search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PM Modi"

    • உத்தர பிரதேசத்தில் இரட்டை என்ஜின் அரசு அல்ல, என்ஜினே இல்லாத அரசாகும்.
    • அதானி விவகாரமானது தனிப்பட்ட பிரச்சனை இல்லை என்றார்.

    லக்னோ:

    சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியிடம், அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து அதிபர் டிரம்புடன் விவாதிப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது பதிலளித்த பிரதமர் மோடி, தனிப்பட்ட பிரச்சனைகளை இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.

    இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக உத்தரப் பிரதேசம் வந்துள்ளார். லால்கஞ்சில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

    அமெரிக்காவில் அதானி குறித்த கேள்விக்கு அது தனிப்பட்ட பிரச்சனை என்றும், இரண்டு தலைவர்கள் சந்திக்கும்போது இதுபோன்ற பிரச்சனைகள் விவாதிக்கப்படுவதில்லை என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.

    நரேந்திர மோடிஜி, இது தனிப்பட்ட விஷயம் இல்லை. இது நாட்டின் விஷயமாகும்.

    உத்தர பிரதேச அரசானது வேலையின்மை மற்றும் பணவீக்கத்தை நிவர்த்தி செய்வதற்கு தவறிவிட்டது. மத்திய அரசு தனியார் மயமாக்கலை நாடுகின்றது.

    உத்தர பிரதேசத்தில் இரட்டை என்ஜின் அரசு அல்ல, என்ஜினே இல்லாத அரசாகும் என தெரிவித்தார்.

    • பொருத்தமான பதிலடியை கொடுத்ததாக அவர் கூறினார்.
    • அனைத்து மொழிகளையும் வளப்படுத்துவது நம் சமூகப் பொறுப்பு.

    இந்திய மொழிகளுக்கு இடையில் எப்போதும் பகைமை இருந்தது இல்லை. ஒவ்வொன்றும் மற்றொன்றை வளப்படுத்தியுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். 98வது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தொடக்க விழாவில் பேசிய மோடி இவ்வாறு தெரிவித்தார்.

    மொழிகளை அடிப்படையாகக் கொண்டு பிளவுகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, இந்தியாவின் மொழியியல் பாரம்பரியம் பொருத்தமான பதிலடியை கொடுத்ததாக அவர் கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், "இந்திய மொழிகளுக்கு இடையே ஒருபோதும் பகைமை இருந்ததில்லை. மொழிகள் எப்போதும் ஒன்றை ஒன்று வளப்படுத்தியுள்ளன. இந்த தவறான கருத்துக்களில் இருந்து நம்மை தூர விலக்கி, அனைத்து மொழிகளையும் அரவணைத்து வளப்படுத்துவது நம் சமூகப் பொறுப்பு."

    "இந்தியா உலகின் மிகப்பெரிய மொழியியல் பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது என்பது இதற்கு சான்றாகும். இந்த மொழியியல் பன்முகத்தன்மை நமது ஒற்றுமையின் மிகவும் அடிப்படையான ஒன்றாகும்," என்று மோடி கூறினார்.

    இந்த விழாவில் என்.சி.பி.-எஸ்.பி. தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், 98வது அகில பாரதிய மராத்தி சம்மேளனத்தின் தலைவரான எழுத்தாளர் தாரா பவால்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
    • நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு (2024) ஜூலை 30-ந்தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை, சூரல்மலை, வெள்ளரிமலை உள்ளிட்ட இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாயமாகிவிட்டனர். உயிர் பிழைத்தவர்கள் தங்களின் வீடு, உடமைகள் அனைத்தையும் இழந்தனர். அவர்களுக்கு புதிதாக வீடு கட்டிக்கொடுக்கும் நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.

    அதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வயநாடு மக்களுக்கான மறுவாழ்வு பணிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை என்றும், அதனை வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசை கேரள அரசு வலியுறுத்தியது.

    ஆனால் கேரள அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. இந்த நிலையில் பேரிடர் நிவாரணத்துக்கு ரூ.2ஆயிரம் கோடி வழங்க வேண்டும், பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லம் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக கேரள மாநில ஆளும் அரசான இடது ஜனநாயக முன்னணியின் வயநாடு மாவட்ட குழு அறிவித்துள்ளது.

    இந்த போராட்டம் வருகிற 24-ந்தேதி காலை 10 மணி முதல் மறுநாள் (25-ந்தேதி) காலை 10 மணி வரை தொடர்ந்து 24 மணி நேரம் நடத்தப்படும் என்றும், முன்னதாக கேரள இல்லத்தில் இருந்து பேரணி நடைபெறும் எனவும் கூறியிருக்கின்றனர்.

