search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GDP"

    • ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.6 சதவீதமாக இருந்தது.
    • 2024-2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    2024-2025-ஆம் நிதியாண்டின் 3-வது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.2 சதவீதம் என இந்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

    கடந்த 2023-2024 நிதியாண்டில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 9.5 சதவீதமாக இருந்தது. தற்போது 2024-25 நிதியாண்டில் அதே காலக்கட்டத்தில் 6.2 சதவீதமாக குறைந்துள்ளது. தயாரிப்பு மற்றும் சுரங்கத்துறையின் மோசமான செயல்பாடு இந்த குறைவுக்கு காரணம் ஆகும்.

    2024-2025-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.6 சதவீதமாக இருந்தது. 2024-2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    முதலில் 6.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது 2-வது கட்டமாக 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    2023-24 நிதியாண்டில் முதலில் 8.2 சதவீதமாக இருக்கும் நிலையில், பின்னர் 9.2 சதவீதம் என தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்தது குறிப்பிடத்தக்கது.

    • போக்குவரத்து கழக கடன் 2017க்கு முன்பாக இருந்த கடனைவிட 3 மடங்கு அதிகரித்துள்ளது.
    • தனிநபர் GDPல் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டின் சராசரி அதிகமாக உள்ளது.

    சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதன்மை கணக்காய்வு துறைத் தலைவர் ஜெய்சங்கர் சிஏஜி அறிக்கையை வெளியிட்டார்.

    தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மொத்தக் கடன் ரூ.21,980 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் 2017க்கு முன்பாக இருந்த கடனைவிட 3 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து ஊழியர்களின் செலவினம் மட்டும் 55.20% முதல் 63.55 % வரை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மாநில நிதிநிலை (ஏப்.2022 முதல் மார்ச் 2023 வரை) மீதான சிஏஜி அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

    2022-23 நிதியாண்டில் தேசிய தனிநபர் GDP-ஐ விட, தமிழ்நாட்டின் தனிநபர் GDP அதிகமாக உள்ளது. CAG அறிக்கை தனிநபர் உள்நாட்டு உற்பத்தியின் (GDP) தேசிய சராசரி ₹1,96,983 ஆக உள்ள நிலையில் தமிழ்நாட்டின் சராசரி ₹3,08,020 ஆக உள்ளது.

    தமிழ்நாட்டில் 2021-2022ல் ரூ.46,538 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை, 2022-2023ல் 36,215 கோடியாக குறைந்துள்ளது. ஆகவே முந்தைய ஆண்டின் வருவாய் வரவுகளை விட 2022-2023ல் 17% வருவாய் அதிகரித்துள்ளது.

    தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) - ரூ.23.64 லட்சம் கோடியாகவும் வரி வருவாய் - ரூ.1.88 லட்சம் கோடியாகவும் மொத்த வருவாய் - ரூ.2.43 லட்சம் கோடியாகவும் GSDP வளர்ச்சி - 14.16% ஆகவும் உள்ளது.

    தமிழ்நாட்டில் மாநில அரசின் கடன் கட்டுக்குள் உள்ளது. தனிநபர் GDPல் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டின் சராசரி அதிகமாக உள்ளது

    மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்துவதில் தமிழ்நாடு பின் தங்கியுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை கீழ் இயங்கும் இயக்குநரகங்களில் 28% காலிப்பணியிடங்கள் உள்ளது.

    • கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு.
    • வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு இந்தியா.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் சரிந்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்களில், நடப்பு நிதியாண்டு அதாவது ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.4 சதவீதம் குறைந்துள்ளது.

    முன்னதாக 2022-23 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.3 சதவீதமாக இருந்தது. கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8.1 சதவீதமாத இருந்தது. இந்த ஆண்டு உற்பத்தி வெகுவாக குறைந்த காரணத்தால் வளர்ச்சியும் குறைந்துள்ளது.

    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவை சந்தித்த போதிலும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது. 

    • 2022-23 நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் 6.2 சதவீதம் உள்நாட்டு மொத்த உற்பத்தி இருந்தது.
    • 2022-23 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் இருந்த நிலையில், தற்போது 2023-24 நிதியாண்டில் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டின் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் என தேசிய புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவின் ஆண்டு பொருளாதார வரள்ச்சி 8.2 சதவீதமாக உள்ளது.

    அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டின் பொருளாதார வளர்ச்சி 8.6 ஆக இருந்த நிலையில் கடைசி காலாண்டின் வளர்ச்சி .4 சதவீதம் குறைந்துள்ளது.

    2022-23 நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் 6.2 சதவீதம் உள்நாட்டு மொத்த உற்பத்தி இருந்தது. தற்போது 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் இருந்த நிலையில், தற்போது 2023-24 நிதியாண்டில் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    2023-24 நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.

    சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் 5.3 சதவீதம என்பது குறிப்பிடத்தக்கது.

    • எல்ஐசியின் சொத்து மதிப்புரூ.51,21,887 கோடியை எட்டியுள்ளது.
    • கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் எல்ஐசியின் சொத்துமதிப்பு ரூ.43,97,205 கோடியாக இருந்தது.

    எல்ஐசி நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 50 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது இலங்கை, பாகிஸ்தான், நேபாள நாடுகளின் ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

    எல்ஐசியின் சொத்துக்கள் ஆண்டுக்கு ஆண்டு (ஒய்ஒய்) 16.48% அதிகரித்து மார்ச் இறுதிக்குள் ரூ.51,21,887 கோடியை (616 மில்லியன் டாலர்) எட்டியுள்ளது. இதுவே கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் ரூ.43,97,205 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    டென்மார்க், பின்லாந்து, சிங்கப்பூர், ஹாங்ஹாங் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியை விட எல்ஐசியின் சொத்து மதிப்பு அதிகமாகும்.

    2024 நிதியாண்டில் எல்ஐசி ரூ.40,676 கோடி லாபம் ஈட்டியுள்ளது. எல்ஐசியின் மொத்த பிரீமியம் வருமானம் ரூ.4,75,070 கோடியாகும். இந்த நிதியாண்டில் பங்குபெறும் பாலிசிதாரர்களுக்கு ரூ.52,955.87 கோடியை போனஸாக எல்ஐசி நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது.

    • ஜி.டி.பி. கணக்கெடுப்பு சரியாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.
    • கணக்கெடுப்பு எப்படி நடத்தப்படுகிறது என்றே தெரியவில்லை.

    உலகளவில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா ஐந்தாவது பெரிய பொளுதார சக்தியாக விளங்குகிறது என பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது இருந்தது.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஏசியன் பெயிண்ட்ஸ் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அமித் சிங்கிள் நாட்டின் ஜி.டி.பி. (GDP) கணக்கெடுப்பில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு துறைகளில் ஜி.டி.பி. கணக்கெடுப்பு சரியாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    "ஜி.டி.பி. கணக்கெடுப்பு எப்படி வருகிறது என்றே தெரியவில்லை. தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் ஜி.டி.பி. மற்றும் துறைவாரியான வளர்ச்சி விகிதத்தில் முரண்பாடுகள் உள்ளன. தற்போதைய நிதியாண்டில் ஜி.டி.பி. கணக்கெடுப்பு மதிப்பற்ற ஒன்றாக இருப்பதாக நீங்கள் சொல்வது சரியானது தான். நானும் இன்று அப்படியே உணர்கிறேன். உண்மையில் ஜி.டி.பி. கணக்கெடுப்பு எப்படி நடத்தப்படுகிறது என்றே தெரியவில்லை."

    "தற்போது பேசப்படும் ஜி.டி.பி. கணக்கெடுப்பு துறைவாரியாக ஒற்றுப் போகவில்லை. குறிப்பாக ஸ்டீல் மற்றும் சிமெண்ட் துறைகளில் ஜி.டி.பி. கணக்கெடுப்பில் அதிக முரண்கள் உள்ளன. ஸ்டீல், சிமென்ட் என முக்கியமான துறைகளின் உண்மையான ஜி.டி.பி. ஒட்டுமொத்த ஜி.டி.பி.யின் வளர்ச்சியில் எங்கும் ஒற்றுப்போகவில்லை," என்று தெரிவித்துள்ளார்.

    ஏசியன் பெயின்ட்ஸ் அதிகாரியின் கருத்தை மேற்கோள் காட்டிய காங்கிரஸ் கட்சி, "ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்ற தகவல் போலி ஜி.டி.பி. தரவுகள் மூலம் வெளியிடப்பட்டுள்ளதா? அனைவரும் கூறிக் கொண்டு இருந்ததை ஏசியன் பெயின்ட்ஸ் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அமித் சிங்கிள் உறுதிப்படுத்திவிட்டார்."

    "அவர் ஜி.டி.பி. கணக்கெடுப்புக்கும் துறைவாரியான வளர்ச்சிக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. ஜி.டி.பி. கணக்கெடுப்பில் மிகப்பெரிய அளவில் முரண்பாடு இருப்பதாக தெரித்துள்ளார். இந்த தகவல்களை அவர் மே 9 ஆம் தேதி நடைபெற்ற முதலீட்டாளர் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்," என்று தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.  

    • இந்திய குடும்பங்களின் நிகர நிதி சேமிப்பு வெறும் 5 சதவீதம் என்கிற அளவுக்கு குறைந்துள்ளது.
    • 2023-24-ம் நிதியாண்டில் குடும்பங்களின் செலவீனங்கள், முதலீடுகள் கணிசமாக பலவீனமடைந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனமான மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது:

    இந்திய குடும்பங்களின் கடன் மதிப்புகள் கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 40 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.

