என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 places"

    • மதுரையில் 2 இடங்களில் சிலிண்டர் வெடித்தது.
    • பாலசுப்பி ரமணியன். பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

    மதுரை

    மதுரை சுப்பிரமணிய புரம், 3-வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பி ரமணியன். பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

    பேக்கரி ஊழியர்கள் இன்று காலை சிலிண்டரை மாற்றும்போது எதிர்பாராத விதமாக கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. இது குறித்து திடீர்நகர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதேபோன்று கோமதி புரம், பாரதி தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கியாஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தல்லாகுளம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இதில் குமார் என்பவர் அங்கு வீடு கட்டி கிரகபிரவேசம் நடத்தினார். மதிய உணவு விருந்துக்கு, அப்பளம் பொறித்து கொண்டிருந்தனர். சிலிண்டரின் ரெகு லேட்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது தெரியவந்தது.

    மதுரையில் இன்று ஒரே நாளில் 2 இடங்களில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வறண்டு கிடந்த புற்களில் திடீரென தீ பிடித்தது.
    • சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அடைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உலகபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள வறண்டு கிடந்த புற்களில் திடீரென தீ பிடித்தது.

    இது குறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இதேபோல் சென்னிமலை அருகே பழைய பாளையம் பகுதியில் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் தீ பிடித்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அடைத்தனர்.

    பீடி, சிகரெட் பற்ற வைத்தவர்கள் தீயை அணைக்காமல் போட்டதால் தீ விபத்துக்கள் ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    ×