    இந்த போராட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள், தன்னார்வலர்கள், இடது ஜனநாயக முன்னணி எம்.பி.க்கள், பிற மாநில எம்.பி.க்கள், தேசிய தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • உலக நாடுகள் கூட்டமைப்பான யுனெஸ்கோ, தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது.
    • ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் அடிப்படைக் கல்வியை வலியுறுத்துகிறது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் விதமாக, சர்வதேச தாய்மொழி தினம், 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.

    நம்முடைய எண்ணம், படைப்பாற்றல் தாய்மொழி வழியாகவே நடக்கிறது. மனிதன் பேசும் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனைத்திறன் பெருகும். ஆகையால் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம்.

    உலக நாடுகள் கூட்டமைப்பான யுனெஸ்கோ, தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளது. இதன்படியே, நமது பிரதமர் நரேந்திர மோடிகொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் அடிப்படைக் கல்வியை வலியுறுத்துகிறது.

    இன்றைய டிஜிட்டல் உலகில், மொழிகளை இணைப்பதும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பை உருவாக்குவதும் இன்றியமையாதது. நம் தாய்மொழியாம் தமிழை அடிப்படையாகக் கொண்டு, பல மொழிகள் கற்போம். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம் என்று கூறியுள்ளார். 



    • டெல்லி முதல் மந்திரி பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பவன் கல்யாண் பங்கேற்றனர்.
    • அப்போது, நீங்கள் இமயமலை செல்ல திட்டமிட்டுள்ளீர்களா என பிரதமர் கேள்வி எழுப்பினார்.

    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. புதிய முதல் மந்திரியாக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டார். டெல்லியின் 4-வது பெண் முதல் மந்திரி குப்தா ஆவார்.

    தலைநகர் டெல்லியில் முதல் மந்திரி ரேகா குப்தாவின் பதவியேற்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினரை பிரதமர் மோடி வரவேற்றார்.

    மகாராஷ்டிரா துணை முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, ஆந்திராவின் துணை முதல் மந்திரி பவன் கல்யாண் ஆகியோருடன் பிரதமர் மோடி உரையாடினார்.

    இந்நிலையில், ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண், பிரதமர் மோடி இடையிலான உரையாடல் கவனத்தை ஈர்த்தது.

    இதுதொடர்பாக பவன் கல்யாண் கூறுகையில், பிரதமர் எப்போதும் என்னுடன் நகைச்சுவையாகப் பேசுவார். அவர் என் உடையைப் பார்த்து, நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இமயமலைக்குச் செல்கிறேனா என கேட்டார். அதற்கு பிரதமரிடம், தான் இன்னும் எங்கும் செல்லவில்லை. இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் உள்ளன. இமயமலை காத்திருக்க முடியும் என நகைச்சுவையாகக் கூறினார்

    • டெல்லி முதல்வராக ரேகா குப்தா இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
    • டெல்லி பெண் முதல்வராக பதவி ஏற்ற 4-வது நபர் இவர் ஆவார்.

    டெல்லி மாநில முதல்வராக ரேகா குப்தா இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் பர்வேஷ் சாகிப் சிங் வர்மா, கபில் மிஷ்ரா, ரவீந்தர் இந்திரஜ் சிங், மன்ஜிந்தர் சிங் சிர்சா, பங்கஜ் குமார் சிங், ஆஷிஷ் சூட் ஆகிய 6 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். துணைநிலை ஆளுநர் சக்சேனா இவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    ரேகா குப்தா பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, ஆந்திர பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் டெல்லி மக்கள் வளர்ச்சிக்காக ரேகா குப்தா முழு வீச்சில் பாடுபடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என பிதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-

    ரேகா குப்தா அடிமட்ட பொறுப்புகளில் இருந்து வளர்ந்து வந்தவர். கல்லூரி அரசியல், மாநில அமைப்பு, மாநகராட்சி நிர்வாகம் போன்ற பதவிகள் வகித்த நிலையில், தற்போது எம்எல்ஏ- ஆகி முதல்வராகியுள்ளார்.

    டெல்லி வளர்ச்சிக்காக முழு வீச்சில் பாடுபடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி இனிமேல் தமிழ்நாட்டிக்கரு வந்தால் Get Out Modi என்று சொல்வார்கள்" என்று உதயநிதி தெரிவித்தார்.
    • "GET OUT MODI என்று சொல்ல முடியுமா என்று உதயநிதிக்கு அண்ணாமலை சவால் விட்டிருந்தார்.

