என் மலர்
நீங்கள் தேடியது "PM Modi"
- இந்நிகழ்ச்சியில் மோடி பங்கேற்க மாட்டார் என சிலர் கூறினர்.
- நிகழ்வு நிச்சயமாக நடக்கும் என்று நான் நம்பிக்கையுடன் இருந்தேன்.
பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி என்று நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சர்வதேச ஒலி, ஒளி கருத்தரங்கு நடைபெற்றது.
இதில், பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசினார்.
அப்போது அவர்," பஹல்காம் தாக்குதலால் பொழுதுபோக்கு நிகழ்வான இதில் மோடி பங்கேற்க மாட்டார் என சிலர் கூறினர்.
ஆனால், இந்த நிகழ்வு நிச்சயமாக நடக்கும் என்று நான் நம்பிக்கையுடன் இருந்தேன்.
ஜம்மு- காஷ்மீரில் அமைதியையும், நாட்டிற்கு பெருமையையும் பிரதமர் நரேந்திர மோடி நிச்சயம் கொண்டு வருவார்.
ஏனென்றால், பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேவ்ஸ் என்பது ஒவ்வொரு கலைஞருக்கும் படைப்பாளிக்கும் சொந்தமான ஒரு உலகளாவிய தளமாகும்.
- வேவ்ஸ் உச்சி மாநாடு உலகளாவிய கவனத்தை ஈர்க்கிறது.
முதலாவது உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு மும்பையில் இன்று நடந்தது. பிரதமர் மோடி வேவ்ஸ் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள், புதுமையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒரே குடையின் கீழ் கூடியுள்ளனர். திறமை மற்றும் படைப்பாற்றல் கொண்ட உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பிற்கு நாங்கள் அடித்தளம் அமைத்து வருகிறோம்.
வேவ்ஸ் என்பது ஒவ்வொரு கலைஞருக்கும் படைப்பாளிக்கும் சொந்தமான ஒரு உலகளாவிய தளமாகும்.
வேவ்ஸ் உச்சி மாநாடு உலகளாவிய கவனத்தை ஈர்க்கிறது. இந்தியா கோடிக்கணக்கான மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதோடு பில்லியன் கணக்கான கதைகளின் பூமியாகவும் உள்ளது.
இந்தியாவை பிரபலப்படுத்துவதில் இந்திய சினிமா வெற்றிப்பெற்றுள்ளது. இந்தியாவில் உருவாக்கு, உலகத்துக்காக உருவாக்கு என்பதற்கு இதுவே சரியான நேரம்.
இவ்வாறு மோடி பேசினார்.
இந்திய சினிமாவில் 5 பிரபரலங்களின் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். குருதத், பி.பானுமதி, ராஜ் கோஷ்லா, ரித்விக் கடக், சலீம் சவுத்ரி ஆகியோர்களின் தபால் தலை வெளியிடப்பட்டது.
இந்த மாநாட்டில் மத்திய மந்திரி எல்.முருகன், மகாராஷ்டிரா முதல்-மந்திரி பட்னாவிஸ், நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், அமீர்கான், மோகன்லால், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- சாதிவாரி கணக்கெடுப்புக்கு உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள், நன்றி.
- சாதிவாரி கணக்கெடுப்புக்கு தி.மு.க. அரசு சொந்தம் கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு பா.ம.க.விற்கு கிடைத்த வெற்றி.
* சுதந்திர இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட்ட முதல் பிரதமர் மோடிதான்.
* சாதிவாரி கணக்கெடுப்புக்கு உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள், நன்றி.
* மத்திய அரசு உத்தரவிட்டாலும் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசும் நடத்த வேண்டும்.
* சாதிவாரி கணக்கெடுப்புக்கு தி.மு.க. அரசு சொந்தம் கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
* சாதிவாரி கணக்கெடுப்பை ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் செய்யவில்லை.
* தி.மு.க.வுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?
* மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும், சாதிவாரி கணக்கெடுப்புக்கும் வித்தியாசம் உள்ளது என்றார்.
பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு, 2025-2026-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.
அதாவது குவிண்டாலுக்கு ரூ.355 வீதம் 10.25 சதவீத அடிப்படை மீட்பு விகிதத்துக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 10.25 சதவீதத்துக்கு அதிகமாக உள்ள ஒவ்வொரு 0.1 சதவீதத்துக்கும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3.46 பிரீமியம் தொகை கிடைக்கும். குறைவாக உள்ள மீட்பில் ஒவ்வொரு 0.1 சதவீதத்துக்கும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3.46 பிரீமியம் தொகை குறைக்கப்படும்.
கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் 9.5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு எந்தவித விலக்கும் அளிக்கப்படுவதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அத்தகைய விவசாயிகளுக்கு வரும் 2025-2026-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்தில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.329.05 கிடைக்கும்.
- மே 9 அன்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வெற்றி தினம் அணிவகுப்பு நடைபெற உள்ளது.
- இந்த கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க ரஷியா அழைப்பு விடுத்திருந்தது.
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியை சோவியத் யூனியன் வென்றதன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், மே 9 அன்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வெற்றி தினம் அணிவகுப்பு நடைபெற உள்ளது.
மே 9, 1945 அன்று ஜெர்மனி, ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியனிடம் சரணடைந்ததை நினைவுகூரும் வகையிலான இந்த வெற்றி தின அணிவகுப்பு, ரஷியாவின் மிக முக்கியமான வருடாந்திர கொண்டாட்டங்களில் ஒன்றாகும்.
இந்த கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க ரஷியா அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், ரஷியாவில் நடைபெறும் 2 ஆம் உலகப்போர் வெற்றிவிழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம் இந்த விலவ்வில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
- இந்தியா நடத்தப்போகும் தாக்குதலுக்கு உலகின் பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
- சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
புதுடெல்லி:
ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த 22-ந்தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.
சுற்றுலா பயணிகளை பிணைக் கைதிகள் போல பிடித்துக் கொண்டு அவர்களது மாநிலம், மதம் ஆகியவற்றை கேட்டறிந்து மிக கொடூரமாக 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
பஹல்காமில் நடந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தான் ராணுவத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. தீவிரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இந்த தகவல்கள் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் நேரடியாக சம்பந்தப்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை அதிரடியாக வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு வெளியிட்டது. அதன்படி இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அடுத்தக்கட்டமாக கடந்த 60 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்து இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்துநதி நீரை நிறுத்துவதன் மூலம் பாகிஸ்தானுக்கு அழுத்தம் தரும் செயல்பாடுகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைகள் மட்டுமின்றி தூதரக அளவிலும் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இவற்றின் தொடர்ச்சியாக அடுத்த கட்டமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்க இந்தியா குறி வைத்துள்ளது.
அப்போது நடத்தப்படும் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்று பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். இதனால் பாகிஸ்தான் தரப்பில் கடும் பதட்டமும், பீதியும் நிலவுகிறது.
இந்த நிலையில் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ் நாத்சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதி, கடற்படை தலைமை தளபதி தினேஷ் திரிபாதி, விமானப் படை தலைமை தளபதி அமர் பிரீத்சிங் ஆகியோர் பங்கேற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "பஹல்காம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி தருவது தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள பாதுகாப்புப் படைகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது. தாக்குதல் இலக்குகள், நேரம் மற்றும் தாக்குதல் நடத்தும் முறை குறித்து பாதுகாப்புப் படையினரே முடிவுகளை எடுக்கலாம். நம் நாட்டு பாதுகாப்பு படைகள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்றார்.
பிரதமர் மோடியின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து பஹல்காம் தாக்குதலுக்கு எந்த நேரத்திலும் இந்தியா கடுமையான பதிலடி தர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று இரவே இந்திய போர் விமானங்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உஷார்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
எந்த எதிர்ப்பு எந்த திசையில் இருந்து வந்தாலும் அவற்றை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்று முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வடமண்டலத்தில் இந்திய போர் விமானங்கள் இன்று காலை முழு வீச்சில் தயார்ப்படுத்தப்பட்டன.
இன்று பிரதமர் மோடி 4-வது முறையாக அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். மத்திய மந்திரி சபை கூட்டம், பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழு கூட்டம் மற்றும் அரசியல் விவகார அமைச்சரவை குழு கூட்டம் ஆகியவை அடுத்தடுத்து நடந்தன.
இந்த கூட்டங்களில் பங்கேற்ற பிரதமர் மோடி விரிவான விவாதம் நடத்தி உள்ளார். இதில் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக இறுதிக்கட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிய வந்து உள்ளது.
