என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "14 injured"

    • சொகுசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்தது.
    • இதில்14 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

    சத்தியமங்கலம்:

    ஊட்டியில் இருந்து நேற்று இரவு கர்நாடக மாநில தனியார் சொகுசு பஸ் பெங்களூருக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் 13 பேர் பயணம் செய்தனர். பஸ்சை பெங்களூருவை சேர்ந்த ரவி (42) என்பவர் ஓட்டி சென்றார்.

    அந்த பஸ் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை அடுத்துள்ள பெரிய கள்ளிப்பட்டி வழியாக சென்று கொண்டு இருந்தது.

    தொடர்ந்து அந்த பஸ் சத்தியமங்கலம்- ஊட்டி மெயின் ரோடு பெரிய கள்ளிபட்டி சோதனை சாவடி அருகே நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் சென்று கொண்டு இருந்தது,.

    அப்போது அந்த சொகுசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென ரோட்டில் கவிழ்ந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் தூக்கத்தில் இருந்த பயணிகள் என்ன என்று தெரியாமல் அலறினர்.

    இதில் பஸ்சில் பயணம் செய்த டிரைவர் உள்பட 14 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதை பற்றி தகவல் அறிந்ததும் பவானி சாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    இதை தொடர்ந்து காயம் அடைந்த வர்களை ஆம்புலன்சு மூலம் மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை போலீசார் சரி செய்தனர்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புலிவலம் அருகே நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்ததில் வடமாநில தொழிலாளர்கள் உள்பட 14 பேர் காயமடைந்தனர்.
    புலிவலம்:

    திருச்சி மாவட்டம் புலிவலம் அருகே ஓமாந்தூர் சாலையில் தனியாருக்கு சொந்தமான நெல் கிடங்கு உள்ளது. இங்கிருந்து பெரமங்கலத்தில் உள்ள அரிசி ஆலைக்கு நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. லாரியை மண்ணச்சநல்லூர் எதுமலை ரோடு காமராஜ் நகரை சேர்ந்த மயில்(வயது 48) ஓட்டினார்.

    லாரியில் மூட்டைகளுக்கு மேற்பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 13 பேர் அமர்ந்து இருந்தனர். புலிவலம் - ஓமாந்தூர் சாலையில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 13 தொழிலாளர்களும் கீழே விழுந்தனர். நெல் மூட்டைகளும் சரிந்து விழுந்தன.

    இந்த விபத்தில் டிரைவர் மயில் உள்ளிட்ட 14 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு புலிவலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைகாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து புலிவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×