    அதேசமயம் குடும்பங்களின் நிகர நிதிச் சேமிப்புகளும் குறைந்துள்ளது.

    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிட்டால், இந்திய குடும்பங்களின் நிகர நிதி சேமிப்புகள் வெறும் 5 சதவீதம் என்கிற அளவுக்கு குறைந்துள்ளது.

    2023-24-ம் நிதியாண்டில் குடும்பங்களின் செலவீனங்கள் மற்றும் முதலீடுகள் என இரண்டும் கணிசமாக பலவீனமடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மூன்றாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
    • இது இந்திய பொருளாதாரத்தின் வலிமையையும், திறனையும் காட்டுகிறது என்றார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2-வது காலாண்டில் 7.6 சதவீத வளர்ச்சி கண்டிருந்தது. 2023-24 நிதியாண்டின் 3-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

    இது இந்தியப் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்ச்சியை காட்டுகிறது. கட்டுமானத்துறை, உற்பத்தித் துறையில் கண்டுள்ள வளர்ச்சி விகிதங்களே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில், 2023-24 மூன்றாம் காலாண்டில் பதிவாகியுள்ள 8.4 சதவீத ஜிடிபி வளர்ச்சி என்பது இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையையும் அதன் திறனையும் காட்டுகிறது. 140 கோடி இந்தியர்கள் சிறந்த வாழ்க்கை வாழவும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கவும் உதவும் என பதிவிட்டுள்ளார்.

    • ஜப்பானிய மக்கள் தொகை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது
    • ஜப்பானில் அனைத்து துறைகளிலும் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது

    கிழக்கு ஆசியாவில் வடமேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடு, ஜப்பான்.

    உலக பொருளாதாரத்தில், உள்நாட்டு மொத்த உற்பத்தி (Gross Domestic Product) அடிப்படையில், ஜப்பான், வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ஆகிய நாடுகளுக்கு பிறகு 3-ஆம் இடத்தில் இருந்து வந்தது.

    ஆனால், கடந்த சில வருடங்களாக பல சிக்கல்களால் ஜப்பானின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது.

    தற்போது, ஜப்பானிலிருந்து வெளிவந்திருக்கும் அதிகாரபூர்வ தகவல்களின்படி, ஜப்பானிய பொருளாதாரம், கடந்த ஆண்டை விட 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இருந்தும், இதுவரை தக்க வைத்திருந்த 3-ஆம் இடத்திலிருந்து நகர்ந்து, 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    இதன் மூலம், ஜெர்மனி, உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது.

    அதிகாரபூர்வ தகவல்களின் அடிப்படையில், அமெரிக்க டாலர் மதிப்பில் 2023க்கான ஜப்பானிய ஜிடிபி, $4.2 டிரில்லியன் எனும் அளவில் உள்ளது. $4.5 டிரில்லியன் எனும் மதிப்பில் ஜெர்மனி 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    ஒரு தசாப்தத்திற்கு முன் 2-வது இடத்தை சீனாவிடம் பறி கொடுத்தது ஜப்பான் என்பது குறிப்பிடத்தக்கது.

    2022 மற்றும் 2023 ஆண்டுகளில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பானிய "யென்" (Yen) கரன்சியின் மதிப்பு முறையே 18 சதவீதம் மற்றும் 7 சதவீதம் என சரிந்தது.

    ஜப்பானின் மத்திய ரிசர்வ் வங்கியான பேங்க் ஆஃப் ஜப்பான் (Bank of Japan), வட்டி விகிதத்தை பூஜ்ஜியத்திற்கும் குறைவாகவே வைத்துள்ளதால், கரன்சியின் மதிப்பு பெரிதும் குறைந்தது.


    மேலும், ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாட்டு பொருளாதாரமும் ஏற்றுமதியை சார்ந்தவை.

    "சூரியன் முதலில் உதிக்கும் பூமி" (Land of Rising Sun) என அழைக்கப்படும் ஜப்பானில், அண்மைக்காலமாக, மக்கள் தொகை எண்ணிக்கை குறைவதாலும், வயதானவர்கள் அதிகரிப்பதாலும், தம்பதியர் குழந்தைகளை பெற்று கொள்ள விரும்பாததாலும், அனைத்து துறைகளிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் உள்நாட்டு உற்பத்தி பெரிதும் குறைந்துள்ளது.

    இந்த சூழ்நிலையில், அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கையாலும், வளர்ச்சிக்கான வாய்ப்புகளாலும், இந்தியா, இந்த தசாப்தத்திற்குள் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து 3-ஆம் இடத்தை பிடிக்கும் என பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    • இந்தியாவின் வளர்ச்சி 2024-ல் 6.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2023 இல் கணிக்கப்பட்ட 6.3 சதவீதத்தை விட சற்று குறைவாகும்.
    • வலுவான உள்நாட்டு தேவையுடன் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும்.