மத்திய அமைச்சரவையின் கூட்டத்தை தொடர்ந்து இன்று இரவு எந்த நேரத்திலும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியா தரப்பில் தீவிரவாதிகள் மீது பலமுனை தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்தியா நடத்தப்போகும் தாக்குதலுக்கு உலகின் பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. என்றாலும் இந்தியாவின் தாக்குதல் மிக கடுமையாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய ராணுவம் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் அருகே நெருங்கி வருவதால் பாகிஸ்தான் மந்திரிகள் அலற தொடங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவஜா சமீபத்தில் பேசுகையில், "இந்தியா தாக்குதல் நடத்தினால் மிகப்பெரிய போர் வெடிக்கும்" என்றார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் செய்தித் துறை மந்திரி அதுல்லா சமூக வலைதளத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்தியா அடுத்த 24 மணி முதல் 36 மணி நேரத்துக்குள் பாகிஸ்தானை தாக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்காக அவர்கள் தயாராகி விட்டதை உணர முடிகிறது. இந்த போரால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் இந்தியாதான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
தீவிரவாதத்தை நாங்கள் தூண்டி விடவில்லை. உண்மையில் தீவிரவாதத்தால் நாங்கள்தான் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். எங்கள் வேதனையை புரிந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு பாகிஸ்தான் மந்திரி அதுல்லா சமூக வலைதளத்தில் புலம்பி உள்ளார். இதற்கிடையே பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் மிகப்பெரிய பதட்டம் நீடித்து வருகிறது.
- அட்சய திருதியை தினம் அனைவர் வாழ்விலும் வெற்றி, செழிப்பு, மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்.
- இந்த தினம் வளர்ந்த இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு புதிய பலத்தை அளிக்கட்டும்.
அட்சய திருதியை தினத்தை ஒட்டி பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
அட்சய திருதியை தினம் அனைவர் வாழ்விலும் வெற்றி, செழிப்பு, மகிழ்ச்சியை கொண்டு வரட்டும். இந்த தினம் வளர்ந்த இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு புதிய பலத்தை அளிக்கட்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- விழாவிற்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பிரதமர் வருகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரபிக்கடல் ஓரத்தில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது விழிஞ்சம் துறைமுகம். இந்த துறைமுக பணிகள் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளன.
விழிஞ்சம் துறைமுக பகுதி பன்னாட்டு கடற்பாதையில் இருந்து 10 கடல்மைல் தொலைவில் இருக்கிறது. மேலும் இந்த துறைமுகத்தில் இயற்கையாகவே 24 மீட்டர் ஆழம் கிடைக்கிறது. இதனால் இங்கு மிகப்பெரிய சரக்கு கப்பல்களையும் எளிதாக நிறுத்த முடியும்.
இந்த துறைமுகத்தின் தற்போதைய கொள்ளளவு 10 லட்சம் கொள்கலன்களாக இருக்கிறது. 2028-ம் ஆண்டு துறைமுக பணி முழுவதுமாக முடிந்தபிறகு விழிஞ்சம் துறைமுகத்தின் திறன் ஆண்டுக்கு 45 லட்சம் கொள்கலன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.
முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட பிறகு உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாக விழிஞ்சம் துறைமுகம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. கேரள மாநிலத்தின் அடையாளமாக மாற இருக்கும் விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ளது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதற்காக பிரதமர் மோடி வருகிற 1-ந்தேதி கேரளா வருகிறார். அன்று இரவு ராஜ்பவனில் தங்கும் அவர், மறுநாள் காலை 11 மணிக்கு விமானப்படையின் சிறப்பு ஹெலிகாப்டரில் விழிஞ்சம் துறைமுகத்துக்கு செல்கிறார்.
துறைமுகத்தை திறந்து வைத்த பிறகு பிரதமர் மோடி, துறைமுகத்தின் பிரதான வாயிலில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் உரையாற்றுகிறார். இந்த விழாவிற்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் துறைமுக பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.
பிரதமர் வருகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் நேற்று கேரளா வந்தது. அவர்கள் விழிஞ்சம் துறைமுகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
மர்மநபரின் வெடிகுண்டு மிரட்டலால் கடந்த சில நாட்களாகவே கேரள மாநிலத்தில் கடும் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி வருவதால் மாநிலம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
- பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து உள்ளார்.
- மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசி உள்ளார்.
தமிழ்நாடு பா.ஜ.க. கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து உள்ளார்.
இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு அரசியல் சூழல், பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி, கட்சி வளர்ச்சிப்பணி, சட்டசபை தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசி உள்ளார்.
- எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை இந்திய உளவுப்படை கண்காணித்த படி உள்ளது.