    சில நாட்களுக்கு முன்பு பேசிய துணை முதல்வர் உதயநிதி, "முன்பெல்லாம் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் Go Back Modi என்று தான் சொல்வார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு நிதி தராத பிரதமர் மோடி இனிமேல் இங்கு வந்தால் Get Out Modi என்று சொல்வார்கள்" என்று தெரிவித்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கரூரில் பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "GET OUT MODI என்று சொல்ல முடியுமா என்று உதயநிதிக்கு சவால் விட்டிருந்தார்.

    இந்நிலையில், எக்ஸ் வலைதளத்தில் #GetOutModi என்ற ஹேஸ்டேக் தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது. பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி திமுகவினர் #GetOutModi என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    #GetOutModi என்ற ஹேஸ்டேக் தற்போது இந்திய அளவில் முதல் இடத்திலும் உலக அளவில் 2 ஆவது இடத்திலும் ட்ரெண்டாகி வருகிறது.

    • பொருளாதார விவகாரத்தில் அமெரிக்க நம்மை மிகவும் காயப்படுத்தியுள்ளது.
    • அவர்கள் வலுக்கட்டாயமாக நஷ்டத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை நம் மீது திணிக்கிறார்கள்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி ஏற்றபின், வரி விதிப்பை அதிகப்படுத்தியுள்ளார். அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்தார். குறிப்பாக மெக்சிகோ, கனடா, சீனா போன்ற நாடுகளுக்கு எதிராக இந்த வரிவதிப்பை அமல்படுத்தினார்.

    இதற்கிடையே இந்திய பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்கா சென்ற அவர் டொனால்டு டிரம்பை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு சற்று முன்னதாக பரஸ்பர விரி விதிப்பு முறையை அறிவித்தார்.

    பரஸ்பர வரி என்பது அமெரிக்க உற்பத்தி பொருட்களை ஒரு நாடு இறக்குமதி செய்தால் அதற்கு வரி விதிக்கப்படும். அதேபோல் அந்த நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி வதிக்கப்படும்.

    அந்த வகையில் இந்தியா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி வதிக்கிறது. அதேபோல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

    இந்த விவகாரத்தில் தன்னுடன் யாரும் விவாதம் செய்ய முடியாது என்பதை வெளிப்படையாக தெரிவித்தார். பிரதமர் மோடி உடனான பேச்சுவார்த்தையின்போது இதை உறுதியாக தெரிவித்தாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    மேலும், டிரம்ப் உடனான பேச்சுவார்த்தையின்போது நாடு கடத்தப்படும் இந்தியர்கள் விலங்கிட்டு அனுப்பி வைப்பது தொடர்பாக மோடி கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மோடி தனது எதிர்ப்பு தெரிவிப்பதில் தோல்வியடைந்து விட்டார் என கார்கே குற்ற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக கார்கே கூறியதாவது:-

    பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போதிலும், அமெரிக்க இந்தியாவுக்கு நாடு கடத்தியவர்களை கையில் விலங்கிட்டுதான் அனுப்பி வைத்துள்ளது. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்த இழிவுப்படுத்தும் விவகாரத்தில் முறையான எதிர்ப்பை அமெரிக்காவுக்கு தெரிவிப்பதில் நமது அரசு தோல்வியடைந்துவிட்டது.

    பொருளாதார விவகாரத்தில் அமெரிக்க நம்மை மிகவும் காயப்படுத்தியுள்ளது. நமது மீது பரஸ்பர விதியை சுமத்தியுள்ளது. ஆனால், இதற்கு பிரதமர் மோடி எதிர்ப்புக்கூட தெரிவிக்கவில்லை. அவர்கள் வலுக்கட்டாயமாக நஷ்டத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை நம் மீது திணிக்கிறார்கள். அதை நம் அரசாங்கம் அமைதியாக ஏற்றுக்கொண்டு வருகிறது. இதன்மூலம் இந்தியா மற்றும் இந்தியா மக்களை இழிவுப்படுத்துவது தெளிவாகிறது.

    இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

    பரஸ்பர வரி விதிப்பால் இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என பொருளாதார வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    • மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர் சத்ரபதி சிவாஜி.
    • சத்ரபதி சிவாஜியின் தைரியம் மற்றும் நீதியின் மதிப்புகள் தலைமுறைகளை ஊக்கப்படுத்தியது.

