக பிரபாகரன் விஷயத்தில் மர்மம் நீடிப்பதாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெளிநாடு ஒன்றில் ரகசிய இடத்தில் இருப்பதாகவும் வருகிற மே மாதம் அவர் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றுவார் என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

    பிரபாகரனுடன் பொட்டு அம்மனும் வர வாய்ப்பு இருப்பதாக இந்த தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவு பிரிவு தலைவரான பொட்டு அம்மனும் போரில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஆனால் பிரபாகரனை யார் கண்ணிலும் படாமல் வெளிநாட்டுக்கு அழைத்து சென்றது பொட்டு அம்மன்தான் என்று விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஒருசாரார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களால் உலகம் முழுக்க வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் புதிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    பிரபாகரனுடன் நெருக்கமாக பழகியவர்களில் ஒருவரான கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் இது தொடர்பாக கேட்டபோது, "எனக்கும் அப்படி ஒரு தகவல் வந்து இருக்கிறது" என்றார். இதனால் பிரபாகரன் மீண்டும் உயிரோடு வருவாரா? என்ற எதிர்ப்பார்ப்பு ஈழ தமிழ் மக்களிடம் உருவாகி இருக்கிறது.

    • இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீன்வர்களை கைது செய்தது.
    • மீனவர்களின் விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்டன.

    தமிழக மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை செய்தது.

    மேலும், மீனவர்களின் மூன்று விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

    • யோஷித ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த போது அந்நாட்டின் கடற்படை அதிகாரியாக பணியாற்றினார்.
    • குற்றப்புலனாய்வு அலுவலகத்தில் குற்றச்சாட்டு தொடர்பாக யோஷித ராஜபக்சே விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்.

    இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே. பிரதமராகவும் இருந்துள்ளார். இவருக்கு நமல், ரோஹிதா, யோஷிதா ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் யோஷித ராஜபக்சேவை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அவரை சட்டவிரோத சொத்து குவிப்பு புகார் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். பெலியத்த என்ற பகுதியில் வைத்து யோஷிதாவை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதுகுறித்து போலீஸ் செய்தி தொடர்பாளர் புத்திக மனதுங்க கூறும்போது, "சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் யோஷித ராஜபக்சே, குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்" என்றார். ஏற்கனவே சொத்து குவிப்பு புகார் தொடர்பாக யோஷித ராஜபக்சேவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது சொத்து விவரங்கள் பற்றி கேள்வி கேட்கப்பட்டு வருகிறது.

    இலங்கையில் அதிபராக கோத்தபய ராஜபக்சே, பிரதமராக மகிந்த ராஜபக்சே இருந்தபோது பொருளாதார நெருக்கடி காரணமாக மிகப்பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் அவர்கள் பதவியில் இருந்து விலகினார்கள். அதன்பின் இடைக்கால அரசு அமைந்தது.

    பின்னர் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மெல்ல மீண்டது. சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் திசாநாயகே அபார வெற்றி பெற்று பதவியேற்றார்.

    தேர்தலில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். ராஜபக்சே குடும்பத்தினர் மீதான செல்வாக்கு மோசமாக சரிந்துள்ளது. இந்த நிலையில் யோஷித ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.

    ×