- பாகிஸ்தான் மீது சில பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
காஷ்மீரில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். இதில் 27 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத இயக்கம்தான் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உளவுத் துறையின் தூண்டுதலின்பேரில் இந்த தாக்குதல் நடந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகிறது. எந்த நேரத்திலும் இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கடும் பதற்றம் நிலவி வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று இரவு பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
இதற்கிடையே எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை இந்திய உளவுப்படை கண்காணித்த படி உள்ளது. பயங்கரவாதிகள் காஷ்மீரில் இருக்கும் தங்களது சிலிப்பர் செல் ஆதரவாளர்களுடன் பேசி வருவதையும் உளவுத் துறையினர் இடைமறித்து கேட்டு தகவல்களை சேகரித்து வருகிறார்கள். இதனால் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் காஷ்மீர் பாதுகாப்பு நடவடிக்கை, பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடி குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாகிஸ்தான் மீது சில பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
- மோடி பணவீக்கத்தையும் வேலையின்மையையும் கொடுத்தார். இவர்கள் நாட்டை பலவீனப்படுத்துகிறார்கள்.
- நாங்கள் ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறோம். அதை சிதைப்பதை பற்றி அவர்கள் பேசுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-
* மோடி பணவீக்கத்தையும் வேலையின்மையையும் கொடுத்தார். இவர்கள் நாட்டை பலவீனப்படுத்துகிறார்கள். பிரதமர் மோடியின் 56 அங்குல மார்பு சுருங்கிவிட்டது
* நீங்கள் அனைவரையும் பலவீனப்படுத்த முயற்சிக்கிறீர்கள், ஆனால் மக்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்வதன் மூலம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்த முடியாது.
* நாங்கள் ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறோம். அதை சிதைப்பதை பற்றி அவர்கள் பேசுகிறார்கள்.
* இந்த நாட்டில், அரசியலமைப்பு உயர்ந்தது. நமது ஜனநாயகம் அரசியலமைப்பின் கீழ் இயங்குகிறது
* காங்கிரஸ் வளரும் போதெல்லாம், அதை அடக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் அடக்கப்பட வேண்டியவர்கள் அல்ல.
* நாடுதான் உயர்ந்தது, பின்னர்தான் கட்சிகள், மதங்கள். அனைவரும் நாட்டிற்காக ஒன்றுபட வேண்டும்.
* பஹல்காம் தாக்குதல் தொடர்பான நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டபோதும், பீகாரில் பிரதமர் உரையாற்றியது நாட்டின் துரதிர்ஷ்டம்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
- காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
- பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசி ஆதரவு தெரிவித்தார்.
காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இத்தாக்குதலுக்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் மற்றும் ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளன.
பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசி ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தொலைபேசியில் பேசினார். அப்போது இது போன்ற மனிதாபிமானமற்ற பயங்கரவாதச் செயல்களை திட்டவட்டமாக ஈரான் கண்டிக்கிறது என்று தெரிவித்த பெஷேஷ்கியன், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பிராந்திய ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும் இந்த துயர சம்பவங்கள் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் பொறுப்பை அதிகரிக்கின்றன. பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு நீடித்த அமைதியை உறுதிசெய்து ஒற்றுமை மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பு மூலம் பயங்கரவாதத்தின் வேர்களை அழிக்க பிராந்திய அரசுகளை கட்டாயப்படுத்துகின்றன என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் பேசியது தொடர்பாக இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் கூறும்போது, ஈரான் அதிபர், புகழ்பெற்ற இந்தியத் தலைவர்களின் மதிப்புமிக்க மரபைக் குறிப்பிடும்போது அமைதி, நட்பு மற்றும் சகவாழ்வின் தூதர்களான மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு போன்ற இந்திய தேசத்தையும் அதன் முக்கிய நபர்களையும் ஈரான் மிகவும் மதிக்கிறது என்று தெரிவித்தார்.
இந்தியாவின் அனைத்து நாடுகளுடனான உறவுகளிலும் இந்த உணர்வு நிலைத்திருக்கும் என்று ஈரான் அதிபர் நம்பிக்கை தெரிவித்தார் என்று தெரிவித்தது.
இந்தியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் உள்கட்டமைப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான நம்பிக்கையையும் பெஷேஷ்கியன் தெரிவித்தார். ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றி விவாதிக்க பிரதமர் மோடியை ஈரானுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பகல்காம் பயங்கரவாத தாக்குதலை கடுமையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார்.