search icon
என் மலர்tooltip icon

    T20 உலகக் கோப்பை திருவிழா 2024

    • 4வது விக்கெட்டுக்கு விராட் கோலி, அக்சர் பட்டேல் ஜோடி 72 ரன்கள் சேர்த்தது.
    • சிறப்பாக ஆடிய விராட் கோலி அரை சதமடித்தார்.

    பார்படாஸ்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி பார்படாசில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ரோகித் சர்மா 5 பந்தில் 9 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் டக் அவுட் ஆனார். அப்போது இந்தியா 1.6 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 3 ரன் எடுத்து வெளியேறினார். அப்போது இந்தியா 4.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது.

    தொடர்ந்து இறங்கிய அக்சர் பட்டேல் கோலியுடன் இணைந்தார். பவர் பிளேயின் முதல் 6 ஓவரில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்தது. இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த நிலையில் அக்சர் பட்டேல் 47 ரன்னில் அவுட்டானார்.

    இந்நிலையில், விராட் கோலி அரை சதம் கடந்தார். இது அவரது 39-வது அரை சதமாகும். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக அரை சதம் அடித்த பாபர் அசாம் சாதனையை சமன் செய்துள்ளார்.

    • டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
    • ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் விரைவில் அவுட்டாகினர்.

    பார்படாஸ்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ரோகித் சர்மா 5 பந்தில் 9 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் டக் அவுட் ஆனார். அப்போது இந்தியா 1.6 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 3 ரன் எடுத்து வெளியேறினார். அப்போது இந்தியா 4.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது.

    தொடர்ந்து இறங்கிய அக்சர் பட்டேல் கோலியுடன் இணைந்தார். பவர் பிளேயின் முதல் 6 ஓவரில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்தது. இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த நிலையில் அக்சர் பட்டேல் 47 ரன்னில் அவுட்டானார்.

    .

    • ரோகித் சர்மா 9 ரன்னில் அவுட்.
    • ரிஷப் பண்ட் டக்அவுட். சூர்யகுமார் யாதவ் 3 ரன்னில் அவுட்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை யான்சன் வீசினார். முதல் பந்தில் ரோகித் சர்மா ஒரு ரன் எடுத்தார்.

    அடுத்த பந்தை விராட் கோலி சந்தித்தார். பாயின்ட் திசையில் விராட் கோலி அருமையாக முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார். அதன்பின் 3-வது மற்றும் 6-வது பந்தையும் விராட் கோலி பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் முதல் ஓவரில் இந்தியாவுக்கு 15 ரன்கள் கிடைத்தது.

    2-வது ஓவரை மகாராஜ் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 4-வது பந்தை ஸ்விப் அடிக்க முயன்றார். ஆனால் கிளாசன் சிறப்பாக கேட்ச் பிடித்தார். இதனால் ரோகித் சர்மா 5 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 1.4 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து வந்த ரிஷப் பண்ட் 2-வது ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட் ஆனார். அப்போது இந்தியா 1.6 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தது. மகாராஜ் 2-வது ஓவரில் இரண்டு பவுண்டர் கொடுத்து இரண்டு பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    3-வது ஓவரை ரபாடா வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. அடுத்த ஓவரை மகாராஜ் வீசினார். இந்த ஓவரில் கோலி ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவுக்கு 6 ரன்கள் கிடைத்தது. இந்தியா 4 ஓவர் முடிவில் 32 ரன்கள் எடுத்திருந்தது.

    5-வது ஓவரை ரபடா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சூர்யகுமார் யாதவ் லெக்சைடு தூக்கி அடித்தார். ஆனால் கிளாசின் அற்புதமாக கேட்ச் பிடிக்க சூர்யகுமார் யாதவ் 4 பந்தில் 3 ரன் எடுத்து வெளியேறினார். அப்புாது இந்தியா 4.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து அக்சட் பட்டேல் களம் இறங்கினார். 5-வது ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்த இந்தியா ஒரு பவுண்டரியுடன் ஏழு ரன்கள் அடித்தது.

    பவர்பிளேயின் கடைசி ஓவரான 6-வது ஓவரை மார்கிராம் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 6 ரன்கள் கிடைத்தது. இதனால் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் அடித்தது.

    • ரோகித் சர்மா 9 ரன்னில் அவுட்.
    • ரிஷப் பண்ட் டக்அவுட்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை யான்சன் வீசினார். முதல் பந்தில் ரோகித் சர்மா ஒரு ரன் எடுத்தார்.

