என் மலர்
நீங்கள் தேடியது "6 கட்ட தேர்தல்"
நாகர்கோவில் அருகே மணக்குடி லூர்து மாதா தெருவைச் சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 35). மீன்பிடி தொழிலாளி.
வின்சென்டின் மனைவி தஸ்நேவிஸ் மேரிசஜினி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வின்சென்ட், அவரது மனைவி தஸ்நேவிஸ் மேரிசஜினி மற்றும் குழந்தைகள் அனைவரும் அங்குள்ள குருசடி முன்பு இரவில் தூங்குவது வழக்கம்.
கடந்த 23-ந்தேதி இரவு இதுபோல வின்சென்டும், அவரது குடும்பத்தினரும் குருசடி முன்பு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 8 பேர் கும்பல் வின்சென்டை அரிவாள் மற்றும் கம்பால் சரமாரியாக தாக்கினர். இதில் வின்சென்ட் பரிதாபமாக இறந்தார்.
வின்சென்ட் கொலை செய்யப்பட்டது பற்றி சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரில் அதே பகுதியை சேர்ந்த கிதியோன், பாண்டியன், லாடஸ், லாடசின் மகன்கள் நிகில், அகில், லாடசின் சகோதரர் அந்தோணி, ஜஸ்டின், அஸ்வின் ஆகிய 8 பேர் வின்சென்டை வெட்டி கொன்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் லாடஸ், லாடசின் மகன்கள் நிகில், அகில், லாடசின் சகோதரர் அந்தோணி, ஜஸ்டின், அஸ்வின் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதான 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் வின்சென்டை கொலை செய்தது ஏன்? என்று போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
வின்சென்டிற்கும், எங்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. நாங்கள் குருசடியில் படுத்திருப்பவர்கள் யார்? என பார்ப்பது உண்டு. சம்பவத்தன்றும் இதுபோல குருசடியில் படுத்திருந்தவர்களை டார்ச் லைட் அடித்து பார்த்தோம்.
அப்போது வின்சென்ட் எங்களிடம் தகராறு செய்தார். மனைவியின் முகத்தில் டார்ச்லைட் அடித்தது ஏன்? என்று கேட்டார். இதில் எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு மூண்டது. ஆத்திரமடைந்த நாங்கள் வின்சென்டை அரிவாள் மற்றும் கட்டையால் தாக்கினோம். இதில் படுகாயம் அடைந்த வின்சென்ட் இறந்துவிட்டார்.
அதன்பிறகு நாங்கள் ஊரில் இருந்து வெளியேறி தலைமறைவாக இருந்தோம். போலீசார் எங்களை தேடி கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.
இவ்வாறு வாக்குமூலத்தில் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கிதியோன், பாண்டியன் கும்பல் கொலைக்கு பயன்படுத்திய 4 அரிவாள் மற்றும் கம்பு, கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 6 பேரும் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
வின்சென்ட் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான கிதியோன், பாண்டியன் இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடி கண்டுபிடித்து கைது செய்யவும் போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் மேற்கு ஹூஸ்டன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
விமானத்தை அதன் உரிமையாளரும், விமானியுமான ஜெப்ரே வெயிஸ் (வயது 65) இயக்கினார். அவருடன் இந்த விமானத்தில் 5 பேர் பயணம் செய்தனர்.
இந்த விமானம் கெர்வில்லே நகரில் உள்ள விமானநிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் அந்த விமானம் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பண்ணை நிலத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த கோரவிபத்தில் ஜெப்ரே வெயிஸ் உள்பட விமானத்தில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. #PlaneCrash
சிலி நாட்டின் தெற்கு பகுதியில் லோஸ் லாகோஸ் பிராந்தியத்தில் உள்ள பியூர்ட்டோ மோண்ட் என்ற இடத்தில் இருந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
இதில் ஒரு விமானியும், 2 பெண்கள் உள்பட 5 பயணிகளும் பயணம் செய்தனர். புறப்பட்டு சென்ற சில நொடிகளில் விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் அந்த விமானம் ஒரு வீட்டின் மேல் பகுதியில் விழுந்து நொறுங்கியது. அதனை தொடர்ந்து, விமானத்தின் எரிபொருள் கசிந்து தீப்பிடித்தது. இதில் விமானம் மற்றும் அந்த வீடு முற்றிலும் எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
விமானம் விழுந்து நொறுங்கிய வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால் பெரிய அளவில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக விபத்து நேரிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. #Chile #Plane #Crashes
விருதுநகர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி, சர்க்கரை போன்றவற்றின் எடை குறைவாக இருப்பதாக அடிக்கடி புகார்கள் வந்தன.
இதுகுறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது லாரிகளில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் மூடைகளில் இருந்து லோடு மேன்கள் சிலர் நூதன முறையில் திருடுவது தெரியவந்தது.
ஒரு மூடைக்கு 5 கிலோ வீதம் அரிசி மற்றும் சர்க்கரை போன்றவற்றை எடுத்து விற்று வந்துள்ளனர். இது தொடர்பாக நுகர்பொருள் வாணிப கழக பில் கிளார்க் தமிழ்குமார் (வயது34) தமிழ்பாடியைச் சேர்ந்த லோடுமேன்கள் முருகன் (35), மதுரைவீரன் (53), லாரி டிரைவர் அழகிரி (49) ஆகியோர் கைது செய்து செய்யப்பட்டனர்.
திருடப்பட்ட ரேசன் அரிசியை திருச்சுழி அருகே உள்ள நல்லாங்குளத்தைச் சேர்ந்த சத்துணவு அமைப்பாளர் திருமால் (62) என்பவர் வாங்கி விற்றுள்ளார். அவரும் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 50 கிலோ எடை கொண்ட 26 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
சீனாவின் ஹூபே மாகாணம் ஜாவ்யாங் நகரில் இன்று அதிகாலை பொதுமக்கள் சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார், திடீரென பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பொதுமக்கள் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தனர். அப்போதும் காரை ஓட்டிய நபர், காரை நிறுத்தவில்லை.
இதையடுத்து போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் காருக்குள் இருந்த நபர் கொல்லப்பட்டார். கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சீனாவில், தனிப்பட்ட ஆத்திரம் மற்றும் கோபத்தை பொதுமக்கள் மீது காட்டும் போக்கு சமீப ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு நபர் சொகுசு காரை பொதுமக்கள் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 43 பேர் காயமடைந்தனர். சில நபர்கள் தங்கள் தனிப்பட்ட ஆத்திரம் மற்றும் மனரீதியிலான அழுத்தங்களால் கத்தி தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இவர்கள் குறிப்பாக பள்ளிக்கூடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் சென்று தாக்குதல் நடத்துகின்றனர். #ChinaAttack #ChinaCarCrash
சென்னை:
சென்னை மாவட்டத்தில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு அதிகாரி வீதம் மொத்தம் 6 அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
வடசென்னை தொகுதியில் உள்ள திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு சஞ்ஜீவ் குமார் தேவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது செல்போன் எண்:94999-56202. பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் தொகுதிக்கு விவேகானந்த் பவுரியர் செல் எண்:94999-56203.
தென்சென்னை தொகுதியில் உள்ள சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளை அதிகாரி எம்.நவீன் (9499956205) கண்காணிக்கிறார்.
விருகம்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர் தொகுதிக்கு அதிகாரி குருபிரசாத் (9499956206) நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய சென்னை தொகுதியில் உள்ள வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு அதிகாரி ஆர்.எம்.முஜும்தர் (94999-56209) செயல்படுகிறார்.
துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு அதிகாரி வி.என்.மங்கராஜு (94999-56208) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த 6 அதிகாரிகளும் 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் செலவின பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தேர்தல் முடியும் வரை சென்னையில் தங்கி இருந்து அனைத்து தேர்தல் பணிகளையும் கண்காணித்து வருவார்கள் என மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். #Parliamentelection #LSPolls
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகரை சேர்ந்த பெண் தெல்மா சயாகா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்துக்காக டெக்சாசில் உள்ள பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு 6 குழந்தைகள் பிறந்தன. அவற்றில் 4 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் அடங்குவர். குழந்தைகள் தலா 480 கிராம் முதல் 950 கிராம் வரை எடையுடன் உள்ளன.