    2023-ம் ஆண்டில் உலகளாவிய சவால்களை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டு, உலகின் அதிவேக வளர்ச்சி விகிதத்துடன் பொருளாதாரமாகத் தொடர்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் வளர்ச்சி 2024-ல் 6.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2023 இல் கணிக்கப்பட்ட 6.3 சதவீதத்தை விட சற்று குறைவாகும். ஐ.நா. அறிக்கையின்படி, வலுவான உள்நாட்டு தேவையுடன் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்று இந்த ஆண்டு வளர்ச்சியைத் தொடரும்.

    பலவீனமான சொத்துச் சந்தையிலிருந்து சீனா சவால்களை எதிர்கொள்கிறது. ஆனால் தனியார் முதலீட்டின் பற்றாக்குறை அரசாங்கம் தலைமையிலான உள்கட்டமைப்பு திட்டங்களால் ஓரளவு ஈடுசெய்யப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, அரசாங்க உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் 2023-ல் இந்தியாவின் வலுவான முதலீட்டு செயல்திறனுக்கு சக்தி அளித்தன.

    இந்தியாவைத் தவிர, உலகின் அனைத்து முக்கியப் பொருளாதாரங்களும் 2023-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உற்பத்தி கொள்முதல் நிர்வாக குறியீட்டில் வீழ்ச்சியைக் கண்டன.

    தொழில்மயமான நாடுகளுடன் ஒப்பிடுகையில், வளரும் பொருளாதாரங்களில் முதலீடு மிகவும் நெகிழ்ச்சியுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2023-ல் தெற்காசியாவில் குறிப்பாக இந்தியாவில் முதலீடு வலுவாக இருக்கிறது.

    காலநிலை மாற்றம் தொடர்பான நிகழ்வுகள் 2023-ம் ஆண்டில் இப்பகுதியில் தொடர்ந்து மோசமான தாக்கத்தை ஏற்படுத்தின. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வறட்சி கணிசமாக தீவிரமடைந்தது, இந்தியா, நேபாளம் மற்றும் வங்காளதேசத்தின் பெரும்பகுதியை பாதித்தது. அதே நேரத்தில் பாகிஸ்தானில் சராசரிக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.

    இந்தியாவில் நாற்பது ஆண்டுகளில் ஆகஸ்டு மிகவும் வறட்சியான மாதங்களில் ஒன்றாகும், இது மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முக்கியமான பிரதான பயிர்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தியது.

    2023 இல் உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் மோசமான சூழ்நிலை தவிர்க்கப்பட்டாலும், மெதுவான வளர்ச்சியின் நீடித்த காலம் இன்னும் சாத்தியமாகத் தெரிகிறது.

    பல்வேறு காரணிகளால் 2024-ல் உலகளாவிய உள்நாட்டு மொத்த உற்பத்தி 2023-ம் ஆண்டு மதிப்பீட்டை (2.7) விட 2.4 சதவீதமாக இருக்கும் எனக் கண்கீடப்பட்டுள்ளது.

    2025 ஆம் ஆண்டில் உலகளாவிய உள்நாட்டு மொத்த உற்பத்தி படிப்படியாக 2.7 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இது கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய வளர்ச்சி விகிதமான 3 சதவீதத்தை விடக் குறைவாகவே இருக்கும்.

    • 3-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • உற்பத்தி துறையின் மோசமான செயல்பாடு காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நடப்பு நிதியாண்டின் (2022-2023) அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 4.4 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.

    உற்பத்தி துறையின் மோசமான செயல்பாடு காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதை தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 11.2 சதவீதமாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என தனது சமீபத்திய கணிப்பில் தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது. இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதத்தில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய 8 முக்கிய துறைகளின் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் இது 7.8 சதவீதம் அதிகம் ஆகும். இத்தகவலை மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது

    ஜி.டி.பி எனப்படும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 8.2 சதவிகிதம் என கணக்கிடப்பட்டுள்ளது. #GDP
    புதுடெல்லி:

    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் 8.2 சதவிகிதமாக உள்ளது என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 5.59 சதவிகிதம் மட்டுமே ஜிடிபி வளர்ச்சி இருந்தது. அதன்பின் 2017 இறுதி காலாண்டில் 7.7 சதவிகிதமாக உயர்ந்த ஜி.டி.பி தற்போது 8.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

    நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற 2014-ஆம் ஆண்டு முதல் கடந்த நான்காண்டுகளில் மிகவும் அதிகமான ஜி.டி.பி வளர்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. #GDP
    ×