    அடுத்த பந்தை விராட் கோலி சந்தித்தார். பாயின்ட் திசையில் விராட் கோலி அருமையாக முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார். அதன்பின் 3-வது மற்றும் 6-வது பந்தையும் விராட் கோலி பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் முதல் ஓவரில் இந்தியாவுக்கு 15 ரன்கள் கிடைத்தது.

    2-வது ஓவரை மகாராஜ் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 4-வது பந்தை ஸ்விப் அடிக்க முயன்றார். ஆனால் கிளாசன் சிறப்பாக கேட்ச் பிடித்தார். இதனால் ரோகித் சர்மா 5 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 1.4 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து வந்த ரிஷப் பண்ட் 2-வது ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட் ஆனார். அப்போது இந்தியா 1.6 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தது. மகாராஜ் 2-வது ஓவரில் இரண்டு பவுண்டர் கொடுத்து இரண்டு பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    3-வது ஓவரை ரபாடா வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. அடுத்த ஓவரை மகாராஜ் வீசினார். இந்த ஓவரில் கோலி ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவுக்கு 6 ரன்கள் கிடைத்தது. இந்தியா 4 ஓவர் முடிவில் 32 ரன்கள் எடுத்திருந்தது.

    5-வது ஓவரை ரபடா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சூர்யகுமார் யாதவ் லெக்சைடு தூக்கி அடித்தார். ஆனால் கிளாசின் அற்புதமாக கேட்ச் பிடிக்க சூர்யகுமார் யாதவ் 4 பந்தில் 3 ரன் எடுத்து வெளியேறினார். அப்புாது இந்தியா 4.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது.

    • 2-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார்.
    • 4-வது பந்தில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் பண்ட் ஆட்டமிழந்தார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை யான்சன் வீசினார். முதல் பந்தில் ரோகித் சர்மா ஒரு ரன் எடுத்தார்.

    அடுத்த பந்தை விராட் கோலி சந்தித்தார். பாயின்ட் திசையில் விராட் கோலி அருமையாக முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார். அதன்பின் 3-வது மற்றும் 6-வது பந்தையும் விராட் கோலி பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் முதல் ஓவரில் இந்தியாவுக்கு 15 ரன்கள் கிடைத்தது.

    2-வது ஓவரை மகாராஜ் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 4-வது பந்தை ஸ்விப் அடிக்க முயன்றார். ஆனால் கிளாசன் சிறப்பாக கேட்ச் பிடித்தார். இதனால் ரோகித் சர்மா 5 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ரிஷப் பண்ட் 2-வது ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட் ஆனார்.

    • இந்திய அணியில் மாற்றம் ஏதும் இல்லை.
    • தென்ஆப்பிரிக்கா அணி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது.

    கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி தொடங்கிவிட்டது. டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணி:-

    1. ரோகித் சர்மா, 2. விராட் கோலி, 3. ரிஷப் பண்ட், 4. சூர்யகுமார் யாதவ், 5. ஷிவம் துபே, 6. ஹர்திக் பாண்ட்யா, 7. ஜடேஜா, 8. அக்சர் பட்டேல், 9. குல்தீப் யாதவ், 10. பும்ரா, 11. அர்ஷ்தீப் சிங்.

    தென்ஆப்பிரிக்கா அணி:

    1. டி காக், 2. ஹென்ரிக்ஸ், 3. மார்கிராம், 4. ஸ்டப்ஸ், 5. கிளாசன், 6. டேவிட் மில்லர், 7. யான்சன், 8. மகாராஜா, 9. ரபடா, 10. நோர்ஜே, 11. ஷம்சி.

    பிட்சி ரிப்போர்ட் (இயன் பிசப்)- ஆடுகளத்தில் உயிருடன் புற்கள் இல்லை. இதனால் பந்து பேட்டிற்கு எளிதாக வரும்.

    • இந்தியா 2007-ல் நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்று பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பை வென்றது.
    • 2014-ல் நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் தோற்ற இந்தியா இலங்கையிடம் தோல்வி அடைந்தது.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு பார்படாசில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சம பலத்தில் உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் டாஸ் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

    இதுவரை நடந்துள்ள 8 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டிகளில் 7 முறை டாஸ் வென்ற அணி கோப்பையைக் கைப்பற்றி உள்ளது.

    ஒரே ஒரு முறை டாஸ் தோற்ற அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.

    இந்தியா 2007ம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்று பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதேபோல், 2014-ல் நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் தோற்ற இந்திய அணி இலங்கையிடம் தோல்வி அடைந்தது.

    • ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பரூக்கி அணியில் இடம் பிடித்துள்ளார்.
    • அமெரிக்காவின் ஆரோன் ஜோன்ஸ்க்கு அணியில் இடம் கொடுத்துள்ளது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன.