இந்த குழந்தைகள் காலை 4.50 மணி முதல் 4.59 மணிக்குள் அதாவது 9 நிமிட இடைவெளியில் பிறந்தன. குழந்தைகளும், தாயும் நல்ல நிலையில் உள்ளனர். குழந்தைகள் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
470 கோடியில் ஒரு பெண்ணுக்கு தான் இதுபோன்று குழந்தை பிறக்கும். அந்த சாதனையை தெல்மா முறியடித்து விட்டார்.
இவர் தனது பெண் குழந்தைகளுக்கு ஷினா, ஷீரியல் என பெயரிட்டுள்ளார். 4 ஆண் குழந்தைகளுக்கு பெயர் தேடிக்கொண்டிருக்கிறார். #Texaswoman

பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ. 3200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்துக்கு 6 வழி சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த சாலை கண்ணிகைப் பேர், பெரியபாளையம், தண்டலம், தும்பாக்கம், தொளவேடு, காக்கவாக்கம், பருத்திமேனிகுப்பம், பாலவாக்கம், சென்னங்காரணை, ஆலபாக்கம், பனபாக்கம், ஈன்றம்பாளையம், பேரண்டூர், மாம்பாக்கம், போந்தவாக்கம், சீதஞ்சேரி, வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை செல்கிறது.
இந்த கிராமங்கள்வழியாக 6 வழி சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த அளவிடும் பணிகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சாலை பணியால் ஆயிரக்கனக்கான ஏக்கர் விவசாய விளை நிலங்கள், நூற்றுக்கனக்கான வீடுகள், கிணறுகள், பம்ப் செட்டுகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் 6 வழிச்சாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
இந்தநிலையில் தொளவேடு, காக்கவாக்கம், பருத்திமேனிகுப்பம் ஆகிய கிராமங்களில் நிலம் அளவிட அதிகாரிகள் வந்தனர்.
இதனை அறிந்த 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தொளவேடு கிராமத்தில் ஒன்று திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட்டனர். தங்கள் கிராமங்களின் வழியாக 6 வழி சாலை அமைக்க விடமாட்டோம் என்று கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் திடீரென அவர்கள் பாலவாக்கம்- தொளவேடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் நிலம் அளவிடும் பணியை நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்றனர்.
கடந்த 8-ந் தேதி சென்னங்காரணை, ஆலபாக்கம் கிராமங்களில் அதிகாரிகள் இரவு நேரங்களில் அளவு கற்கள் நட்டியதை கண்டித்து கிராம மக்கள் ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகம் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது. #tamilnews
வங்காளதேசத்தில் 1920-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘விலங்குகள் நலச்சட்டம்’ விலங்குகளை கொடுமைப்படுத்துதல், பலி கொடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வழிவகை செய்ததது.
இந்த நிலையில் 1920-ம் ஆண்டு சட்டத்தை அடிப்படையாக கொண்டு புதிய வரைவு சட்டம் ஒன்றை வங்காளதேச அரசு உருவாக்கி உள்ளது. இது ‘விலங்குகள் நலச்சட்டம் 2019’ என அழைக்கப்படுகிறது. முறையான காரணங்கள் இன்றி ஒரு நாள் அல்லது அதற்கு மேல் நாயை கட்டிப்போடுவது தண்டனைக்குரிய குற்றம் என இந்த சட்டம் கூறுகிறது. இதனை மீறுவோருக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் இறைச்சிக்காக விலங்குகளை கொல்லுவது மற்றும் மத சடங்குகளுக்காக விலங்குகளை பலி கொடுப்பது போன்றவற்றை குற்றமாக இந்த புதிய சட்டம் கருதவில்லை.
இந்த சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Bangladesh