    முகலாயர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் சவாலாக திகழ்ந்த மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் ஆட்சிகாலம் தென்னிந்திய வரலாற்றின் பொற்காலம் என கருதப்படுகிறது.

    இவரது ஆட்சிக் காலத்தில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட கோட்டைகளைக் கட்டினார். அரசியல் நடவடிக்கையில் மட்டுமல்லாமல், சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும், வலுவான படை அமைப்பினையும் கொண்டு இவர் சிறந்த ஆட்சியாளராகவும் விளங்கினார்.

    மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர் சத்ரபதி சிவாஜி. இத்தகைய சிறப்புகளை பெற்ற மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சத்ரபதி சிவாஜி மகாராஜின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

    அவரது வீரம் மற்றும் தொலைநோக்கு தலைமை சுயராஜ்ஜியத்திற்கு அடித்தளம் அமைத்தது, தைரியம் மற்றும் நீதியின் மதிப்புகள் தலைமுறைகளை ஊக்கப்படுத்தியது.

    வலுவான, தன்னம்பிக்கை மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க அவர் நம்மை ஊக்குவிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

    • உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
    • இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும்?

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சட்டவிரோத குடியேற்றம், வரி விதிப்பு உள்ளிட்டவற்றில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இதற்கிடையே இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா வழங்கி வந்த 21 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் துறை அறிவித்தது. இந்த நிலையில் இந்தியாவுக்கு நிதி உதவியை நிறுத்தியது குறித்து டிரம்ப் கூறியதாவது:-

    இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும்? அவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது. வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிக வரி விகிதங்களைக் கொண்ட இந்தியாவிற்கு அத்தகைய நிதி உதவி தேவையில்லை.

    எங்களைப் பொறுத்த வரை உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அவர்களின் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால் நாங்கள் அங்கு தொழில் செய்ய முடியாது. இந்தியா மற்றும் பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

    இந்தியர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் அவர்களுக்கு ஏன் நாம் பணம் கொடுக்க வேண்டும்? அங்கு வாக்குப்பதிவுக்கு 21 மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இதற்கு அமெரிக்கர்களின் வரி பணத்தை செலவழிப்பதை விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.


    சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே ஆட்டோ மொபைல், செமிகண்டக்டர், மருந்து இறக்குமதிகளுக்கு சுமார் 25 சதவீத வரி விதிக்க வாய்ப்புள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    • வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து 1.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
    • டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் வர்த்தக பற்றாக்குறை வான் அளவிற்கு உயர்ந்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் மோடி தலைமையிலான அரசை கடுமையான வகையில் விமர்சனம் செய்துள்ளார். வர்த்தக கொள்கை தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தில் கூறியிருப்பதாவது-

    மோடி அரசின் நிதியமைச்சர் நம்முடைய பொருளாதாரம் சிறந்த வருமானத்தை தருவதாக சொல்கிறார். இதைவிட முரண்பட்ட விசயம் ஏதும் இருக்க முடியாது.

    இந்திய பங்குச் சந்தைகளில் இந்த ஆண்டில் தற்போது வரை 45 லட்சம் கோடி ரூபாய் சிறிய முதலீட்டாளர்களின் செல்வங்கள் அழிக்கப்பட்டுள்ளது. நிஃப்டி 50-யில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களின் காலாண்டு வருமானம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.

    வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து 1.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதில் இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து தற்போது வரை சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அடங்கும். இது சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களின் பணத்தை அழிக்க வழிவகுத்தது.

    டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் வர்த்தக பற்றாக்குறை வான் அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இறக்குமதி 62.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. மோடியின் வர்த்தக கொள்கை இந்தியாவிற்கு பேரழிவை ஏற்படுத்துகிறது.

    இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

    • அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
    • பிரதமர் மோடி வரவேற்று அழைத்து சென்றார்.

    கத்தார் நாட்டின் அமீர் (தலைவர்) ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை விமானம் மூலம் இந்தியா வந்தார். அவரை பிரதமர் மோடி விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார்.

    இது மிகவும் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கத்தார் அமீர், இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். இதற்காக குடியரசு தலைவர் மாளிகைக்கு வந்த அமீரை திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி வரவேற்றனர்.

    குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்துள்ள நிலையில், கத்தார் அமீர் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். பிரதமர் மோடி அழைப்பின் பேரில் இந்தியா வந்துள்ள கத்தார் அமீர் முன்னதாக 2015-ம் ஆண்டு மார்ச் மாத வாக்கில் இந்தியா வந்திருந்தார்.


    ×