    இந்த நிலையில் இந்த உலகக் கோப்பையில் விளையாடிய 20 அணிகளில் இடம் பிடித்துள்ள வீரர்களின் செயல்பாடுகளை கணக்கில் கொண்டு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் 2024 டி20 உலகக் கோப்பைக்கான அணியை வெளியிட்டுள்ளது.

    இதில் தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு தங்கள் அணிகளை அழைத்துச் சென்ற ரோகித் சர்மா மற்றும் மார்கிராம் ஆகியோரை கேப்டனாக தேர்வு செய்யவில்லை.

    முதன்முறையாக அரையிறுதிக்கு அணியை அழைத்துச் சென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கானை கேப்டனாக நியமித்துள்ளது.

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவித்துள்ள டி20 உலகக் கோப்பை அணி:-

    1. ரோகித் சர்மா, 2. டிராவிஸ் ஹெட், 3. நிக்கோலஸ் பூரன், 4. ஆரோன் ஜோன்ஸ், 5. மார்க்ஸ் ஸ்டோய்னிஸ், 6. ஹர்திக் பாண்ட்யா, 7. ரஷித் கான் (கேப்டன்), 8. ரிஷாத் ஹொசைன், 9. நோர்ஜே, 10, பும்ரா, 11. பரூக்கி.

    இந்திய அணியில் இருந்து ரோகித் சர்மா, பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியில இருந்து இருவர் இடம் பிடித்துள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் (நிக்கோலஸ் பூரன்) , அமெரிக்கா (ஆரோன் ஜோன்ஸ்), வங்காளதேசம் (ரிஷாத் ஹொசைன்), தென்ஆப்பிரிக்கா (நோர்ஜே), ஆப்கானிஸ்தான் (ரஷித் கான், பரூக்கி) அணி வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.
    • அதனால் விராட் கோலியின் பேட்டிங் பார்ம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

    பார்படாஸ்:

    9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பார்படாஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

    நடப்பு உலகக் கோப்பை தொடரில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் இந்திய வீரர் விராட் கோலி தற்போது பேசுபொருளாக மாறியுள்ளார்.

    இந்நிலையில், விராட் கோலியின் பார்ம் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியதாவது:

    இது விராட் கோலியின் ஆட்டம் அல்ல. அவர் விரைவாக ரன்கள் குவிக்கப்போய் தனது விக்கெட்டை பறிகொடுக்கிறார்.

    ஏனென்றால் மறுமுனையில் அதற்கு நேர்மாறாக ரோகித் சர்மா சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

    ரோகித் ஆக்ரோஷமாக விளையாடுவதால் விராட் கோலியும் அதற்கு முயற்சிசெய்து விரைவிலேயே ஆட்டம் இழக்கிறார்.

    அவர் அதிக நேரம் களத்தில் நின்றால் தனது பழைய பார்மை நிச்சயமாக மீட்டெடுக்க முடியும். அவர் தனது பழைய பாணியில் விளையாட மறுப்பதால்தான் இவ்வாறு வெளியேறுகிறார்.

    தற்போது விராட் கோலிக்கு பேட்டிங் ரிதம் சரியாக அமையவில்லை. அவரது எல்லையில் பந்து விழுந்தால் அவர் அதை தாராளமாக முயற்சி செய்யலாம். ஆனால் அவர் ஷாட்களை உருவாக்க முயற்சிக்கிறார்.

    நீங்கள் சிறப்பான பேட்டிங் பார்மில் இருக்கும்போது அவ்வாறான ஷாட்களை முயற்சி செய்யலாம். எதிரணிக்கு 300 ரன்கள் கூட வெற்றி இலக்காக நிர்ணயிக்கலாம். ஆனால் அது சரியாக அமையவில்லை எனில், சிறிது பொறுமையாகக் காத்திருந்து விளையாட வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார்.

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பும்ரா, அர்ஷ்தீப் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
    • தென்ஆப்பிரிக்கா பார்படாஸ் மைதானத்தில் தற்போதுதான் விளையாட இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு வெஸ்ட் இண்டீஸ் பார்படாஸ் பிரிட்ஜ் டவுண் கென்சிங்ஸ்டன் ஓவலில் நடைபெற இருக்கிறது.

    இந்த மைதானத்தில் இதுவரை எட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஓமன்- நமீபியா இடையிலான போட்டி டையில் முடிந்து சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. ஸ்காட்லாந்து- இங்கிலாந்து இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது.

    மற்ற ஆறு போட்டிகளில் மூன்று போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், மற்ற 3 போட்டிகளில் 2-வது பேட்டிங் செய்த அணியும் வெற்றி பெற்றுள்ளன.

    பொதுவாக இந்த மைதானத்தின் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்துள்ளன. கடைசியாக இங்கிலாந்து- அமெரிக்கா இடையிலான போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தினர். என்றாலும் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 4 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    அமெரிக்காவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றினர். அதேவேளையில் சுழற்பந்து வீச்சாளர் சேஸ் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வேகப்பநது வீச்சாளர்கள் 4 விக்கெட் வீழ்த்தினர். சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    இந்திய அணியில் பும்ரா அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். குல்தீப் யாதவ், ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், சுழற்பந்து வீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

    இன்று 4-வது ஆடுகளத்தில் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த ஆடுகளம் குட் பவுன்ஸ் உடன் வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தென்ஆப்பிரிக்கா நோர்ஜே, ரபடா, யான்சன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. ஷம்சி, மகாராஜா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. தேவை என்றால் கேப்டன் மார்கிராம் பந்து வீசுவார்.

    தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்கள் முதலிலேயே விக்கெட்டுகளை வீழ்த்த முனைப்பு காட்டுவார்கள்.

    அதேவேளையில் இந்தியா அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா அவர்களுக்க துணையாக பந்து வீசுவார்கள். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ் துருப்புச் சீட்டாக இருப்பார். அவருடன் அக்சர் பட்டேல், ஜடேஜா உள்ளனர்.

    இன்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் அணி ஆதிக்கம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மைதானத்தில் தென்ஆப்பிரிக்கா இந்த தொடரில் இதுவரை விளையாடியவில்லை. முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடியுள்ளது.

    • நடப்பு உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாக இல்லை.
    • 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு பார்படாசில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    ஆனாலும், நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாக இல்லை.

    7 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தம் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே ரசிகர்கள் அவரது பார்ம் குறித்து கவலை அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரரான கிறிஸ் கெயில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இதுபோன்ற விஷயங்கள் சூப்பர் ஸ்டார்கள் அல்லது விராட் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு நடக்கும்.

    முந்தைய உலகக் கோப்பைகளில் அவர் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தினார் என்பது எங்களுக்குத் தெரியும்.

    இது யாருக்கும் ஏற்படலாம். ஆனால் அதில் உள்ள நல்ல விஷயம். அவர் இறுதிப் போட்டியில் இருக்கிறார்.

    சில சமயங்களில் பெரிய வீரர்களை அழைக்கலாம், மேலும் முன்னேறி அணிக்கான உண்மையான ஆட்டத்தையும் வெல்லலாம்.

    விராட் கோலி போன்ற ஒரு வீரரை சந்தேகமின்றி நீக்க முடியாது. அவர் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர் என்பதை அறிவோம்.

    எனவே அவர் இறுதிப்போட்டியில் என்ன வழங்குவார் என்பதை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

    • இந்திய அணியை மையமாக வைத்து நடப்பதால் மற்ற அணிகளுக்கு அநியாயம் நடக்கிறது.
    • மேலும், இந்தியாவுக்கு சாதகமாக ஐ.சி.சி. அட்டவணை தயாரித்துள்ளது என்றார் வாகன்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு பார்படாசில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இதற்கிடையே, இந்தியாவுக்கு சாதகமான வகையில் ஐ.சி.சி. அட்டவணையை தயாரித்துள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடர் இந்திய அணியை மையமாக வைத்து நடப்பதால் மற்ற அணிகளுக்கு அநியாயம் நடக்கிறது என குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், மைக்கேல் வாகனின் கருத்து குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:

    மைக்கேல் வாகன் எனக்கு மிகவும் அன்பான நண்பர். இரவு 8 மணிக்கு இந்திய கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதன் மூலம் ஐ.சி.சி எப்படி இந்தியாவுக்கு கிரிக்கெட் போட்டிகளை வெல்ல உதவுகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

    ஒளிபரப்பு கிரிக்கெட் போட்டிகளை எப்படி வெல்லும் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் இன்னும் நடுவில் விளையாடி வெற்றிபெற வேண்டும்.

    இரண்டாவதாக, அவர்கள் எல்லா இடங்களிலும் சுற்றிச் சென்று வெற்றி பெற்றபோது கயானாவை ஏன் வெற்றிக்கான இடமாக நினைக்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை.

    உலக கிரிக்கெட்டில் இந்தியா அனைத்து அம்சங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக உள்ளது.

    ஒரு நிறுவனத்தின் 80 சதவீத பங்கு ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்குச் சொந்தமானதாக இருந்தால் அவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்ப்பார்கள் என தெரிவித்தார்.

    ×